districts

img

பிப்.26 முதல் உள்ளிருப்பு போராட்டம்: அரசு மருத்துவமனை தூய்மைப் பணியாளர்கள் அறிவிப்பு

திருப்பூர், பிப்.19- குறைந்தபட்ச கூலி ரூ.  725 வழங்காவிட்டால் வரும்  பிப்.26 ஆம் தேதி முதல் உள் ளிருப்பு போராட்டத்தில் ஈடு பட போவதாக அரசு மருத் துவமனையில் பணியாற்றும்  தூய்மைப் பணியாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் திங்களன்று மனு அளித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, திருப் பூர் அரசு மருத்துவமனையில் பணியாற்றும்  தூய்மைப் பணியாளர்கள், தூய்மைக் காவலர் களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவித்த குறைந் தபட்ச கூலி ரூ. 725 வழங்க கோரி பலமுறை மனு அளித்துவிட்டோம். இதுவரை எந்த நடவ டிக்கையும் எடுக்கப்படவில்லை. வரும் 25  ஆம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்கவில்லை  என்றால் வருகிற பிப்.26 ஆம் தேதி முதல் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித் துள்ளனர்.