districts

img

போதிய குடிநீரின்றி அரசுப்பள்ளி மாணவர்கள் அவதி

நாமக்கல், ஜூலை 28- கொல்லிமலை அருகே குடிநீர் குழாய் உடைப்பால், போதிய குடிநீ ரின்றி பள்ளி மாணவர்கள் அவதிக்குள் ளாகி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், கொல்லி மலை ஒன்றியம், அரியூர்நாடு ஊராட்சிக் குட்பட்ட அரியூர் சோளக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று  வருகின்றனர். அரியூர் சோளக்காடு கிரா மத்தில் 120க்கும் மேற்பட்ட குடும்பங்க ளுக்கு மேல் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதி யில் தார்ச்சாலை சீரமைப்பு செய்யும்  பொழுது குடிநீர் குழாய் பழுது ஏற்பட் டுள்ளது. இதனால் அரசுப்பள்ளியில் உள்ள நீர் தொட்டியில் குடிநீர் வராத தால் மாணவ, மாணவியர் அவதிய டைந்து வருகின்றனர். உணவு சாப்பிட கைகளை கூட கழுவ முடியாத அள விற்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள் ளது. இதுசம்பந்தமாக அரியூர் நாடு ஊராட்சி மன்றத் தலைவர், பணி மேற் பார்வையாளரிடம் தொலைபேசியின் வாயிலாக கேட்டபோது, உரிய முறை யில் பதில் அளிக்கப்படவில்லை என  தெரிகிறது. இந்நிலையில், பள்ளிக் குழந் தைகளின் நலன் கருதி அரியூர் நாடு  ஊராட்சி மன்றத் தலைவர் சொந்த செல வில், பள்ளிக்கு தனியார் வாகனம் மூலம் தண்ணீர் அனுப்பி வைத்தார். மேலும் ஒரு வார காலத்திற்கும் மேல் குடிநீர் பற் றாக்குறை ஏற்படுவதால் பள்ளி மாணவ, மாணவிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, நாமக்கல் மாவட்ட ஆட்சி யர் பள்ளி மாணவ, மாணவியரின் நலனை கருத்தில் கொண்டு நடைமுறை யில் உள்ள குடிநீர் குழாய்களை சரி  செய்து கொடுக்கும்படி தகுந்த அதிகாரி களுக்கு உத்தரவிட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.