ரூ.94,794 பறிமுதல்
ரூ.94,794 பறிமுதல் தருமபுரி, ஏப்.4- தேர்தல் நடத்தை விதிகளை மீறி எடுத்து செல்லப்பட்ட ரூ.94,794யை தேர்தல் கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர். தருமபுரி மக்களவை தொகுதிக்குட்பட்ட கரகதஅள்ளி வருவாய் கிராமம், கோலிலூரான் கொட்டாய் புதிய சுங்கச் சாவடி அருகே, நிலையான கண்காணிப்பு குழு உதவி பொறியாளர் கே.முருகன் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வெள்ளிச் சந்தை கிராமத்தைச் சேர்ந்த மாதேஷ் என்பவர், தேர்தல் நடத்தை விதிகளை மீறி ரூ.94,794 எடுத்துச்சென்றது தெரி யவந்தது. இதையடுத்து அப்பணத்தை பறிமுதல் செய்த அதி காரிகள், பாலக்கோடு சார் நிலை கருவூலத்தில் ஒப்ப டைத்தனர்.
தேசிய அளவிலான போட்டியில் அரசுப் பள்ளி மாணவர் முதலிடம்
தருமபுரி, ஏப்.4- தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில், அரூரைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர் முதலிடம் பிடித்தார். கன்னியாகுமரியில் தேசிய அளவிலான சிலம்பம் போட்டி 5 நாட்கள் நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு மாநி லங்களைச் சேர்ந்த சுமார் 400 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் தருமபுரி மாவட்டம், அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 7 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் சுமன், ஜூனியர் 40 கிலோ எடை பிரிவில், ஆயுத ஜோடி சிலம்பம் போட்டியில் கலந்து கொண்டு, இறுதி போட்டி யில் பங்கேற்றார். மகாராஷ்டிரா அணியை வீழ்த்தி தங்கப்ப தக்கம் வென்றார். பள்ளிக்கு பெருமை சேர்த்த மாண வன் சுமனை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்தரா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்து குமார், பொன் னுசாமி, பள்ளி தலைமை ஆசிரியர் ஆறுமுகம் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவனையும், அவருக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் பழனிதுரை, சிலம்பம் மாஸ்டர் சுரேஷ், சங்கர், முருகேசன் ஆகியோரை பாராட்டி பரிசு மற் றும் சான்றிதழ் வழங்கினர்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ‘நீட்’ பயிற்சி வகுப்பு துவக்கம்
நாமக்கல், ஏப்.4- நாமக்கலலில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை விடுதிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நீட் தேர் வுக்கான பயிற்சி வகுப்பு புதனன்று துவங்கி யது. தேசிய தேர்வு முகமை மூலம் இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. நிக ழாண்டிற்கான நீட் தேர்வு மே 5 ஆம் தேதி நடைபெறுகிறது. பிப்.9 முதல் மார்ச் 16 வரை நீட் தேர்வுக்கு மாணவ மாணவிகள் இணைய வழியாக விண்ணப்பித்தனர். இந்த தேர்வில் வெற்றி பெற்றால், 7.5 சதவிகித இட ஒதுக்கீட் டின் கீழ் தமிழக அரசுப்பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகள் எளிதாக மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான வாய்ப்பு உண்டு. அந்த வகையில், நாமக்கல் மாவட் டத்தில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியி னர் நலத்துறை விடுதிகளில் தங்கிப் பயின்ற 25 மாணவ, மாணவியர் நீட் தேர்வுக்கு விண் ணப்பித்திருந்தனர். அவர்களுக்கான பயிற்சி வகுப்பு, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் புதனன்று தொடங்கப்பட்டது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ப.மகேஸ்வரி தொடங்கி வைத்தார். அரசு பள்ளி ஆசிரியர்கள் மூலம் நீட் தேர்வு வரையில் மாணவ, மாண விகளுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில், ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் முருகன், பள்ளிக்கல்வி துணை ஆய்வாளர்கள் கை.பெரியசாமி, கிருஷ்ண மூா்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மோடி பொய்யர் - நடிகர் போஸ் வெங்கட் தாக்கு
