சேலம், ஜன.9- அரசு போக்குவரத்து ஊழியர் களின் வேலை நிறுத்த போராட்டம் வெற்றிகரமாக துவங்கியது. 70 சதவிகித ஊழியர்கள் பேருந்து களை இயக்க மறுத்து போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். சட்டப்படி வழங்க வேண் டிய உரிமைகளை வழங்க வேண் டும். பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழி லாளர்களுக்கு சட்டப்படி வழங்க வேண்டிய பணப்பயன்களை வழங்க வேண்டும். ஊதிய உயர்வு பேச்சு வார்த்தையை உடனடியாக துவங்க வேண்டும். 94 மாத டிஏ நிலுவையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திட்ட மிட்டபடி செவ்வாயன்று வேலை நிறுத்த போராட்டத்தில், சிஐடியு, ஏடிபி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் ஆதரவுடன் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட ஜான்சன் பேட்டை, மணக்காடு, அஸ்தம் பட்டி, பள்ளப்பட்டி, எருமாபாளை யம், தாரமங்கலம், வாழப்பாடி, சங் ககிரி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், திருச்செங்கோடு, நாமக்கல் ஆகிய போக்குவரத்து பணிமனைகளில் இருந்து இரவு 12 மணி முதல் 50 சதவிகிதத்திற்கும் அதிகமான போக் குவரத்து ஊழியர்கள் பணிக்கு வர வில்லை. சேலம் மெய்யனூர் போக் வரத்து பணிமனை முன்பு அண்ணா தொழிற்சங்க பொதுச் செயலாளர் சென்னை கிருஷ்ணன், சிஐடியு பொதுச்செயலாளர் கிருஷ்ண மூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. தருமபுரி இதேபோன்று, அரசு போக்கு வரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தின் ஒருபகுதி யாக, தருமபுரி புறநகர் பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. சிஐடியு மண்டல பொதுச்செய லாளர் எஸ்.சண்முகம் தலைமை வகித்தார். சிஐடியு மாநிலச் செயலா ளர் சி.நாகராசன், மண்டல தலை வர் சி.முரளி, அண்ணா தொழிற் சங்க மண்டலசெயலாளர் எம்.பி. லட்சுமணன், பொருளாளர் முனிரத் தினம், பிடிஎப் மண்டல செயலாளர் ராஜா, ஏஐடியுசி மாநில துணைத் தலைவர் ரவி, ஓய்வுபெற்றோர் அமைப்பின் மாநிலத்துணைத் தலைவர் கே.குப்புசாமி மற்றும் நிர் வாகிகள் முருகன் அருள்மொழி ஆகியோர் பங்கேற்று உரையாற்றி னர். நாமக்கல் நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோடு பேருந்து நிலையத்தில் ஆறு அம்ச கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக ஆர்ப்பாட்டத்திற்கு போக் குவரத்து பணியாளர்கள் சம்மேள னத்தின் மாவட்ட பொதுச் செயலா ளர் மனோகரன் தலைமை ஏற்றார். இதில் திரளானோர் பங்கேற்றனர்.