districts

img

பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க தோழி திட்டம்

சென்னை, அக். 8- பாலியல் குற்றங்களி லிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் காவல் துறை சார்பில் தோழி  திட்டம் சென்னையில் துவங்  கப்பட்டுள்ளது.   பாலியல் குற்றங்களிலி ருந்து குழந்தைகளை பாது காக்கும் சட்டத்தின்படி பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் கற்பழிப்பு வழக்கு களில் பாதிக்கப்பட்ட பெண்க ளுக்கு அவர்கள் வசிக்கும் இடத்திற்கே நேரடியாகச் சென்று அவர்களுக்கு மன  ரீதியாகவும், உளவியல் ரீதி யாகவும், சட்ட ரீதியாகவும்  உதவி மற்றும் ஆலோசனை கள் வழங்கவும், அவர்கள் தன்னம்பிக்கையுடன் வாழ  பாதுகாப்பு வழங்கவும் ஒவ்வொரு அனைத்து மக ளிர் காவல் நிலையத்தி லிருந்தும் 2 பெண் காவல்  ஆளிநர்கள் வீதம் சென்னை  பெருநகர காவல் துறை யில் உள்ள 15 அனைத்து  மகளிர் காவல் நிலையங்களி ருந்தும் 70 பெண் காவல்  ஆளிநர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டு அவர்களுக்கு அதற்குறிய பயிற்சி மற்றும்  வழிகாட்டுதல்களை அளித்து மேற்படி பணியில்  அவர்களை ஈடுபடுத்த தோழி  என்ற பெயரிலான திட்டத்தை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் வட சென்னை காவல் கூடுதல்  ஆணையர் ஆர்.தினகரன், காவல் இணை ஆணையர் (மேற்கு) விஜயகுமார், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு காவல் துணை ஆளையர் எச்.ஜெயலட்சுமி, மனநல மருத்துவர்கள் சாலினி, லயோலா கல்லூரி பேராசிரியர் ஆண்ட்ரூ சேசு ராஜ் ஆகியோர் தோழி திட்டத்தில் செயல்படும் பெண் காவல் ஆளிநர்க ளுக்கு பயிற்சி அளித்தனர்.