ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அமைச்சர் ஆய்வு
ஈரோடு, அக். 5- சென்னிமலை ஒன்றியம், எக்கட்டாம்பாளையம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தினை பார்வையிட்டு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு மேற்கொண்டார். ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஊராட்சி ஒன்றியத் திற்குட்பட்ட பகுதிகளில் செவ்வாயன்று மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமையில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ரூ.59.24 லட்சம் மதிப்பீட்டி லான புதிய திட்டப்பணியினை துவக்கி வைத்தார். முன்னதாக, சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் ரூபவ் எக்கட்டாம்பாளையம் ஊராட்சி அய்யம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள வெப்பிலி ஒழுங்குமுறை விற்பனை கூடத் தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஒழுங்கு முறை விற்பனை கூட மையத்தில் விவசாயிகளின் கோரிக்கை யின்படி, குளிர்பதன கிடங்கு அமைப்பது தொடர்பாக மேற் கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அலுவலர் களிடம் கேட்டறிந்தார்.
“ஆட்டோ தம்பி” : கோவைக்கு வருகிறது ஆட்டோ நூலகம்
கோவை, அக். 5 - ஆட்டோ தம்பி என்ற பெயரில் ஆட்டோவில் நம்மை தேடி வரும் நூலகத்தை மாநகர காவல் ஆணையர் துவங்கி வைக்க உள்ளார். கோவையில் உள்ள பெரும்பாலான பொதுமக்கள் தங்களது பயணத்திற்கு ஆட்டோவை பயன்படுத்தி வரு கின்றனர். அவ்வாறாக ஆட்டோவில் பயணிப்பவர்களும், ஆட்டோ இயங்காத நேரத்தில் ஓட்டுநர்களும் செல்போனை பார்த்துக் கொண்டிருப்பதையே வழக்கமாகக் கொண்டி ருக்கின்றனர். இதனிடையே பயணிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் விதமாக ஆட்டோ தம்பி என்ற பெயரில் ஆட்டோ நூலகம் தொடங்கப்படவுள்ளது. டாக்டர் கலாம் பவுண்டேசனின் முயற்சியில் ரூ.20 ஆயிரம் மதிப்பில் இந்த ஆட்டோ நூலகம் “ஆட்டோ தம்பி” என்ற பெயரில் துவங்கப்பட உள்ளது. இந்த ஆட்டோவில் புத்த கங்கள், நாவல்கள் இடம்பெறுகின்றன. சோதனை அடிப் படையில் துடியலூரை சேர்ந்த சையது என்பவரின் ஆட்டோ வில் இந்த ஆட்டோ நூலகம் துவங்கப்பட உள்ளது. “ஆட்டோ தம்பி” என்ற இந்த ஆட்டோ நூலகத்தை தொலைபேசி மூலம் அழைத்து தங்களது இருப்பிடத்திற்கு வரவழைத்து பயணிக்கலாம் என்றும், இதனை வரும் அக்.7ஆம் தேதி(நாளை) மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவங்கி வைப்பார் என்றும் டாக்டர் கலாம் பவுண்டேசனின் நிறுவனர் கிஷோர் தெரிவித் துள்ளார்.
மது அருந்த பணம் கேட்டு தொழிலாளி மீது கொடூர தாக்குதல்
கோவை, அக்.5- கோவையில் மதுகுடிக்க பணம் கொடுக்காததால் ஆத்திர மடைந்த அடையாளம் தெரியாத நபர்கள் தொழிலாளி ஒரு வரை பாட்டிலால் தாக்கி, ரூ.5 ஆயிரம் பணத்தை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் பிந்துகுமார் (35). இவர் கோவை மாவட்டம், போத்தனூர் அருகே உள்ள திருமுருகன் நகரில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வருகிறார். இந் நிலையில், இவர் தனது நண்பர் ஒருவருடன் எல்ஐசி காலனி யில் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல், பிந்துகுமாரிடம் மது குடிக்க பணம் கொடுக்கும்படி கேட்டனர். ஆனால் அவர் மறுத்துவிட்டதால் ஆத்திரமடைந்த 4 பேரும் சேர்ந்து அங்கிருந்த பீர் பாட்டிலை உடைத்து பிந்துகுமாரின் கழுத்தில் குத்தினர். இதன்பின் அவரிடமிருந்த ரூ.5 ஆயிரம் பணத்தை பறித்துகொண்டு தப்பிச்சென்றனர். இதற்கி டையே ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டி ருந்த பிந்துகுமாரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து போத்தனூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தொழிலாளியை தாக்கி, பணத்தை பறித்து தப்பி யோடியவர்களை தேடி வருகின்றனர்.
