ஈரோடு, ஆக.18- தமிழ்நாடு அரசு ஊழியர் கள் சங்க கோபி வட்டக் கிளை மாநாட்டில் நிர்வா கிகள் தேர்வு செய்யப்பட் டனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கோபி வட்டக்கிளை 16-வது பேரவைக் கூட்டம் தலைவர் எம்.ஆர்.ரஜித்குமார் தலைமை வகித்தார். பி.கதிரவன் வரவேற்றார். மாவட்ட இணைச்செயலாளர் கே.பெருமாள் தொடக்க உரையாற்றினார். சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் கண்ணன் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், தலைவராக எம்.ஆர்.ரஜித் குமார், செயலாளராக மா.பழனிவேலு, பொருளா ளராக க.சக்திவேல் முருகன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஏ.ராக்கிமுத்து நிறை வுரையாற்றினார்.