நாமக்கல், ஏப்.4- நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பா ளரை ஆதரித்து, நடிகர் போஸ் வெங்கட் தேர் தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நாமக்கல் மக்களவை தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் கொமதேக வேட் பாளர் மாதேஸ்வரன், உதயசூரியன் சின் னத்தில் போட்டியிடுகிறார். இந்நிலையில், இவருக்கு வாக்கு கேட்டு, சேந்தமங்கலம் ஒன்றியம் பேளுக்குறிச்சி பேருந்து நிறுத் தம், காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சி, சேந்தமங்கலம் பேரூராட்சி, எருமப்பட்டி பேரூராட்சி பகுதிகளில் நடிகர் போஸ் வெங் கட் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அவர் பேசுகையில், ‘10 ஆண்டுகால ஆட்சியில் பிர தமர் மோடி பொய்யை தவிர வேறு ஏதும் பேசவில்லை. தமிழ்நாட்டின் காலை உணவு திட்டம் உலக நாடுகளே திரும்பிப் பார்க்கிற அளவிற்கு பெயர் பெற்றுள்ளது. மழை யால் பாதிக்கப்பட்ட போது வராமல் இருந்த மோடி, தற்போது தேர்தல் நேரம் என்பதால் தமிழகத்திற்கு ஓடி வருகிறார். 10 ஆண்டு களில் டீசல், பெட்ரோல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலை மட்டுமே உயர்ந்துள்ளது, என்றார்.
குமாரபாளையத்தில் ரத்த வங்கி அமைக்க கோரிக்கை
நாமக்கல், ஏப்.4- குமாரபாளையத்தில் ரத்த வங்கி அமைக்க வேண்டும் என வலியுறுத்தி மக்கள் நீதி மய்யம் சார்பில் மாவட்ட ஆட்சி யருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. அம்மனுவில் கூறியிருப்பதாவது, நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வருகின்றனர். உள்நோயாளிகள், கர்ப்பிணிகள் ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவசர சிகிச்சை பெறுபவர்களுக்கு ரத்தம் தேவை ஏற்பட்டால், திருச்செங்கோடு அரசு மருத்துவ மனையில் உள்ள ரத்த வங்கியை நாட வேண்டியுள்ளது. மேலும், இங்குள்ள நோயாளிக்கு ரத்தம் கொடுக்க பொது மக்கள் யாராவது முன்வந்தால், திருச்செங்கோடு சென்று ரத்தம் வழங்க வேண்டியுள்ளது. இதனால், ரத்ததானம் செய்ய முன்வருபவர்களும், ரத்த தானம் செய்ய அவ்வளவு தூரம் செல்ல தயாராக இல்லை. மேலும், திருச்செங்கோடு செல்லப் போதுமான பேருந்து வசதியும் இல்லை. ரத்ததானம் செய்ய முன்வருபவர்கள் கூட தூரத்தை எண்ணியும், கால விரயம், பொருள் விரயம் ஆகியவற்றை எண்ணி, ரத்ததானம் வழங்க முன்வர தயங்குகிறார்கள். இதனால் எண்ணற்ற நோயா ளிகள் உயிர் பிழைக்க முடியாத நிலை ஏற்பட்டு வரு கிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு தாலுகா அந்தஸ்து பெற்றும், இது வரை குமாரபாளையம் தாலுகா அந்தஸ்துக்கு ஏற்ற மருத்துவமனையாக இல்லாமல் உள்ளது. குமாரபாளை யத்தில் ரத்த வங்கி அமைத்தால், ரத்த தானம் செய்ய பலரும் முன்வருவார்கள். குமாரபாளையத்தில் எண்ணற்ற தன்னார்வ சங்கங்கள் மூலம் ரத்ததான முகாம்கள் நடத்தப்படுகின்றன. இம்முகாம்களில் ஈரோடு அல்லது சேலம் போன்ற ஊர்களில் இருந்துதான், ரத்த வங்கிகள் வந்து ரத்த வகைகளை சேகரித்து செல்கிறார்கள். இங்கு கொடுக் கப்படும் ரத்ததானம், இங்கு உள்ளவர்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லாமல் போகிறது. இதனை கருத்தில்கொண்டு, குமாரபாளையத்தில் ரத்தம் இல்லாமல் ஒரு உயிர் கூட போகக்கூடாது என்று எண்ணி, குமாரபாளையத்தில் ரத்த வங்கி அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்ணாமலையின் வேட்புமனு தேர்தல் ஆணையம் உத்தரவு
