districts

img

புத்தகத் திருவிழா வினாடி - வினா போட்டி: அரசு பள்ளி மாணவர்கள் முதலிடம்

திருப்பூர், பிப்.4- திருப்பூர் புத்தகத் திருவிழா கலைய ரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவி லான வினாடி - வினா போட்டி, ஜூனியர்  பிரிவில் அரசு பள்ளி மாணவர்கள் முதல்  மூன்று இடத்தை பிடித்து வெற்றி பெற்ற னர். திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும்  திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து  நடத்தும் 19 வது புத்தகத் திருவிழா ஜன வரி 27 முதல் வேலன் ஹோட்டல் திடலில்  நடைபெற்று வருகிறது. இதில், ஒன்றிய அளவில் நடைபெற்ற வினாடி - வினா போட்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான  இறுதிப்போட்டி 9 ஆம் நாளான சனியன்று  நடைபெற்றது. கிட்ஸ் கிளப் பள்ளி குழும  செயலாளர் நிவேதிகா ஸ்ரீராம் தலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஆசிரி யர் செல்வகுமார் வரவேற்புரை ஆற்றி னார். தமிழ்நாடு அறிவியல் இயக்க திருப்பூர் மாவட்ட துணைத் தலைவர் பிரேமா வாழ்த்துரை வழங்கினார்.  இதைதொடர்ந்து, மாவட்ட அள வில் பல்வேறு பள்ளிகளில் ஜூனியர் மற் றும் சீனியர் பிரிவுகளில் வினாடி வினா போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 30 மாணவர்கள் இறுதிப் போட்டியில்  கலந்து கொண்டனர். மாவட்ட வினாடி வினா ஜூனியர் பிரிவில் அரசு மேல் நிலைப்பள்ளி மடத்துக்குளம் மாணவர் கள் முதலிடம் பெற்றனர். மடத்துக்கு ளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள்

இரண்டாம் இடம் பெற்ற னர். மூலனூர் ஒன்றியம் நத்த பாளையம்  பள்ளி மாணவர்கள் மூன்றாம் இடம்  பெற்றனர். சீனியர் பிரிவில் பல்லடம் யூனிவர்சல் மெட்ரிக் பள்ளி மாணவர் கள் முதலிம் பெற்றனர். திருப்பூர் கிட்ஸ்  கிளப் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் இரண்டாம் இடம் பெற்றனர். தாராபுரம் செயின்ட் அலோசியஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மூன் றாம் இடம் பெற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாண வர்களுக்கு பின்னல் புக் டிரஸ்ட் செய லாளர் ஈஸ்வரன், கிட்ஸ் கிளப் பள்ளி  குழும தாளாளர் மோகன் கார்த்திக்  மற்றும் மாவட்ட நூலக அலுவலர் மாதேஸ்வரன் ஆகியோர் சான்றிதழ் கள் மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டி னர். ஒன்றிய அளவில் வெற்றி பெற்று  மாவட்ட அளவிலான வினாடி வினா போட்டியில் கலந்து கொண்ட மாணவர் களுக்கான சான்றிதழ்களை மாவட்ட  திறனாய்வு போட்டி ஒருங்கிணைப்பா ளர் ராமமூர்த்தி வழங்கினார். ஆசிரியை  சுசிலா நிகழ்ச்சியை ஒருங்கிணைத் தார். முதுகலை பட்டதாரி ஆசிரியர் உத யகுமார் மற்றும் ஒருங்கிணைப்பாளர் கள் ஸ்ரீராம்குமார், ஈஸ்வரசாமி , முகி லன் மற்றும் சந்துரு ஆகியோர் போட் டியை சிறப்பாக நடத்தினர்.