districts

img

பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

ஈரோடு, செப்.28- ஈரோடு மாவட்டத்தில் பழிவாங்கும் நடவடிக்கையை உயர் அலுவலர்கள் கைவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு  ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க ஈரோடு மாவட்ட பிரதிநிதித் துவ பேரவை வியாழனன்று ஈரோடு ஆர்எம்எஸ் அரங்கில், மாவட்டத் தலைவர் ஏ.ராக்கிமுத்து தலைமையில் நடைபெற் றது. மாநிலச் செயலாளர் அண்ணா.குபேரன் தொடக்க உரை யாற்றினார். மாவட்டச் செயலாளர் ச.விஜயமனோகரன், பொருளாளர் ஆர்.சுமதி ஆகியோர் அறிக்கைகளை முன் வைத்தனர். தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்க மாநில  துணைத்தலைவர் கு.குமரேசன், ஆரம்பப்பள்ளி ஆசிரியர்  கூட்டணியின் மாவட்டச் செயலாளர் இரா.மணி, சிஐடியு மாவட் டத் தலைவர் எஸ்.சுப்ரமணியன் ஆகியோர் வாழ்த்தி பேசி னர். ஈரோடு மாவட்டத்தில், உயர் அதிகாரிகளால் பழிவாங்கும் நோக்குடன் குற்றம் சுமத்தப்பட்டு தண்டனை வழங்குவது அதி கரித்து வருகிறது. எனவே அனைத்துத்துறை உயர் அலுவ லர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடத்தி, அறிவுரை வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தாளவாடி, மலைப்பகுதிகளுக்கு மலைப்படி வழங்க வேண் டும். தாளவாடி வட்டத்திற்கு தனியாக சார்நிலைக்கருவூலம், அரசு குடியிருப்பு, பேருந்து வசதி அமைக்க வேண்டும். பெருந்துறையில் உள்ள துணை வணிகவரி அலுவலகத் திற்கு அரசு கட்டடம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில், மாநிலத் தலைவர் மு.அன் பரசு நிறைவுரையாற்றினார். மாவட்டப் பொருளாளர் ஆர்.சுமதி நன்றி கூறினார்.