கோவை, ஏப்.4- அண்ணாமலையின் வேட்புமனு மீது, தேர்தல் அலுவலர் நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் அறிக்கை அனுப்பி யுள்ளதாக, ஹிந்துஸ்தான் ஜனதா கட்சி வேட்பாளர் தெரி வித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவையில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு 28ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டது. அப்போது பாஜக வேட்பாளராக போட்டியிடும் அண்ணாமலையின் வேட்பு மனு முறைப்படி தாக்கல் செய்யவில்லை எனவும், அதனை நிராகரிக்க வேண்டும் எனவும் கூறி, திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வலியுறுத்தி னர். பின்னர் அண்ணாமலை நீதிமன்றங்களுக்கு மட்டுமே பயன்படுத்தக்கூடிய முத்திரைத்தாளில் வேட்பு மனு தாக்கல் செய்திருப்பதாக சர்ச்சை ஒன்று எழுந்தது. அன்றைய தினமே கோவை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்திகுமார் பாடியிடம் அதிமுக வழக்கறிஞர்கள், நாம் தமிழர் மற்றும் ஹிந்துஸ்தான் ஜனதா கட்சி வேட்பாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து அன்றைய தினமே மாவட்ட நிர்வாகம் புதிய வேட்பு மனுவை பதிவேற்றம் செய் தது. இச்செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்த நிலை யில், இதுகுறித்து நீதிமன்றத்தை நாட இருப்பதாகவும் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் ஹிந்துஸ்தான் ஜனதா கட்சி வேட்பா ளர் ராகுல் காந்தி இது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தில் புகார் அளித் திருந்தார். அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க கோரி, தமிழக தேர்தல் ஆணையம் மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அனுப்பியுள்ளது. இது குறித்து ராகுல் காந்தி கூறுகையில், வேட்புமனு பரிசீலனையின் போது ஒருதலைப்பட்சமாக தேர்தல் நடத்தும் அலுவலர் செயல்பட்டார். கண்டிப்பாக நீதிமன்றம் வாயிலாக தீர்வு வாங்கி தருவோம். அண்ணாமலை ஃபார்ம் 26ல் விதி முறைகளை மீறியுள்ளார். 52 இடங்களை அவர் குறிப்பி டாமல் கோர்ட் fee பத்திரத்தில் அளித்துள்ளார். இருப்பினும் பாஜக அரசிற்கும், அண்ணாமலைக்கும் சாதகமாகவே கோவை தேர்தல் அலுவலர் செயல்பட்டு வருகிறார். நீதிமன் றம் மூலம் இதற்கு ஒரு தீர்வு பெருவோம். அண்ணாமலை வேட் பாளர் இல்லை என்ற அறிவிப்பையும் வாங்கி தருவேன் என்றார்.
குடிநீரின்றி தவிப்பு – சாக்கு போக்கு சொல்லும் நிர்வாகம்
திருப்பூர், ஏப்.4 - நாதம்பாளையம் பகுதியில் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே குடி நீர் விநியோகிக்கப்படுவதால், குடிநீ ரின்றி தவிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். காளிபாளையம் பஞ்சாயத்து நாதம்பாளையம் பகுதி யில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரு கின்றனர். இப்பகுதியில் முறையாக குடிநீர் வருவதில்லை. பஞ்சாயத்து நிர்வாகத்திடம் கேட்டால் குழாய் உடைந்து இருக்கிறது, சாலை சீரமைப்பு பணிகள் நடைபெறுகிறது, அத னால் தண்ணீர் இல்லை என்று சாக்கு போக்கு கூறுகின்ற னர். இதனால், பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். மேலும், மக்கள் தண்ணீரை பணம் கொடுத்து வாங்கி பயன்ப டுத்தும் அளவுக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும், கணக்கம்பா ளையம் பகுதியில் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் ஒரு கேன் தண்ணீர் ரூபாய் 5 க்கு விநியோகப்படுகிறது. சில நேரங்களில், எந்த பஞ்சாயத்தில் வரி கட்டுகிறீர்களோ? அங்கு தண்ணீர் கேளுங்கள், அதை விட்டுவிட்டு இங்கு வராதீர்கள் என அருகாமை பஞ்சாயத்து நிர்வாகம் பிரச்சனை செய்வதா கவும் குற்றச்சாட்டு எழுகிறது. எனவே, தண்ணீருக்காக அல் லல்படும் நாதம்பாளையம் பகுதிக்கு, முறையாக வாரத் திற்கு ஒருமுறையாவது தண்ணீர் கிடைக்க அரசு வழிவகை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத் துள்ளனர்.