பழைய பள்ளி கட்டிடம் இடித்து அகற்றம்
உதகை, அக்.5- கோத்தகிரியில் பழைய பள்ளி கட்டிடம், ஆட்சியரின் உத்தரவின்படி இடித்து அகற்றப்பட்டது. கடந்த ஆண்டு நெல்லையில் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் பழுதடைந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் மாண வர்கள் உயிரிழந்தனர். அதைத்தொடர்ந்து தமிழகம் முழு வதும் அனைத்து மாவட்டங்களிலும் பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை கண்டறிந்து, அதனை இடித்து அகற்ற அதி காரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதன்படி நீலகிரி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி, கோத்தகிரியில் 65 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்த பழமையான கட்டிடம் ஒன்று கடந்த ஆண்டு இடித்து அகற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பள்ளி விடுமுறை நாட்களில், மற்றொரு பழைய கட்டிடத்தை இடிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி பள்ளி வளாகத்தில் இருந்த மற்றொரு பழைய கட்டிடத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் இடிக்கும் பணி நடை பெற்றது.
விபத்துகளில் 2 பேர் பலி
கோவை, அக்.5- கோவை மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட விபத்துகளில் 2 பேர் உயிரிழந்தனர். தருமபுரியைச் சேர்ந்தவர் அவின்குமார் (26). இவர் கோவையில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வரு கிறார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் கோவை - அவிநாசி சாலை, பீளமேடு வரதராஜா மில் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழி யாக வந்த பயணிகள் ஆட்டோ அவின்குமார் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவின்குமார் சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் சுண்டம்பாளைத்தைச் சேர்ந்தவர் கருப்பு சாமி (40). இவர் தெலுங்குபாளையம் புதூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் கருப்புசாமி மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த கருப்பு சாமியை அருகிலிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன ளிக்காமல் கருப்புசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
ஆடுகளை கடித்த சிறுத்தை
கோவை, அக். 5 - கோவை தடாகம் அருகே காளையனூர் வாட்டர் கம் பெனி பகுதியில் செவ்வா யன்று இரவில் புகுந்த சிறுத்தை அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் கட்டி வைத்திருந்த ஆட்டுக் குட்டியை தாக்கியதில் 2 ஆடுகள் பலியாகின. அங்கி ருந்தவர்கள் துரத்தி அடித்த தால் ஆடுகளை விட்டு விட்டு சென்று விட்டது. மனிதர் களைத் தாக்கும் முன் சிறுத் தைகளை பிடிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்த கோவை வனத்துறையினர் அங்கு பதிந்திருந்த சிறுத் தையின் காலடித் தடங்களை பதிவு எடுத்துச் சென்றதுடன், அப்பகுதியில் கண்காணிப்பு கேமராவை பொருத்திச் சென்றுள்ளனர்.
