கோவை, ஆக.8- போத்தனூர் பகுதியில் தோண்டப்பட்டு சரியாக மூடப் படாததால் பள்ளத்தில் அரசு பேருந்து சிக்கியது. கோவை மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் சாலை பராமரிப்பு பணிகள், குழாய்கள் பதிக்கும் பணிகள் நடை பெற்று வருகிறது. இந்நிலையில், கோவை போத்தனூர் பகுதி ரயில்வே மண்டபம் அருகில் குழாய்கள் பதிப்பதற்காக சாலை தோண்டப்பட்டுள்ளது. தோண்டப்பட்ட சாலை சரிவர மண்ணை கொண்டு மூடாமல் இருந்துள்ளனர். இந்நிலையில், அவ்வழியாக போத்தனூரில் இருந்து துடியலூர் செல்லும் (எண் 4) அரசு பேருந்து சரியாக மூடப் படாமல் இருந்த குழியில் சிக்கியது. பேருந்தின் முன்புறத் தின் ஒரு சக்கரம் குழிக்குள் பாதிக்கும் மேல் சிக்கி நின்றது. இதனால், பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்த னர். பின்னர் பேருந்தில் இருந்த பயணிகள் கீழே இறக்கி விடப்பட்டு வேறு பேருந்திற்கு மாற்றி விடப்பட்டனர். பின்னர், பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு பேருந்து குழியில் இருந்து வெளியில் எடுக்கப்பட்டது. இதன் காரணமாக போத்த னூர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.