சூலூர், ஜூலை 23- சூலூர் விமானப்படை தளத்தை சுற்றி கொட்டப்படும் குப்பைகள் காற்றில் பறப்ப தால் விமானங்களை இயக்க சிக்கல் ஏற்படு வதாக கூறி, சுற்றுவட்டார கிராம ஊராட்சி தலைவர்களை அழைத்து விமானப்படை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். கோவை மாவட்டம், சூலூரில் இந்திய ராணுவ படைக்கு சொந்தமான விமான படைத் தளம் உள்ளது. இங்கு விமானங்கள் பழுது பார்க்கும் பணிமனை ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், விமானப்படைக்கு சொந்தமான தேஜஸ் உள்ளிட்ட அதிநவீன விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் இங்கு பயிற்சி மற்றும் பாதுகாப்பு ஒத்தி கையில் ஈடுபடுவது வழக்கம். ஆடி மாதம் துவங்கிய நிலையில், மேற்குத்தொடர்ச்சி மலையின் பாலக்காடு கணவாய் வழியாக அதிவேகமாக காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக சூலூர் விமானப்படை தளத்தை சுற்றியுள்ள கிராமங்களில், பொது இடங்க ளில் கொட்டப்படும் குப்பைகள் மேலே எழுந்து சுமார் 30 அடி உயரம் வரை பறக் கின்றன. இதனால் திருச்சி சாலையில் செல் லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள் ளாகி வருகின்றனர். இந்த குப்பைகள் விமா னப்படை தளத்திற்கு உள்ளேயும் பறந்து செல்வதால் விமானங்களை இயக்குவதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும், கொட்டப்படும் அழுகிய முட்டை கள் மற்றும் கோழி கழிவுகளை உண்பதற்காக காகம் உள்ளிட்ட அதிக அளவிலான பறவை கள் விமானப்படைத்தளத்தை சுற்றி வலம் வருகின்றன. பறவைகள் நடமாட்டத்தால் விமான விபத்துக்கள் ஏற்படவும் வாய்ப்பு கள் அதிகம். இதனால் விமானப்படை தளத்தை சுற்றி குப்பைகள் பொது இடங்களில் கொட் டப்படுவதை தடுக்கும் நடவடிக்கையாக சூலூர் காவல் நிலையத்தில் விமானப்படை அதிகாரிகள், சுற்றியுள்ள கிராம ஊராட்சி தலைவர்களை அழைத்து ஆலோசனை மேற் கொண்டனர். மாவட்ட துணை காவல் கண்கா ணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், பொது இடங்களில் குப்பைகள் கொட்டப்படுவதை கட்டுப்படுத்த தனி குழுக்கள் அமைப்பதுடன், விளம்பர பதா கைகள் மற்றும் கேமராக்கள் வைத்து கண்கா ணிக்க வேண்டும் என விமானப்படை சார்பில் அறிவுறுத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் சூலூர் விமானப்படை தளத்தை சுற்றியுள்ள 37 ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண் டனர்.