“ட்ராக் மை சோனா” மொபைல் செயலி அறிமுகம்
சேலம், அக்.5- சோனா ஸ்டார் இன் னோவேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் “ட்ராக் மை சோனா” என்கிற மொபைல் செயலி அறி முகம் செய்துள்ளது. இதற் கான அறிமுக விழா சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் உள்ள சோனா கேரேஜ்யில் நடைப்பெற்றது. இந்த செயலியின் மூலம் பழுதடைந்துள்ள பொரு ளின் க்யூஆர் கோட்டினை ஸ்கேன் செய்து எந்த வித மான பழுது உள்ளது என்ப தை பதிவு செய்தால். அது எந்த இடத்தில் இருக்கின்ற பொருள் பழுதடைந் துள்ளது, எந்த விதமான நிலையில் பழுதாகியுள்ளது என்ற தகவல்கள் அது சம்பந்தப்பட்ட ஊழியர் களுக்கு சென்றடையும். அந்த குறைகளை குறிப் பிட்ட நேரத்தில் சரி செய்ய வில்லை எனில் அது அடுத்து நிலையில் உள்ள அதிகாரி களுக்கு தகவல் சென்ற டையும். இந்த செயலி யானது சேலத்தில் உருவாக் கப்பட்டது. இதன் மூலம் பலருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றார்.
திருப்பூரில் குவிந்த குப்பை உடனடியாக அகற்றம்
திருப்பூர், அக். 5- திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு மாநகரின் பல் வேறு பகுதிகளில் சேர்ந்துள்ள குப்பைகளை இரவோடு இர வாக அப்புறப்படுத்தும் பணியை மாநகராட்சி மேயர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். திருப்பூரில் அக்டோபர் 4ஆம் தேதி ஆயுத பூஜை கொண் டாடப்பட்டது. தொழில் நிறுவனங்கள் அதிகம் நிறைந்த திருப் பூர் மாவட்டத்தில் ஆயுத பூஜை விழா மிக விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதற்காக பின்னலாடை நிறு வனங்கள் முதல் வீடுகள் வரை சுத்தம் செய்து வாழை மரக்கன் றுகள் வாங்கி வீடுகளின் வாயில் மற்றும் நிறுவனங்களின் நுழைவாயில் கட்டி பூஜைகள் செய்து வழிபடுவது வழக் கம். இதற்காக திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக சாலையோர கடைகள் அமைக் கப்பட்டு வாழை மரக்கன்றுகள், பூக்கள், பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. விற்பனை நிறைவடைந்ததை அடுத்த கொண்டு வந்திருந்த வாழை மரங்கள் விற்காததை ஆங் காங்கே வியாபாரிகள் விட்டுச் சென்றனர். இதனால் மாநகரின் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் தேங்கி இருந்தது. இதனை இரவோடு இரவாக அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட் சியை சேர்ந்த துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்த துப்புரவு பணியினை மாநகராட்சி மேயர் தினேஷ் குமார், மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி உள் ளிட்டோர் நேரில் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாத வகையில் குப்பைகளை அப்புறப்படுத் தும் பணியை ஆய்வு செய்தனர்.
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ. 82 லட்சத்திற்கு பருத்தி ஏலம்
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ. 82 லட்சத்திற்கு பருத்தி ஏலம் தாராபுரம், அக். 5- மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ. 82 லட்சத் திற்கு பருத்தி ஏலம் போனது. திருப்பூர் மாவட்டம், மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூட முதுநிலை செயலாளர் ஆர்.பாலச்சந்திரன் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, மூலனூர் ஒழுங் குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி விற்பனை மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் திருப்பூர், கருர், திருச்சி, திண்டுக் கல், ஈரோடு, கோவை மாவட்டங்களை சேர்ந்த 443 விவசாயி கள் பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். அதேபோல் பருத்தியை கொள்முதல் செய்ய திருப்பூர், திண் டுக்கல், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்கள் மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர். அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ. 9 ஆயிரத்து 229 க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ. 6 ஆயிரத்து 240 ம் சராசரி விலை யாக ரூ. 7 ஆயிரத்து 750 க்கும் விலை போனது. மொத்தம் 3460 மூட்டைகள் 1 ஆயிரத்து 6 குவிண்டால் பருத்தி ரூ. 82 லட்சத்து 75 ஆயிரத்து 026 க்கு விற்பனையானது. இந்த ஏலத்தில் 12 வணி கர்கள் பங்கேற்றனர். ஏலத்திற்கான ஏற்பாடுகளை கண்கா ணிப்பாளர் சிவக்குமார் செய்திருந்தார்.
