திருப்பூர், ஜன.19- காவல் துறையினரால் படுகொலை செய்யப்பட்ட தோழர்கள் அஞ்சான், நாகூரான், ஞானசேகரன் ஆகியோரின் நினைவு தினம் வெள்ளியன்று கடைப்பி டிக்கப்பட்டது. தொழிலாளர்கள் விரோத கொள் கைகளை எதிர்த்து 1982 ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் தேதி நடத்தப்பட்ட அகில இந்திய வேலை நிறுத்த போராட் டத்தின் போது தஞ்சாவூர் மாவட்டம் திரு மெய்ஞானம் பகுதியை சேர்ந்த தோழர் கள் அஞ்சான், நாகூரான், ஞானசேகரன் ஆகியோர் காவல் துறையினரால் படு கொலை செய்யப்பட்டனர். இவர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் சிஐடியு மாவட்டக்குழு அலுவலகத் தில் கருத்தரங்கம் நடைபெற்றது. சிஐடியு மாவட்ட தலைவர் சி.மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த கருத் தரங்கத்தை சிஐடியு மாநில துணைத் தலைவர் எம்.மகாலட்சுமி துவக்கி வைத்து பேசினார். இதில், மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ், பொருளாளர் சம்பத், சிஐடியு கட்டுமான சங்க சம்மே ளன மாநிலச் செயலாளர் குமார் ஆகி யோர் பங்கேற்றனர். முடிவில் எல்லம் மாள் நன்றி கூறினார். காங்கேயம்: சிஐடியு தமிழ்நாடு அரசுப் போக்கு வரத்துக் கழகம் காங்கேயம் சார்பில் தியாகிகள் தினம் கடைப்பிடிக்கப் பட்டது. திருப்பூர் மண்டல நிர்வாகி நட ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நி கழ்வில், ஓய்வுபெற்றோர் நல அமைப்பு நாச்சிமுத்து, வின்சென்ட் ஆகியோர் தியாகிகள் தினத்தை நினைவுகூர்ந்து உரையாற்றினர். முடிவில், சிஐடியு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கிளை துணைத் தலைவர் காளி ராஜ் நன்றி கூறினார். அதேபோல திருப்பூர் பணிமனை முன்பும் நினைவுதினம் கடைப்பிடிக்கப் பட்டது.