சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு
தருமபுரி, ஜன.27- தருமபுரியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், சிறப் பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு ஆட்சியர் கி.சாந்தி பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 75 ஆவது குடியரசு தினவிழா நடைபெற்றது. அப்போது, மாவட்ட ஆட்சி யர் கி.சாந்தி, தேசியக்கொடியினை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண் டார். இதனைத்தொடர்ந்து, பல்வேறு துறை சார்ந்த அரசு அலு வலர்கள், பணியாளர்கள் என மொத்தம் 341 நபர்களுக்கு நற் சான்றிதழ்களை வழங்கினார். சிறந்த வட்டார வளர்ச்சி அலு வலகம் (பாலக்கோடு), துறை சார்ந்த சிறந்த அலுவலர்க ளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை ஆட்சி யர் வழங்கினார். தொடர்ந்து மொத்தம் 25 பயனாளிகளுக்கு ரூ.3.28 லட்சம் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதைத்தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவி யர்கள் நிகழ்த்திய பல்வேறு கலைநிகழ்ச்சிகளை ஆட்சியர் பார்வையிட்டு, மாணாக்கர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜி.கே.மணி, எஸ்.பி.வெங்கடேஷ்வரன், முதன்மை மாவட்ட நீதிபதி ஆ.மணி மொழி, காவல் கண்காணிப்பாளர் ந.ஸ்டீபன் ஜோசுபாதம், மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தரமில்லாமல் கட்டப்பட்ட மேல்நிலை குடிநீர் தொட்டி உறுதித்தன்மை உத்தரவாதப்படுத்தப்படும்: அதிகாரிகள்
சேலம், ஜன.27- வீரபாண்டி அருகே தரமில்லாமல் புதி தாக கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம் அறி வித்த நிலையில், உடனடியாக பராமரிப்புப் பணிகள் செய்து உறுதித்தன்மை உத்தரவா தப்படுத்தப்படும் என அதிகாரிகள் பொது மக்களிடம் உறுதியளித்தனர். சேலம் மாவட்டம், வீரபாண்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சேனைபாளையம் ஊராட்சியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும் பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக 3 ஆவது வார் டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. ஆனால், தரமில்லாமல் கட் டப்பட்ட தொட்டியிலிருந்து குடிநீர் வடிந்து சேதமடைந்தது. இதனால் இப்பகுதி மக்க ளுக்கு கடந்த 8 மாத காலங்களாக குடிநீர் விநியோகம் இல்லாமல், பெரும் சிரமத்திற் குள்ளாகி வருகின்றனர். எனவே, புதிதாக குடி நீர் தொட்டி கட்டித்தர வேண்டும். தரமில்லாத மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியை அப்புறப் படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோருக்கு பொதுமக்கள் மனு அளித்தனர். இருப்பி னும் அதிகாரிகள் பொதுமக்களின் கோரிக் கையை இதுவரை எதிர்கொள்ளாத நிலை யில், பொது வெளியில் பட்டிமன்றம் நடத்தப் படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலை யில், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி னர். அப்போது, சேதமடைந்த குடிநீர் தொட் டியை 30 ஆண்டுகள் பயன்படுத்தும் வகை யில், தரம் உயர்த்தி தர எழுத்துப்பூர்வமாக தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து மக்க ளின் பட்டிமன்ற போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
குடியரசு தின விழா
நாமக்கல், ஜன.27- 75 ஆவது குடியரசு தின விழா வெள்ளியன்று கொண் டாடப்பட்டது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ராஜவீதி பகுதியில் அமைந் ள்ள ஜாமிஆ மஸ்ஜித் சுன்னத் வல் ஜமாஅத்தில் குடியரசு தின விழா கொடியேற்றுதல் நிகழ்வு நடைபெற்றது. இதே போல் பள்ளிபாளையம் நக ராட்சி அலுவலகம், ஆவரங் காடு துவக்கப்பள்ளி, கிருஷ் ணவேணி அரசினர் பெண் கள் மேல்நிலைப்பள்ளி, கண் டிப்புதூர் அரசு பள்ளி, ஒட்ட மெத்தை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள் ளிட்ட பல்வேறு இடங்களில் குடியரசு தின விழா நடை பெற்றது.
