ஈரோடு, பிப்.1- அகண்ட பாரத கனவை நிறைவேற்ற இன்னும் பலரை கோட்சேவின் குண்டு கள் குறிபார்த்துக்கொண்டிருக்கிறது. இந்த கோட்சேக்களிடமிருந்து மக்களை பாதுகாப்பதுதான் இன்று மகாத்மா காந் திக்கு செலுத்தும் உண்மையான அஞ்ச லியாகும் என தமுஎகச மாநில பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஈரோட்டில் நடைபெற்ற மதவெறிக்கெதி ரான கருத்தரங்கில் உரையாற்றினார். தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் சார்பில் ஈரோட்டில் நடை பெற்ற மதவெறி எதிர்ப்பு கருத்தரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில பொதுச் செய லாளர் ஆதவண் தீட்சண்யா கருத்துரை யாற்றினார். அப்போது அவர் பேசுகையில், காந் தியைக் கொன்ற அந்த துப்பாக்கி அன் றைக்கோடு அடங்கவில்லை. இன்னும் பலரைக் குறிபார்த்துக் கொண்டிருக் கிறது. இயல்பாக இணங்கி வாழக்கூ டிய ஒரு சமூகத்தில் மக்களை நாம் - அவர்கள் என்று பிரிப்பதிலிருந்து இந்த வெறுப்பு தொடங்குகிறது, சமூகத் தைப் பிரிக்கிறது. உலகம் தழுவிய அளவில் பாலினத்தின் அடிப்படையி லான பாகுபாடு முதன்மையானதாக இருக்கிறது. அடுத்து மொழி, தேசம், மத அடிப்படையில் நாம், அவர்கள் என்ற பாகுபாடு இருக்கிறது. இந்தியாவிற் குள் வரும்போது சாதி சேர்ந்து விடுகி றது. ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 80 சதவிகிதித்திற்கும் மேலானவர்கள் இந்துக்கள் என்று சொல்லப்படக் கூடிய ஒரு மதத்தின் வகையின் கீழ் என்று தள்ளப்பட்டவர்கள். ஏனென்றால் இந்த மதம் என்ற ஒன்று காலங்காலமாக இருந்து வரக்கூடிய ஒன்று அல்ல. இங்கு சைவம் இருந்திருக்கிறது. வைணவம் இருந்திருக்கிறது. இந்து மதம் என்கிற ஒன்று வரலாற்று ரீதியாக மதமாக வளர்த்தெடுக்கப்படவில்லை. ஒரு மதம் என்று சொன்னால் அதற்கு நிறுவனர் உண்டு, மறைநூல் உண்டு, வழிபாட்டு கோட்பாடுகள் உண்டு. இவை எதுவுமே இந்து மதம் என்று சொல்லக்கூடிய மதத் திற்குக் கிடையாது. ஆனால் பின்னா ளில் வந்தவர்கள் இப்படியெல்லாம் இல்லாமல் இருப்பதுதான் இந்து மதத் தின் தனித்தன்மை என்று பூசி மொழுகி முட்டுக் கொடுக்கும் வேலையைச் செய் தனர். இந்து மதவெறி என்பது இஸ்லா மியர்களையும், கிறிஸ்தவர்களையும் அந்நியர்கள் என்று பார்க்க வேண்டும் என்கிறது. இக்கருத்து தொடர்ந்து பரப் பப்படுகிறது.
இந்து மதத்தின் கொடுங்கோன்மை யைத் தாங்க முடியாமல், சனாதன ஒடுக் குமுறைகளைத் தாங்க முடியாமல், தப் பிக்கக் கூடிய வகையில் அல்லது உண் மையான இறை மார்க்கத்தைத் தேடக் கூடிய வகையில் மாறியவர்கள். ஏனென் றால், இந்து மதம், சனாதனம் அல்ல வேத மதம் சமூகத்தைச் சமமாகப் பார்க் கவில்லை. இன்றுவரை பார்க்க வில்லை. ராமருக்குக் கோவில் கட்டி திறந்துள்ள மோடியை சுப்பிரமணிய சாமியும், சங்கராச்சாரிகளும் ஏற்க வில்லை. ஏனெனில் அடிப்படையில் நீ பிற்படுத்தப்பட்டவன். பிரதமர் என்கிற காரணத்தால் சத்திரிய வேலை செய் கிறாய். ஆனால் பிராமணனைப் போல கோவிலுக்குள் சென்று பாலராமரைத் தொட்டு பிரதிஸ்டை செய்வதற்கு உரிமை இல்லை என்கின்றனர். இது ஆரிய மதம் சொல்லிக் கொடுத்த சனா தனக் கோட்பாட்டிலிருந்து இது வரு கிறது. இப்போது எங்கே வர்ணமுள்ளது என்று கேட்கலாம். திட்டக்குழுவிற்கு மாற்றாக மோடி அரசினால் அமைக் கப்பட்டது நிதி ஆயோக். அதன் துணை தலைவர் அரவிந்த் பனகாரியா, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய மாதிரி ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் சொன்ன தகவலின்படி இந்தியாவில் இருக்கும் சாதியின் பெயர்களை வரிசையாக எழுதி ஒரு நாளைக்கு 12 மணி நேரம் படித்தால் 355 நாட்கள் படிக்க வேண்டும் என் றார். ஆக 47 லட்சம் பெயர்களில் சாதி கள், உட்சாதிகள் இருக்கின்றன. ஜெனொசைடு வாட்ச் என்ற அமைப்பு உலகம் முழுவதும் நடந்தி ருக்கக் கூடிய இனப்படுகொலைகளை ஆய்வு செய்து ஒரு சூத்திரத்தை வகுத் துள்ளனர். அதில் உலகம் முழுவதும் 10 வகையான படிநிலைகளில் இனப்ப டுகொலைகள் நடந்திருக்கிறது என்கின் றனர். அவர்கள் ருவாண்டா நாட்டில் நிச் சயமாக இனப்படுகொலை, மோதல் வரும் என்று 5 ஆண்டுகளுக்கு முன்பே கணித்து சொன்னார்கள். அவர்கள் சொன்னதுபோல 5 ஆண்டுகளுக்குப் பிறகு ருவாண்டாவில் மிகப் பெரிய இனப்படுகொலை நடந்தது. ருவாண் டாவில் எப்படி நடந்ததோ, நாஜிகள் எப் படி யூதர்களை படுகொலை செய்தார் களோ, அதுபோல இந்தியாவில் படுகொ லைகள் நடப்பதற்கான சாத்தியங்கள் இருக்கிறது என்கின்றனர்.