பாஜக மீது வழக்குப் பதியுமா தேர்தல் ஆணையம்?
அவிநாசி,ஏப்.4- திருமுருகன்பூண்டி நகர் மன்ற அலுவ லகம் முன்பு தேர்தல் நடத்தை முறையை மீறி, பாஜகவின் தாமரை சின்னம் பொருந்திய கொடியை கட்டியுள்ளதாக புகார் எழுந்துள் ளது. நீலகிரி தொகுதியில் பாஜக வேட்பாள ராக போட்டியிடும் எல்.முருகன், அவிநாசி சுற்றுவட்டார பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, வேட்பாளர் எல்.முரு கனை வரவேற்கும் விதமாக, திருமுருகன் பூண்டி நகர் மன்ற அலுவலகத்தின் முன்பு, அப்பகுதியைச் சேர்ந்த பாஜகவினர், தேர்தல் நடத்தை விதியினை மீறி பாஜக கொடி யினை கட்டியுள்ளனர். இது சர்ச்சையை ஏற் படுத்தியுள்ளது. அதேபோல், அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் தாமரை சின்னம் பொருந்திய துண்டு அணிந்து சாமி தரிசனம் செய்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுவும் தேர்தல் நடத்தை விதியை மீறியதாக சொல்லப்படு கிறது. எனவே, இந்த விவகாரங்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா? என்றும் கேள்வி எழுந்துள்ளது.
நெல் அறுவடை பணிகள் தொடக்கம்
கோபி, ஏப் 3- கோபி அருகே தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்தில் நெல் அறுவடைப் பணிகள் தொடங்கியது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் பகுதியில் தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்தில் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல், கரும்பு, மஞ்சள், வாழை என சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் தடப்பள்ளி அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனத்தில் இரண்டாம் போக சாகுபடிக்காக கடந்த டிச. மாதம் கொடிவேரி அணையி லிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனையடுத்து பாசன பகுதியில் விவசாயிகள் சன்னர கம், மோட்டரகம் என பல்வேறு ரகங்களில் நெல் சாகுபடிக் கானப் பணிகளை தொடங்கி நடவு செய்தனர் தற்போது நெல் அறிவடைக்கு தயாராகி உள்ளதால் தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசன பகுதியில் நெல் அறுவடைப் பணிகள் தொடங்கியுள்ளது. மேலும் நெல் சாகுபடியில் நெல்விளைச் சல் அமோகமாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர். மேலும் கடந்த சில மாதங்களாக அரிசி தேவைக் காக வியாபாரிகள் நெல்லை கூடுதல் விலை கொடுத்து அதி களவில் கொள்முதல் செய்வதால் நெல்லிற்கு தகுந்த விலை கிடைப்பதால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ள னர்.
