திருப்பூர், ஏப். 10 – திருப்பூர் மாநகராட்சி மாமன்றக் கூட்டத் தில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் கடும் எதிர்ப் புக்கு இடையே குப்பை அகற்றும் பணி முழு மையாக தனியாருக்குத் தாரை வார்க்கும் தீர் மானம் நிறைவேற்றப்பட்டது. திருப்பூர் மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர் ந.தினேஷ்குமார் தலைமையில், ஆணையர் பவன்குமார் கிரியப்பனவர் முன்னிலையில் திங்களன்று மாமன்றக் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை மேயர் ரா.பாலசுப்பிரமணியம், மண்ட லத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், திருப்பூர் மாநகராட் சிக்கு உட்பட்ட 60 வார்டுகளிலும் திடக்கழிவு மேலாண்மை (குப்பை அகற்றம்) திட்டப் பணிகளைச் செயல்படுத்துவதற்கு தேவை யான வாகனங்கள் மற்றும் பணியாளர் களை தனியார் மூலம் நிறைவேற்றும் தீர்மா னம் எண் 734 முன்மொழியப்பட்டது. இதில் ஆண்டுக்கு ரூ.96 கோடியே 25 லட்சம் மதிப் பில் ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப் போவ தாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்றக்குழுத் தலைவர் எஸ்.ரவிச்சந்தி ரன், இந்த தீர்மானம் குறித்து மேயர் விளக்கம் அளிக்கும்படி கேட்டுக் கொண்டார். இதற்கு பதிலளித்த மேயர் தினேஷ்குமார், ஏற்கெ னவே 1 மற்றும் 4ஆவது மண்டலங்களில் திடக் கழிவு மேலாண்மை பணி தனியார் மூலமும், 2, 3ஆவது மண்டலங்களில் சரி பாதி மாநக ராட்சி மற்றும் தனியார் மூலம் நிறைவேற்றப் படுகிறது. தமிழ்நாடு முழுவதும் சீரான முறை யில் எடை அளவு (டன்னேஜ்) அடிப்படையில் திடக்கழிவு அகற்றத்துக்கு தனியாரிடம் ஒப்ப டைக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 2 ஆண்டு பரிசீலனை செய்து திராவிட மாடல் ஆட்சி சிறந்த இந்த திட்டத்தை கொண்டு வந் துள்ளது. மூன்றாண்டு ஒப்பந்தம் விட வேண்டி யதில் முதல் ஆண்டு மட்டும் தற்போது அனு மதி வழங்கி பின்னர் அவர்களது செயல் பாட்டைப் பார்த்து ஒப்பந்த அனுமதி வழங்கப் படும், என்றார்.
எஸ்.ரவிச்சந்திரன் பேசுகையில், நிரந்த ரப் பணியாளர்கள் மூலம் திடக்கழிவு அகற் றும் பணியை மேற்கொள்வதே சிறந்த முறை. தனியாரிடம் ஒப்படைப்பது ஊழலுக்கும், லஞ்ச லாவண்யத்துக்கும் வழிவகுக்கும். எனவே இத்தீர்மானத்தை நிறைவேற்றக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்தார். எனி னும் மாநில அரசின் கொள்கை முடிவு என்ப தால் இதை நிறைவேற்ற வேண்டும் என்று மேயர் கூறினார். திடக்கழிவு மேலாண்மை பணியை முழு மையாக தனியாருக்கு ஒப்படைக்கும் இத் தீர்மானத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எதிர்த்து வெளிநடப்பு செய்வதாகக் கூறி அக் கட்சி மாமன்ற உறுப்பினர்கள் மன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர் ஆர்.மணிமேகலை எழுந்து, திடக்கழிவு மேலாண்மை பணியை தனியாருக்குத் தாரை வார்க்கும் இத்தீர்மா னத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க் கிறது என்று கூறினார்.
கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாமன்ற உறுப்பி னர்கள் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், ஆளும் கட்சியைச் சேர்ந்த மண்டலத் தலை வரான கோவிந்தசாமி, தனியாரிடம் கவுன்சி லர்கள் வேலை வாங்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார். அதேபோல் அதிமுக குழுத் தலைவர் அன்பகம் திருப்பதி எழுந்து, மாமன்ற உறுப்பினர்களுக்கு குப்பை கவுன்சி லர்கள் என்றுதான் பெயர். இந்த பணியை யும் தனியாரிடம் கொடுத்துவிட்டால் அவர்க ளிடம் மாமன்ற உறுப்பினர்கள் வேலை வாங்க முடியுமா? என்று கேள்வி எழுப்பி னார். மேலும் திடக்கழிவு மேலாண்மை பணியை தனியாரிடம் ஒப்படைப்பதில், கழிவு நீர் வடிகால் சுத்தம் செய்யும் பணி குறிப்பி டப்படவில்லை. இது பெரிய பிரச்சனையாக உள்ளது என்றும் அனைத்து கட்சி மாமன்ற உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். கம்யூனிஸ்ட் கட்சிகளின் எதிர்ப்பு, ஆளும் கட்சி மற்றும் அதிமுகவினரின் ஆட்சேபங்க ளுக்கு இடையே இத்தீர்மானம் நிறைவேற் றப்பட்டது.