districts

img

அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

உடுமலை, செப்.17- போக்குவரத்து தொழி லாளர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை குறைக் கக்கூடாது என வலியுறுத்தி சிஐடியு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உதிரி பாகங்கள் வழங்கா மல் வேலைப்பளுவை திணிப்பதைக் கைவிட வேண்டும். போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகையை குறைக்கக்கூடாது. தொலைதூர பணிமனைகளுக்கு தொழிலாளர்களை பணிமாறுதல் செய்யும் போக்கை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் உடுமலை போக்குவரத்து பணிமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆப்பாட்டத்திற்கு சிஐடியு துணைச் செயலாளர் எம்.ஜோதி கண்ணன் தலைமை வகித்தார். இதில், சிஐடியு மாவட்ட துணைப் பொதுச்செயலாளர் வே.விசுவநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர். சேலம் சேலம் விரைவு போக்குவரத்து பணிமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் செயலாளர் லியாகத் அலி தலைமை வகித்தார். இதில், பொருளாளர் சந்திரன், மத்திய சங்க நிர்வாகிகள் கலைச்செல்வன், முருகேசன், செல்லப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.