ரயில்வே நிர்வாகத்தின் திறனற்ற நடவடிக்கையால் விபரீதம்
பி.ஆர்.நடராஜன் எம்.பி., கடிதம்
கோவை, ஏப்.4- ஓடும் ரயிலில் பயணச்சீட்டு பரிசோ தகர் ஒருவரை பயணி தள்ளியதில் பயணச்சீட்டு பரிசோதகர் பரிதாப மாக உயிரிழந்துள்ளார். ரயில்வே துறையின் திறனற்ற நடவடிக்கையை சீர் செய்து, இதுபோன்ற இழப்பு களை தடுக்க வேண்டும் என ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிற்கு கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கடிதம் எழுதியுள்ளார். இதில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த ஏப்.2 ஆம் தேதியன்று எர்ணா குளம் – பாட்னா விரைவு ரயிலில், ரயில்வே பயணச்சீட்டு பரிசோதக ராக வினோத் என்பவர் பணியிருந் தார். அப்போது பயணச்சீட்டு இல் லாத பயணி ஒருவரால் ஓடும் ரயிலி லிருந்து வெளியே தள்ளிவிட்டதால் வினோத் உயிரிழந்துள்ளார். இது ஒட்டுமொத்த ரயில்வே ஊழியர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சி அலை களை உருவாக்கியுள்ளது. இந்த துயரச் சம்பவம் ஏதோ துர திருஷ்டவசத்தால் நடந்தது அல்ல. மாறாக, ஏற்கனவே ரயில்வே நிர்வாக மும், ரயில்வே வாரியமும் உரு வாக்கி வைத்துள்ள பாதுகாப்பு வழி காட்டுதல்களை நிர்வாகம் முறை யாக கடைபிடிக்காததால் தான் நடந் தது என்று தட்சிண ரயில்வே எம்பி ளாய்ஸ் யூனியன் (டி.ஆர்.இ.யு) அம் பலப்படுத்தியுள்ளது. இதுகுறித்து தென்னக ரயில்வே நிர்வாகத்திற்கும், ரயில்வே வாரியத் திற்கும் டிஆர்இயு கடிதம் எழுதியுள் ளது. பயணச்சீட்டு பரிசோதகர்க ளுக்கு தங்கள் பணியின்போது, 3 படுக்கை வசதி கொண்ட பெட்டிக ளுக்கு மேல் பணி தருவது என்பது அதிக பணிசுமையை தரும் என்ப தோடு, ரயில்வே வாரியம் வழங்கி யுள்ள வழிகாட்டு நெறிமுறைக ளுக்கு முற்றிலும் எதிரானதாகும். மேலும், கேரளாவிலிருந்து இயக்கப் படும் ரயில்களில் முன்பதிவில்லா ரயில் பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. முன்பதிவு இல்லாத பெட்டிகளில் அதிக கூட்டம் நிலவும் சூழலில் சில பயணிகள், முன் பதிவு பெட்டிகளுக்குள் ஏறிவிடுவது தவிர்க்க இயலாத ஒன்றாக மாறி வரு கின்றது. இச்சூழலில் இயல்பாகவே அப்பயணிகளுக்கும், பயணச்சீட்டு பரிசோதகர்களுக்கும் மோதல் ஏற் படும் சூழல் உருவாகிறது. அத்தகைய சூழலில் அப்பயணி களிடம் கூடுதல் கட்டணம் பெற்றுக் கொண்டு, அவர்களை முன்பதிவு பெட் டியிலேயே தொடர்ந்து பயணிக்க அனுமதிக்க வேண்டும். இதனால் ரயில்வே நிர்வாகத்திற்கு கூடுதல் வரு மானம் கிடைக்கும். பயணச்சீட்டை பரி சோதனை செய்யும்போது, போது மான எண்ணிக்கையில் ரயில்வே பாதுகாப்புப்படை காவல் துறையி னர் பணியில் இருப்பதில்லை. ஏராள மான இடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதால் ரயில்வே பாதுகாப்பு படையினர் போதுமான எண்ணிக்கை யில் பணியில் ஈடுபடுத்த முடிவ தில்லை. எனவே, மேற்சொன்ன விஷ யங்களை பரிசீலித்து, முன்பதிவு இல் லாத ரயில் பெட்டிகளின் எண்ணிக் கையை குறைக்கக்கூடாது. அதிக பணிச்சுமையை குறைக்க ரயில்வே வாரியத்தில் வழிகாட்டுதல்களுக் குட்பட்டு பணி அளிக்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்பி, ஊழி யர்கள் மற்றும் பயணிகளின் பாது காப்பை உறுதிசெய்ய வேண்டும். இவ்வாறு அதில் வலியுறுத்தப்பட் டுள்ளது.
