உதகை, நவ.8- அரசாணை 152ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தமிழக முதல்வர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆவேச ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். மாநாகராட்சி, நகராட்சிகளில் நிரந்தர பணியிடங்களை அழித்தி டும் அரசாணை 152ஐ உடனடியாக ரத்து செய்திட வேண்டும். தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட் டத்தை சத்துணவு ஊழியர்கள் மூல மாக செயல்படுத்திட வேண்டும். அகவிலைப்படி, சரண்டர் உள்ளிட் டவற்றை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும். ஒப்பந்தம், புற ஆதார முகமை முறைகளை ரத்து செய்து காலமுறை ஊதியத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். பழைய ஓய்வூதிய திட் டத்தை அமல்படுத்த வேண்டும். புதிய மருத்துவ காப்பீடு திட்டத் திலுள்ள குளறுபடிகளை களைந்து உரிய காப்பீடு தொகையை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் ஊழி யர்களை நிரந்தரப்படுத்தி கால முறை ஊதியம் வழங்க வேண்டும். சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்கால மாக மாற்றி வழங்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு மாவட்ட தலைவர் சலீம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செயலாளர் ஆனந் தன் கோரிக்கை குறித்து விளக்கி பேசினார். இதில், வருவாய் துறை அலுவலர் சங்கம் தினேஷ், கூட்டு றவுத்துறை ஊழியர் சங்க அய்ய னார், வனத்துறை ஊழியர் சங்கம் சார்பில் ஆஸரா ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணைத்தலைவர் கந்தசாமி நன்றி கூறினார்.
தருமபுரி
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம முன்பு செவ்வாயன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் எம்.சுருளிநா தன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் கோ.பழனியம் மாள், மாவட்ட செயலாளர் ஏ.சேகர், பொருளாளர் கே.புகழேந்தி, மாவட்ட துணைத்தலைவர்கள் பி.எஸ்.இளவேனில், தீ.சண்முகம், எஸ்.குணசேகரன், சி.காவேரி, மாவட்ட இணைச்செயலாளர் ஆர். ஜெயவேல், சி.அழகிரி, நாகராணி, கார்த்திகேயன் ஆகியோர் கோரிக் கைகளை விளக்கி பேசினர்.
சேலம்
சேலம் நாட்டாமை கழக கட்டி டம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப் பாட்டத்தின் கோரிக்கைகளை விளக்கி மாநிலச் செயலாளர் அண்ணா குபேரன் சிறப்புரையாற் றினார். இதில் தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்கத்தின் மாவட்ட செயலா ளர் பு.சுரேஷ், மாவட்ட பொருளா ளர் செல்வம் உள்ளிட்ட அனைத்து சங்க நிர்வாகிகள், மாநகராட்சி பணி யாளர்கள், தூய்மை பணியாளர் கள் ஆயிரக்கணக்கானோர் பங் கேற்றனர்.
கோவை
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடை பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் எஸ்.ஜெகநாதன் தலைமை தாங்கினார். கோரிக்கைகள குறித்து மாவட்ட செயலாளர் பி.செந்தில் குமார் உரையாற்றினார். இதில், வங்கி ஊழியர் சங்க பொதுச்செய லாளர் ஆர்.மகேஸ்வரன், அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அருணகிரி நிறைவு செய்து உரையாற்றினார். முடிவில், மாவட்ட பொருளாளர் பி.நடராஜன் நன்றி கூறினார்.