districts

img

ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும்

வேல்முருகன் பேட்டி சேலம், நவ.19- தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத் துகளை மாணவர்கள் மத்தியில் விதைக்கும், ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழ்நாட்டை விட்டு வெளி யேற வேண்டும் என வேல்முருகன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார். தமிழக வாழ்வுரிமைக் கட்சி யின் நிறுவனரும், சட்டமன்ற உறுப் பினருமான வேல்முருகன் சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சி களில் பங்கேற்றார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சேலம் பெரியார் பல்கலைக்கழகத் தில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் தமிழக உயர்கல்வித்துறை அமைச் சரின் பெயரையே இல்லாமல் நோட் டீஸ் அடித்துள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது. ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டில் உயர் கல்வி படிக்கும் மாணவர்கள் மத்தி யில் பெரும் சர்ச்சைக்குரிய கருத் துக்களை பரப்பி வருகிறார். அவர் உடனடியாக தமிழ்நாட்டை விட்டு  வெளியேற வேண்டும். புலனாய் வுத்துறை, அமலாக்கத்துறை, வரு மான வரித்துறை இவை மூன்று  சூளாயுதத்தை கொண்டு எதிர்கட்சி களை பாஜக பழிவாங்குகிறது. திருவண்ணாமலையில் போராட் டம் நடத்திய ஆறு விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்டம்  ரத்து செய்யப்பட்டது போல, அருள் என்பவர் மீது போடப்பட்டுள்ள குண் டர் சட்டத்தையும் தமிழ்நாடு அரசு ரத்து செய்ய வேண்டும். அரசு மீது அவப்பெயர் ஏற்படுத்தும் வகை யில், ஒரு சில அதிகாரிகள் செயல் பட்டு வருகின்றனர். அதிகாரிகள் முறையாக தங்கள் பணியை மேற் கொள்ள வேண்டும். தனியார்  தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப் பாளராக உள்ள கமலஹாசன், தனது செயல்பாடுகளை சீரமைத்துக் கொள்ள வேண்டும். இல்லை யென்றால் தனியார் தொலைக் காட்சி நிறுவனத்தை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபடு வோம், என்றார். மேலும், மக்கள் தங்களின் நியா யமான கோரிக்கைக்காக எங்கு வேண்டுமென்றாலும் போராட லாம். அவர்களின் நியாயமான போராட்டத்தின் தன்மை அறிந்து அரசு செயல்பட வேண்டும், என் றார். இந்நிகழ்வில் கட்சியின் மேற்கு மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ், வடக்கு மாவட்டச் செயலாளர் ராஜ் குமார் உட்பட பலர் உடனிருந்த னர்.