அதிமுகவை காப்பாற்ற திமுகவுக்கு வாக்களியுங்கள்: கொமதேக ஈஸ்வரன்
ஈரோடு, ஏப்.4- அதிமுகவை காப்பாற்ற வேண்டும் என் றால், அதிமுக நிர்வாகிகள் வரும் மக்க ளவை தேர்தலில் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன் தெரிவித்துள் ளார். ஈரோடு தொகுதியில் திமுகவுக்கு ஆதர வாக கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தலை வர் ஈஸ்வரன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது பேசிய அவர், பாஜக கூட்டணியில் இருந்து வெளியே வருவது போல் எடப்பாடி பழனிச்சாமி வெளியே வந் துள்ளார். தேர்தலுக்குப் பின் மீண்டும் எடப் பாடி பாஜகவை ஆதரிப்பார். ஒவ்வொரு மாநி லத்திலும் கூட்டணி கட்சிகளை பாஜக அழித்து வரும் நிலையில், வரும் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் மோடி பிரதமரானால் அதிமுக என்ற கட்சியை பாஜக அழித்து விடும். அதிமுக என்ற கட்சியே இருக்காது. எனவே, அதிமுக காப்பாற்றப்பட வேண்டு மென்றால் முதலில் பாஜக தோல்வி அடைய வேண்டும். பாஜக தோல்வி அடைய திமுக வுக்கு வாக்களிக்க வேண்டும், என்றார்.
உதகைக்கு கூடுதலாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் வரவழைப்பு
உதகைக்கு கூடுதலாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் வரவழைப்பு உதகை, ஏப்.4- நீலகிரி தொகுதிக்கு கூடுதலாக 240 வாக்குப்பதிவு இயந் திரங்கள் கொண்டு வரப்பட்டன. நீலகிரி மாவட்டத்திலுள்ள உதகை (108) சட்டமன்ற தொகு திக்குட்பட்ட 239 வாக்குச்சாவடி மையங்களுக்கு, 286 மின் னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 310 விவிபேட் கருவி, கூடலூர் (109) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 224 வாக்குச் சாவடி மையங்களுக்கு, 268 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 291 விவிபேட் கருவி, குன்னூர் (110) சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட 226 வாக்குச்சாவடி மையங்க ளுக்கு, 271 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 293 விவிபேட் கருவி என நீலகிரி மாவட்டத்திலுள்ள 689 வாக்குச் சாவடி மையங்களுக்கு 825 மின்னணு வாக்குப்பதிவு இயந்தி ரங்கள் மற்றும் 894 விவிபேட் கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தேர்தலை ஒட்டி முதல் கட்டமாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கும் அறையில் அனைத் துக் கட்சி அரசியல் பிரமுகர்கள் முன்னிலையில் சீரற்ற மயமாக்கல் பணிகள் முடிக்கப்பட்டு, உதகை பிரிக்ஸ் மேல் நிலைப்பள்ளி, கூடலூர் புனித தாமஸ் உயர்நிலைப்பள்ளி, குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. மேலும் நீலகிரியில் 16 வேட்பாளர்கள் மற்றும் ஒரு நோட்டா பதிவு இருப்பதால், கடைசியில் இடம்பெற உள்ள ஒரு நோட்டா பதிவுக்காக 3 சட்டமன்ற தொகுதிகள் அடங்கிய நீலகிரி மாவட்டத்தில் 689 வாக்குச்சாவடி மையங்களுக்கும் கூடுதலாக ஒரு வாக்குப்பதிவு இயந்திரம் அனுப்பி வைக் கப்பட உள்ளது. இந்நிலையில், ஈரோடு மாவட்டத்திலிருந்து முதல் கட்ட மாக கூடுதலாக 240 வாக்குப்பதிவு எந்திரங்களை போலீஸ் பாதுகாப்புடன் நீலகிரி மாவட்டம் உதகை கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்த எந் திரங்கள் அரசியல் பிரமுகர்கள், மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் சோதனை செய்யப்படவுள்ளது.
திமுகவினர் மீது பாஜகவினர் தாக்குதல்
அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது பாஜகவினர் திமுகவினரை தாக்கிய சம்பவத்தில் பாஜகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், இராமநாதபுரம், மருதூர் பகுதியில் கோவை பாஜக தொகுதி வேட்பாளர் அண்ணாமலை, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, திமுக வினர் இருக்கும் பகுதியில் பாஜகவினர் பிரச்சாரம் மேற்கொண்டபோது, உதய சூரியனுக்கு வாக்களிப்போம் என அப் பகுதியினர் கூறியுள்ளனர். இதில் ஆத்தி ரமடைந்த பாஜகவைச் சேர்ந்த பாலகிருஷ் ணன், திமுக பாகமுகவர் தட்சிணாமூர்த் தியை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். இதில் காயம் அடைந்த தட்சிணாமூர்த்தி கோவை அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். இதுதொடர்பாக பாஜக வைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மீது இராம நாதபுரம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.