அவிநாசி, செப்.13- அவிநாசி குறுமைய அளவிலான போட்டிகளில் அரசு ஆண்கள் பள்ளி மாணவர்கள் சாம்பியன் பட்டம் பெற்று சாதனை படைத்தனர். அவிநாசி குறுமைய அளவிலான தடகளப் போட்டிகள், அவிநாசி தனியார் பள்ளி மைதானத்தில் செப்டம்பர் 7,8,9, 12 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் 15, 17, 19 வயதுக்கு உள்பட்டோர் பிரிவில், 100, 200, 800 மீட்டர் ஓட்டப் பந்த யம், தொடர் ஓட்டம், உயரம், நீளம் தாண் டுல், தடை தாண்டுதல், கபடி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. 41 பள்ளிகளை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றதில், அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 19 தங்கம், 12 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 38 பதக்கங் களை குவித்து ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்றனர். 12 ஆம் வகுப்பு மாண வன் யாகவராஜ் பல்வேறு போட்டிக ளில் பதக்கங்களை வென்று தனி நபர் சாம்பியன் பட்டம் பெற்று சாதனை படைத் துள்ளார். மாநில அளவிலான விளை யாட்டுப் போட்டிக்கும் தேர்வாகியுள் ளார். மேலும் கடந்த மாதம் அவிநாசி அருகே தனியார் பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தடகள போட்டி யில், மாணவர்கள் யாகவராஜ் விக் னேஸ்வரன், கவின், குருபிரசாத் ஆகி யோர் வெற்றி பெற்று நாமக்கல் மாவட் டத்தில் நடைபெறும் மாநில அளவி லான போட்டியில் பங்கேற்கின்றனர். சாதனை படைத்த மாணவர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியை ந.கவிதா ஆகி யோரை பள்ளித் தலைமையாசிரியை ஆனந்தகுமாரி, பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மற்றும் பல்வேறு சமூக அமைப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.