உடுமலை, மார்ச் 3- உடுமலை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர் 100க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட் டது. உடுமலை, ராஜேந்திரா சாலை யில் அமைந்துள்ள அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தின் ஒரு பகுதி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட கேந்திரிய வித்யா லயா பள்ளிக்கு தற்காலிகமாக ஒதுக் கப்பட்டது. மேலும், பள்ளியின் மற் றொருமொரு பகுதியில் மாவட்ட கல்வி அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு வழங்கப்பட் டுள்ள பகுதியில் உள்ள நுழைவு வாயிலை பயன்படுத்த அனுமதிக் கக்கோரி வியாழனன்று காலை அரசு பள்ளி மாணவ, மாணவியர் 100க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இப்போராட்டம் குறித்து மாண வர்கள் கூறுகையில், அரசு மேல் நிலைப் பள்ளியின் கிழக்கு பக்கமாக உள்ள வகுப்பறைகள் கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு வழங்கப்பட் டுள்ளதை தொடர்ந்து, அந்த பகுதி யில் உள்ள நுழைவு வாயிலை, அரசு பள்ளி மாணவர்கள் பயன்படுத்த கேந்திரிய வித்யாலயா பள்ளி நிர் வாகம் அனுமதிப்பதில்லை.மேலும், அந்த பள்ளி நிர்வாகம் வருடா வருடம் ஒவ்வொரு வகுப்ப றைகளை அதிகப்படுத்திக் கொண்டு செல்வதால், அரசு பள்ளி மாணவர்களுக்கு வகுப்பறை பற் றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இப்போராட்டம் குறித்து, தக வல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உடுமலை காவல் ஆய்வாளர் ராஜேஷ் கண்ணன் மறியலில் ஈடு பட்ட மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு, பள்ளிக்கு சென்றனர். அதனைதொடர்ந்து,கேந்திரிய வித் யாலயா முதல்வர் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசி ரியர் ஆகியோர் இடையே பேச்சு வார்த்தை நடைபெற்றது.