அகண்ட பாரதத்தில் இஸ்லாமியர் களும், கிறித்தவர்களும் இருந்து கொள் ளலாம். ஆனால் அவர்கள் குழந்தை கள் பெற்றுக் கொள்ள எண்ணிக்கை கட் டுப்பாடு விதிக்க வேண்டும். வாக்கு ரிமை அற்றவர்களாக இருக்க வேண் டும் என்றும் எழுதியிருக்கின்றனர். வாக் குரிமை அற்றவர்கள் என்றால் நீங்கள் குடிமக்கள் கிடையாது. சிஏஏ கொண்டு வந்ததற்கும், அகண்ட பாரத அரசியல் சாசனத்திற்கும் சம்பந்தம் உள்ளது. பிஜேபியின் மொத்த வேட்பாளர் பட்டிய லில் ஒரு இஸ்லாமியர் பெயர் கூட இல்லை. ஒட்டுமொத்தமாக பாகுபாட் டின் அடிப்படையில் புறக்கணிப்பு செய் வது. இனப்படுகொலைக்கான படிநி லைகளில் இது அடுத்த கட்டம். பண்பாட்டால் வேறுபட்டவர்கள், நம்மைப் போல் இருக்காதவர்கள் என் றெல்லாம் வகைப்படுத்தி (others) மற் றமையைக் கட்டமைப்பது. இந்த மற் றமை நமக்கு எப்போதும் ஆபத்து என் கிற கருத்தை வலுவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும். குஜராத்தில் அனைத்தையும் முடித்து விட்டனர். பில்கிஸ் பானு வழக்கில் அனைவரையும் விடுதலை யும் செய்து விட்டனர். அதன்பிறகு சட்டப்போராட்டம் நடத்தி குற்றவாளி கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். பதட்டங்களை உருவாக்குவதற்கு என் னென்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்து கொண்டே இருக்கிறார்கள். பதட்டங்கள் நீதிமன்றத்தின் வழி யாகக் கூட வருகிறது. உதாரணம் பாபர்மசூதி தீர்ப்பு. அதன் உற்சாகத் தில் ஞானவாபி மசூதிக்குச் செல்கின்ற னர். நாட்டில் இருக்கும் ஒவ்வொரு மசூ தியையும், சர்ச்சையும் குறிவைத்து சென்று கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே சாதி அடிப்படையில் ஒரு வெறுப்பு தகதகவென எரிந்து கொண்டி ருக்கிறது. இப்போது மதத்தின் அடிப் படையிலான நெருப்பும் கட்ட விழ்த்து விடப்படுகிறது. இந்த வெறுப்பு அவ்வளவு எளிதில் தணியக்கூடி யது அல்ல. மதவெறியர்களின் தாக்குத லுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிற, பாதிக்கப்பட்டிருக்கிற சிறுபான்மை மக் களுக்கு ஆதரவாக அவர்களுக்குத் தைரியம் சொல்வதற்காக அவர்க ளோடு நாம் நிற்க வேண்டும். அதுபோது மானதல்ல, மதவெறியை, சாதிவெறி யைக் கையில் வைத்துக் கொண்டு வன் முறையை ஏவுவதற்குத் தயாரான மனநி லையோடு அலைந்து கொண்டி ருப்பவனிடம் பேச வேண்டும், நல்வழிப் படுத்த வேண்டும், அமைதிக்குத் திரும்பச் செய்யும் வேலையைச் செய்ய வேண்டும். இவையெல்லாவற்றையும் விட தனிமனித அளவில் நாம் எந்தவொரு மதத்தைச் சேர்ந்தவரையும் விரோத மாகவோ, வெறுத்தோ பார்க்கக்கூடாத நல்லிணக்கவாதியாக நம்மை தகவ மைத்துக் கொள்ள வேண்டும். மதச் சார்பற்ற அரசாங்கத்தை வலியுறுத்தக் கூடியவராக இருக்க வேண்டும். காந் திக்கு அஞ்சலி செலுத்த முயற்சிக்கி றோமென்றால், நம்முடைய வாழ்நா ளில் ஒரு மதவெறியனைவயாவது, மத நல்லிணக்கவாதியாக, மதவெறியற்ற வனாக, சகிப்புத்தன்மை மிகுந்தவ றாக, சக மனிதனுடைய குறை நிறை கள் எதுவாக இருந்தாலும், ஏற்றுக் கொண்டு இணங்கி வாழக்கூடிய வர்களாக மாற்றிக்கொள்வதும்தான் காந்திக்கு செலுத்துகிற அஞ்சலியாக இருக்கும். இவ்வாறு செய்வது எதிர் காலத்தில் உருவாக்கக் கூடிய ஒரு கோட்சேவைத் தடுப்பதற்கு வாய்ப்பா கும் என்றார்.