districts

img

பாலின சமத்துவம் குடும்பத்தில் இருந்து துவங்க வேண்டும் கைரதி 377 புத்தக வெளியீட்டில் தமுஎகச தலைவர்கள் பேச்சு

கோவை, ஜூலை 25- பாலின சமத்துவம் என்பது குடும்பத் தில் இருந்து தொடங்க வேண்டும். பாலி னத்தை சமமாக மதித்து நடக்க வேண் டும் என கைரதி 377 புத்தக வெளியீட் டில் தமுஎகச தலைவர்கள் உரையாற்றி னர்.  மாற்று பாலினத்தவரின் வாழ்வியல் சூழ்நிலை குறித்து எழுத்தாளர் மு. ஆனந்தன் எழுதிய “கைரதி 377” என்ற சிறுகதை தொகுப்பு வெளியீட்டு விழா கோவை கொடிசியா வளாகத்தில் ஞாயிறன்று நடைபெற்றது.  கவிஞர் மீ.உமா மகேஸ்வரி தலை மையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமுஎகச கோவை மாவட்ட செயலாளர் அ.கரீம் வரவேற்புரையாற்றினார். இதில், நிறங்கள் சிவா, உதவி பேராசி ரியர் கா.சோனேஷ்குமார், மெலினா மற்றும் சுபிக்சா ஆகியோர் நூலை  வெளியிட்டனர். நூலை கலை இலக்கிய பெருமன்றத்தின் கே.சுப்பிரமணியன், தமுஎகச தி.மணி, களம் அறிவன், தமிழ்  சங்கமம் செ.துரைசாமி, பொன்.இளவே னில் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்ட னர்.

சமமாக மதிக்க வேண்டும் 

இந்நிகழ்ச்சியில் தமுஎகச மதிப்புறு தலைவர் சா.தமிழ்ச்செல்வன் பேசுகை யில், திருநர் வாழ்வியலை எடுத்துக் கூறும் நூலாக கைரதி உள்ளது. திருநர் களுக்கு ஏற்படும் உடல் ரீதியான விஷ யங்களை நமது சமூகம் புரிந்து கொள்வ தில்லை. இதனால் அவர்கள் வன்முறை  மற்றும் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்ற னர். திருநர்களுக்கு அடிப்படை வாழ்வா தாரப் பிரச்சினைகள் ஏராளமாக உள் ளன. எல்லா பாலினத்தவரையும் சம மாக மதிக்க வேண்டும். திருநர்கள் பற்றி இதுவரை நாம் கண்டு கொள்ள வில்லை. ஒவ்வொரு பிரிவு மக்களை யும் பற்றி இலக்கியங்கள் வரையறுக் கப்பட வேண்டும். அப்போதுதான் சமூ கத்தில் மாற்றம் நிகழும். திருநர்களின் வாழ்வியல் குறித்து தமுஎகச மாநில மாநாட்டில் பேசுவதற்கான உந்துதல் இந்நூல் மூலம் துவக்கியுள்ளது, என் றார். 

குறைபாடு உள்ள சமூகம்

இதனைத்தொடர்ந்து தமுஎகச மாநில பொதுச்செயலாளர் ஆதவன் தீட் சண்யா பேசுகையில், சமீபத்தில் எங்கள்  ஊரில் நடைபெற்ற மருத்துவ முகாமில்  (புத்தக திருவிழா), ஒன்றரை கோடி ரூபாய்க்கு மருந்துகள் விற்பனையான தாக தெரிவித்தனர். ஒன்றரை கோடிக்கு  மருந்து வாங்கிக் கொள்வதற்கு எங்கள்  ஊரில் நோய் உள்ளதாக நாங்கள் புரிந்து  கொள்கிறோம். அதேபோல், கோவை யில் நடைபெறும் இந்த மருத்துவ முகாம் (புத்தக திருவிழா), பல உளவி யல் நோயாளிகளை சரி செய்யக்கூடிய உளவியல் சிகிச்சை முகாமாக உள்ளது.  ஒரு சமூகத்தின் அங்கமாக இருக்கக் கூடியவர்களை ஒதுக்கி வைத்துவிட்டு, எப்படி நாம் பொது சமூகம் என்று சொல்ல முடியும். அது பொது சமூக மாக ஏற்றுக் கொள்ள முடியாது. இது  குறைபாடு உள்ள சமூகம். இந்த சமூகத்தில் ஒரு குழந்தையை  வளர்ப்பதில் ஆணுக்கும், பெண்ணுக் கும் ஏராளமான பாரபட்சங்கள் உள் ளன. ஒரு பெண்ணை நாம்  எந்த கண் ணோட்டத்தில் பார்க்கிறோம் என்பதை பொறுத்தே, மாற்று பாலினத்தவரை நாம் எவ்வாறு பார்க்கிறோம் என்பது  தீர்மானிக்கப்படும். பாலின சமத்துவம் என்பது குடும்பத்தில் இருந்து தொடங்க  வேண்டும். பாலினத்தை சமமாக மதித்து நடக்க வேண்டும். மாற்று பாலி னத்தவர்கள் இந்த சமூகத்தில் வாழ  என்ன திட்டத்தை இந்த அரசு வைத்துள் ளது என்று தெரியவில்லை. அவர்க ளுக்கு வேண்டிய அடிப்படை தேவை களை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டி யது நமது கடமை. அவர்களது வாழ்வா தாரத்தை பற்றி புத்தகத்தில் பதிப்பித் தால் மட்டுமே, மாற்றுப்பாலினத்தவர் கள் குறித்தான தவறான புரிதலை நம்மால் அகற்ற முடியும், என்றார். முன்னதாக, இந்நிகழ்ச்சியில் கொங் குநாடு கலை அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் பத்மினி பிரகாஷ், தென்னிந் திய திருநங்கையர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் அருணா நாயக், விஜயா பதிப்பகத்தின்  மு.வேலாயுதம், பாரதி புத்தகாலத்தின் க.நாகராஜன், சிந்தனைக் கவிஞர் கவி தாசன் உட்பட பலர் கலந்து கொண்ட னர். இதைத்தொடர்ந்து திருநங்கைக ளின் வாழ்வியலை பேசும் நாடகம் நடை பெற்றது. நிறைவாக, முடிவில் தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர் சங்க மாவட்ட பொருளாளர் நா.அருள்மணி நன்றி கூறினார்.