கோபி, டிச.18- ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 48 மாத பஞ்சபடியை உடனடியாக வழங்க வேண்டும் என அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் பேரவைக் கூட்டம், செயலாளர் கருப்புசாமி தலைமையில் நடைபெற்றது. இதில், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க தலைவர் விஆர்.மாணிக்கம், அரசு போக்குவரத்து ஊழியர் சங்க ஓய்வு பெற்ற சங்கம் சார்பில் முருகையா என பலர் கலந்து கொண் டனர். முன்னதாக கூட்டத்தில், போக்குவரத்துறையில் காலி யாக உள்ள பணியிடங்களுக்கு புதிய ஆட்களை நியமிக்க வேண்டும். ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழி லாளர்களுக்கு 48 மாத பஞ்சபடியை உடனடியாக வழங்க வேண்டும். போக்குவரத்து தொழிலாளர்கள் ஓய்வு பெறும் நாளான்றே பணப்பலன்களை வழங்கிட வேண் டும். போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தையற்கூ லியுடன் கூடிய சீருடைகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன முடிவில், அரசு போக்குவரத்து ஊழியர் சங்க கிளைத் தலைவராக பிரபாகரன், கிளைச் செயலாளராக கருப்பு சாமி, பொருளாளராக வெள்ளியங்கிரி மற்றும் துணை நிர்வா கிகள் என ஏழு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.