பிப்.14 ஆம் தேதியன்று காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், பரிசுப் பொருட்கள் விற்பனை தீவிரமடைந்துள்ளதென வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். காதலர் தினம் என்றாலே நம் நினைவுகளுக்கு வருவது அழகிய பரிசுப் பொருட்களும், ரோஜா பூக்க ளும் தான். அந்தவகையில் ஒவ் வொரு ஆண்டும் காதலர் தினத் தன்று, ரோஜா பூக்களின் விலை கணிசமாக அதிகரித்து காணப் படும். தோராயமாக ஒரு ரோஜா பூ வழக்கமான நாட்களில் 20 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், காதலர் தின நாட்களில் 80 முதல் 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது. அதேபோல இதற்கு அடுத்தபடியாக காதலர் தினத்தில் அன்பை பரிமாறிக் கொள்ளும் வகையில், நினைவு பரிசுகளை வழங்குவது காலங்கால மாக இருந்து வருகிறது. அதன் அடிப்படையில் தங்கள் மனம் விரும் பும் நபர்களுக்கு, தங்கள் எண்ண ஓட்டங்களை பிரதிபலிக்கும் வகை யில், பல்வேறு வகையான பரிசுப் பொருட்களை வழங்குகின்றனர். இன்றைய நவீன யுக காதல் பல் வேறு படிநிலைகளை கடந்து இருந் தாலும், பல விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டாலும், சாதி மதத்தை வேரறுத்து, சமத்துவத்தை விதைக் கும் காதலர் தினமானது ஒவ்வொரு ஆண்டும் பிப்.14 ஆம் தேதி கொண் டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாமக்கல் மாவட் டம், பள்ளிபாளையம் - குமார பாளையம் சாலையில் செயல்படும் தனியார் பரிசுப் பொருள் அங்காடி யில், காதலர் தினத்தை ஒட்டி ஏராள மான பரிசுப் பொருட்கள் விற்ப னைக்கு வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து கடையின் உரிமையாளர் சரவணன் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினத்திற்கு சந் தையில் புதிதாக அறிமுகப்படுத் தப்படும் அனைத்து விதமான பரிசு பொருட்களையும் வாங்கி விற் பனை செய்து வருகிறோம். இந்த ஆண்டு ஒரு சில புதிய விதங்களில் காதலர் தின பரிசுப் பொருட்கள் வாங்கி வந்து வைத்துள்ளோம். காதலர் தினம் என்பதால், காத லர்கள் மட்டும் பரிசுப் பொருட்களை வாங்க எங்கள் கடைக்கு வருவ தில்லை. தந்தை மகள் பாசத்தை வெளிப்படுத்துவதற்கும், தங்கை, தம்பி பாசத்தை வெளிப்படுத்து வதற்கும் என காதல் உறவுகளை தாண்டி, பல்வேறு வகையில் அன்பை வெளிப்படுத்தும் தினமாக வும் இந்த பிப்.14 காதலர் தினத்தை பலரும் கொண்டாடுகின்றனர். அதன் அடிப்படையில் அனைத்து வகையான பரிசுப் பொருட்களும் குறைந்த விலையில் இருந்து கணி சமான விலை வரை உள்ள பரிசுப் பொருட்கள் விற்பனைக்கு வைக் கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை காதலர் தினம், பொங்கல் விழா போன்ற விசேச நாட்களில் வாழ்த்து அட்டைகள் அதிகளவு மக்களிடம் வரவேற்பு இருந்ததால் அது அதிகம் விற்பனையாகி வந் தது. தற்போது பெரும்பாலானோர் அதை விரும்பாததால், அதை நாங் கள் வாங்குவதையும் நிறுத்திவிட் டோம். சந்தையில் புதிதாக கிடைக் கப்பெறும் காதலர் தின பரிசுப் பொருட்களை மட்டுமே, குறிப்பாக அனைவரையும் கவரும் வகையி லான பரிசுப் பொருட்களை மட் டுமே விற்பனை செய்து வருகி றோம், என்றார். அன்பெனும் விதையை அகில மெங்கும் வீசி, சமத்துவத்தை போதிக்கும் காதலர் தினத்தை இன்முகத்தோடு வரவேற்போம்! ஆதலினால் காதல் செய்வீர் மானி டரே!, -பிரபாகரன்