சேலம், மே 8- சங்ககிரி அருகே மரத்திலிருந்து கீழே விழுந்ததில், மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடலுறுப்புகள் தான மாக பெறப்பட்டன. இதையடுத்து அந்த வாலிபரின் உடல் அரசு மரியாதையுடன் உறவினர்களிடம் ஒப்ப டைக்கப்பட்டது. சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், சந்தப்பேட்டை பால்வாய் பகுதியைச் சேர்ந்தவர் மணி. இவரது மகன் சந்தோஷ்குமார் (22). இவர் வீட்டின் அருகே உள்ள பனை மரத்தில் நுங்கு வெட்டுவதற்காக ஏறியுள்ளார். அப் போது எதிர்பாராத விதமாக சந்தோஷ்குமார் மரத்தின் மேலிருந்து கீழே விழுந்துள்ளார். தலையில் பலத்த காய மடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, சங்ககிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சந்தோஷ்குமார் மூளைச்சாவு அடைந்ததாக மருத்து வர்கள் தெரிவித்தனர். இதையடுத்து சந்தோஷ்குமாரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர் கள் முன்வந்தனர். தொடர்ந்து சேலம் அரசு மருத்துவ மனை நிர்வாகம் சார்பில் உடனடியாக தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று ஆணையத்திற்கு தகவல் தெரிவித்த னர். அதன் பேரில், மருத்துவக்குழுவினர் மூளைச்சாவ டைந்த சந்தோஷ்குமார் உடலில் இருந்து இதயம், கல்லீ ரல், நுரையீரல், சிறுநீரகம் 2, சிறுகுடல், கார்னியா ஆகி யவை எடுக்கப்பட்டது. இதயம் சென்னையில் உள்ள தனி யார் மருத்துவமனைக்கும், கல்லீரல் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. நுரையீ ரல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக் கும், ஒரு சிறுநீரகம் சேலத்தில் உள்ள தனியார் மருத்து வமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், சிறுகுடல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், கார்னியா சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவம னைக்கும் தானமாக வழங்கப்பட்டது. இதைத்தொ டர்ந்து சந்தோஷ்குமாருக்கு சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அரசு மரி யாதை செலுத்தப்பட்டு, அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.