திருப்பூர், மார்ச் 15- சிஐடியு உழைக்கும் பெண்கள் ஒருங்கி ணைப்புக் குழு சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அரசியல் பழகிடு! அறம் கொன்றோரை வீழ்த்திடு! என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. சிஐடியு உழைக்கும் பெண்கள் ஒருங்கி ணைப்புக் குழு இணை கன்வீனர் கே.எல் லம்மா தலைமையில் நடைபெற்ற இந்த கருத் தரங்கத்தில், அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் கே.சித்ரா வரவேற்றுப் பேசினார். சிஐடியு அகில இந்திய செயற் குழு உறுப்பினர் டி.டெய்சி, சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் ஆகியோர் அரசி யல் பழகிடு! அறம் கொன்றோரை வீழ்த்திடு! என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினர். இதில், சிஐடியு மாவட்டத் தலைவர் சி. மூர்த்தி, பனியன் சங்க மாவட்டச் செயலா ளர் ஜி.சம்பத், சிஐடியு பனியன் சங்க நிர்வாகி கே.சஜீனா, கட்டுமான சங்க நிர்வாகி ஆர்.பாரதி, உள்ளாட்சி ஊழியர் சங்க நிர்வாகி எஸ். சரஸ்வதி, தையல் தொழிலாளர் சங்க நிர்வாகி வி.லட்சுமி, சுமைப்பணி தொழிலாளர் சங்க நிர்வாகி ஆர்.சாந்தி, எல்ஐசி முகவர் வளர் மதி, டிபிசி எஸ்.புவனேஸ்வரி, கூட்டுறவு எஸ். யசோதா உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்டத் தலைவர் எஸ் மகாலட்சுமி நன்றி கூறினார்.