அகில இந்திய ஹாக்கி தங்க கோப்பை போட்டிக்கு அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் தேர்வு
திருப்பூர், ஜன.27- அகில இந்திய ஹாக்கி தங்க கோப்பை போட்டிக்கு சிக்கண்ணா அரசு கலைக் கல் லூரி மாணவர்கள் தேர்வாகியுள்ளனர். அகில இந்திய தங்க கோப்பை ஹாக்கி போட்டி வரும் ஜன. 31 ஆம் தேதி முதல் பிப்ர வரி 6 வரை உத்திரபிரதேசம் ஜான்சியில் நடை பெறுகிறது. கடந்த 16 ஆம் தேதி ஒலிம்பியன் பாஸ்கரன் ஹாக்கி அகாடமி சார்பில் 21 வய திற்குட்பட்ட பிரிவில் தேர்வு போட்டிகள் கோ வில்பட்டி செயற்கை புல்வெளியில் நடை பெற்றது. அதில் சிறப்பாக விளையாடியவர் களை தங்க கோப்பை போட்டிக்கு தேர்வு செய்தனர். மொத்தம் 200 விளையாட்டு வீரர் கள் கலந்து கொண்டனர். அதில் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி முதலா மாண்டு முதுகலை வணிகவியல் படிக்கும் மாணவன் சுரேந்தர், இரண்டாமாண்டு பயி லும் மாணவன் சூர்யா, மற்றும் இளங்கலை வணிகவியல் சிங்கப்பிரகாஷ் தேர்வாகினர். இவர்கள் ஜான்சியில் நடைபெறும் தங்க கோப்பை ஹாக்கி போட்டியில் கலந்து கொண்டு விளையாட உள்ளனர். அவர்களை சனியன்று கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் மற்றும் உடற்கல்வி இயக்குநர் ராஜாராம், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.
கஞ்சா கடத்தி வந்த நபர் கைது
கோவை, ஜன.27- சூலூர் அருகே மினி டிரக்கில் வைத்து கஞ்சாவை கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்து, கஞ்சா பொட் டலங்களை பறிமுதல் செய்தனர். கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஹோல்சேல் மற்றும் ரீடை லில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக சூலூர் போலீசா ருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அத்தகவலின் பேரில், சம்பவத்தன்று காவல் உதவி ஆய்வாளர் ராஜேந்திர பிரசாத் தலைமையிலான தனிப்படை போலீசார் நீலம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடு பட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த டாட்டா ஏஸ் மினி டிரக்கை தடுத்து நிறுத்தி சோதனை யிட்டனர். அதில் விற்பனைக்காக 5 கிலோ கஞ்சா பொட் டலங்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் மினி ட்ரக்கை ஓட்டி வந்த நபரைப் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் விசாரணையில் அவர் இருகூர் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பதும், ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து நீலாம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஹோல்சேல் மற்றும் ரீடைல் விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து நாகராஜை கைது செய்த போலீசார், 5 கிலோ கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய டாடா ஏஸ் மினி டிரக்கை பறிமுதல் செய்தனர்.
பெண் குழந்தைகளைக் காப்போம்!
ஈரோடு, ஜன. 27- பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தை களுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின் மூலம் தயாரிக்கப் பட்ட பொம்மி - என் வாழ்க்கை என் கையில் என்ற விழிப்புணர்வு விளையாட்டு அட்டைகளை மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா அறிமுகம் செய்தார். ஈரோடு மாவட்ட சமூக நலத்துறை மற்றும் பொது சுகாதாரத் துறையின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இளம் வயதில் கருத்த ரித்தல், இளம் வயதில் தமக்கு கிடைக்க வேண்டிய நல் வாய்ப்புகளை இழக்க நேரிடுவது தொடர்பாக தயாரிக்கப் பட்ட பொம்மி - என் வாழ்க்கை என் கையில் என்ற வேடிக்கை யான விழிப்புணர்வு விளையாட்டு அட்டைகளை மாவட்ட ஆட்சியர் அறிமுகம் செய்து, மாணவியர்களுக்கு வழங்கி னார். சமூக நலத்துறை, பொது சுகாதாரத்துறை, பள்ளிக்கல் வித்துறை மற்றும் பள்ளி மாணவியர் பலர் இதில் கலந்து கொண்டனர்.