10 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருக்கும் குடும்பங்களுக்கு பட்டா வழங்கிட விதொச ஒன்றிய மாநாடு தீர்மானம்
உடுமலை, அக். 5 - கொசவம்பாளையம் கிராமத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வருகிற 5 ஏழைக்குடும்பங்களுக்கு உடனடியாக பட்டா வழங்கிட, அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் குடிமங்கலம் ஒன் றிய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட் டது. அகில இந்திய விவசாயத் தொழிலா ளர்கள் சங்கம் ஒன்றிய மாநாடு கமிட்டி உறுப் பினர் பழனிச்சாமி தலைமையில் கொங்கல் நகரம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநாட்டை துவக்கி வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் சசிகலா உரையாற்றினார். தமிழ்நாடு விவசா யிகள் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் ஸ்ரீதர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் ஒன்றிய செயலாளர் ஓம்பிரகாஷ் ஆகி யோர் வாழ்த்திப் பேசினார். இம்மாநாட்டில் தமிழக அரசு அறிவித்துள்ள இலவச வீட்டுமனை வழங்கும் திட்டத்தின் கீழ் கொங்கல்நகரம் ஊராட்சியில் வீடில்லாத 25 விவசாயத் தொழிலாளர் குடும்பங் களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டாவழங்கிடவேண்டும்.முக வனூர் ஊராட்சி கொசவம்பாளையம் கிராமத் தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வருகிற 5 ஏழைக்குடும்பங்களுக்கு உடனடி யாக பட்டா வழங்கிடவேண்டும். முதியோர் ஓய்வூதியம் 60 வயதான அனைவருக்கும் வழங்கிடவேண்டும். பெதப்பம்பட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி 24மணி நேரமும் மருத்துவர் கள்,செவிலியர்கள் பணியில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டது. புதிய நிர்வாகிகள் 11 பேர் கொண்ட புதிய கமிட்டி தேர்வு செய்யப்பட்டது. ஒன்றிய தலைவராக வலுப் பூரான், செயலாளராக தம்புராஜ், பொருளா ளராக பழனிச்சாமி, துணைத்தலைவராக முருகன், துணைச்செயலாளராக சிவா ஆகி யோர் தேர்வுசெய்யப்பட்டனர். மாநாட்டை நிறைவு செய்து மாவட்டச்செயலாளர் ஏ.பஞ்ச லிங்கம் உரையாற்றினார்.
திருப்பூரில் அக்.10இல் தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம் சிஐடியு முடிவு
திருப்பூர், அக். 5 - திருப்பூர் மாநகராட்சி மற்றும் நகராட் சிகளில் வேலை செய்யும் ஒப்பந்த தினக்கூலி தூய்மை பணியாளர்க ளுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவித்த ஊதிய உயர்வு வழங்கக் கோரி வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று சி.ஐ.டி.யு முடிவு செய்துள்ளது. செவ்வாய்க்கிழமை திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தின் மாவட்டக்கு ழுக் கூட்டம் நடந்தது. இதில் திருப்பூர் மாநகராட்சி மற்றும் உடுமலை, பல்ல டம், திருமுருகன் பூண்டி, வெள்ளகோ வில், காங்கயம், தாராபுரம் ஆகிய நகராட்சிகளில் பணி செய்யும் தற்காலிக ஒப்பந்த தூய்மைப் பணியாளர், குடி நீர் பணியாளர், ஓட்டுநர் மற்றும் டி.பி.சி ஊழியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறி வித்துள்ள ஊதியம் உடனடியாக வழங் கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி வரும் அக்.10 ஆம் தேதி வேலைநிறுத்தம் செய்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத் துவது என முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் சங்கத்தின் மாவட்ட தலைவர் பி.பழனிசாமி, மாவட்டச் செய லாளர் கே.ரங்கராஜ், மாவட்ட துணைத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன் உள் பட மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
4ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை
திருப்பூர், அக். 5 - திருப்பூர் நகரில் சினிமா தியேட்டர்களைத் தவிர பொழுது போக்குவதற்கு வேறு இடங்கள் இல்லை. எனவே திருப்பூர் பார்க் ரோட்டில் உள்ள மாநக ராட்சி வெள்ளி விழா பூங் காவை மட்டுமே பெரும்பா லானோர் நாடி வருகின்ற னர். விடுமுறை மற்றும் பண் டிகை நாட்களில் இங்கு கூட் டம் அதிகளவில் இருக்கும். அதன்படி ஆயுதபூஜை விடு முறை தினமான செவ்வா யன்று ஒரே நாளில் 4000 டிக்கெட்டுகள் விற்பனையா னதாக பூங்காவில் உள்ள டிக் கெட் விற்பனையாளர் தெரிவித்துள்ளார்.
அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மனைவி பலி, கணவர் படுகாயம்
அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மனைவி பலி, கணவர் படுகாயம் திருப்பூர், அக். 5- அவிநாசி அருகே இருசக்கர வாகனத்தின் மீது அடையா ளம் தெரியாத வாகனம் மோதியதில் மனைவி உயிரிழந்தார். கணவா் படுகாயமடைந்தார். திருப்பூா் மாவட்டம், செட்டிபாளைம் அருகே உள்ள வெங் கமேட்டைச் சோ்ந்தவா் சௌந்தரபாண்டியன் (54). இவரது மனைவி ஈஸ்வரி (40). இவா்கள் இருவரும் கோவையில் இருந்து திருப்பூா் நோக்கி இருசக்கர வாகனத்தில் திங்கள்கி ழமை சென்று கொண்டிருந்தனர்.அவிநாசி வேலாயுதம் பாளையம் அருகே சென்றபோது, எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் செளந்தரபாண்டியனின் இருசக்கர வாக னத்தின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதில், ஈஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம டைந்த சௌந்தரபாண்டியனை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இன்று மாசு கட்டுப்பாட்டு வாரிய குறைதீர் கூட்டம்
திருப்பூர், அக். 5 - திருப்பூரில் மாசு கட்டுப்பாட்டு வாரிய குறை தீர் கூட்டம் வியாழக்கிழமை நடைபெறு கிறது. திருப்பூர் மாவட்டத்தில் இரண்டு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் செயல்படு கிறது. திருப்பூர் வடக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம், டவுன் ஹால் அருகில் , ரயில்வே நிலையம் எதிரில் உள்ள குமரன் வணிக வளாகத்தில் உள்ளது. திருப்பூர் தெற்கு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் பல்லடம் பொள்ளாச்சி மெயின் ரோட்டில் உள்ளது. திருப்பூர் சுற்று வட்டார பகுதியில் நிலத்த டிநீர் பாதித்துள்ளது. சாய ஆலைகளை ஆய்வு செய்யுங்கள் என்று பல முறை கூறியும், கிராம சபையில் பல முறை தீர்மா னம் செய்தும் பயனில்லை. ஊராட்சி நிர்வாகம்தனக்கும், இதற்கும் எந்த சம்பந்த மும் இல்லை என்ற நிலையில் செல்கிறது. ஊராட்சி சார்பில் எந்த மேல் நடவடிக்கை யும் எடுக்கப்பட்டதாக ஆதாரம் இல்லை. ஆகவே இனியும் பொறுத்திருக்காது, இன்று நடக்கும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய குறைதீர்வுக் கூட்டத்தில் மக்கள் தங்கள் குறைகளை புகாராக எழுதி தெரிவிக்கும் படி ஊழல் ஒழிப்பு மற்றும் சட்டப் பாதுகாப்புக் குழுவை சேர்ந்த இரா.சதீஷ்குமார் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
திருப்பூர் மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகள்
திருப்பூர், அக். 5- பல்லடம் அருகே ஊஞ்சபாளையத்தில் திருப்பூர் ஸ்கேட்டிங் அசோசியேன் மற்றும் தனியார் ஸ்கேட்டிங் அகாடமி சார்பில் திருப் பூர் மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டி கள் நடைபெற்றது. இதில் பல்லடம், திருப் பூர், தாராபுரம், காங்கேயம் உடுமலை, உள் ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் 6 வயது முதல் 16 வயது வரையிலான மாணவ, மாண விகள் கலந்துகொண்டனர்.போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பல்லடம் காவல் ஆய்வாளர் மணிகண்டன் பதக்கங்களை அணிவித்து பாராட்டினார்.
சிறப்பு ரயில் இயக்கம்
கோவை, அக்.5- தீபாவளி மற்றும் பண்டிகைகால விடுமுறையையொட்டி கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் கோவையிலிருந்து சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து சேலம் கோட்டம் ரயில்வே நிர்வாகம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தீபாவளி மற்றும் பண்டிகை கால விடுமுறையை முன்னிட்டு பயணி கள் நெரிசலை தவிர்க்கும் வகையில், கோவை - உத்தரப் பிரதேசம் மாநிலம், கோராக்பூர் இடையிலான சிறப்பு ரயில் (எண்:05304) அக்.11 ஆம் தேதி முதல் நவ.8 ஆம் தேதி வரை இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் காலை 4.40 மணிக்கு கோவையிலிருந்து புறப்பட்டு, 3 ஆவது நாள் காலை 8.35 மணிக்கு கோராக்பூரை சென்றடையும். இதேபோல் கோராக் பூர் - கோவை இடையிலான சிறப்பு ரயில் (05303), கோராக்பூ ரில் இருந்து அக்.8 ஆம் தேதி முதல் நவ.5 ஆம் தேதி வரை இயக்கப்படுகிறது. இந்த ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர், நெல்லூர், விஜயவாடா, நாக்பூர், போபால், கான்பூர் சென்ட்ரல், கஹளி லபாத் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். ரயிலில் இரண்டம் வகுப்பு ஏசி பெட்டி-1, மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டி-2, படுக்கை வசதி பெட்டி-10, சாதாரண பெட்டி-7 இணைக்கப் பட்டுள்ளது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாழைகளை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானை
ஈரோடு, அக்.5- பவானிசாகர் அருகே வாழை தோட்டத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்திய ஒற்றை யானையால் விவசாயி கள் அதிர்ச்சியடைந்தனர். ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே உள்ள காராச்சி கொரை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி எழில். இவர் தன்னு டைய தோட்டத்தில் வாழை பயிரிட்டுள்ளார். அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், நள்ளிரவில், பவானிசாகர் வனப் பகுதியில் இருந்து ஒற்றை யானை எழிலின் வாழை தோட் டத்தில் புகுந்து வாழைகளை மிதித்து சேதப்படுத்தியது. யானை பிளிறல் சத்தம் கேட்டு வீட்டில் தூங்கி கொண்டி ருந்த எழில் எழுந்து தோட்டத்துக்கு சென்று பார்த்தபோது யானை தோட்டத்திற்குள் புகுந்து வாழைகளை சேதப் படுத்தி வருவது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து சத்தமிட அருகாமையில் உள்ள விவசாயி கள் திரண்டு அனைவரும் அங்கு வந்து குரல் எழுப்பி யும், தீப்பந்தம் காட்டியும் யானையை காட்டுக்குள் விரட்டினர். அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த வாழை பயிர் களை காட்டு யானை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ரூ.8.50 லட்சம் பண மோசடி நூல் வியாபாரி போலீசில் புகார்
கோவை, அக்.5- ரூ.8.50 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டவர் மீது நடவ டிக்கை எடுக்கக்கோரி திருப்பூரைச் சேர்ந்த நூல் வியாபாரி ஒருவர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை சேர்ந்த நூல் வியாபாரி பரத்குமார் (26). இவர் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது, கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை உடையாம்பாளையத்தை சேர்ந்த புருஷோத்தமன் என்னை தொடர்பு கொண்டு, தான் அந்த பகுதியில் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் தலைமை அதிகா ரியாக பணியாற்றி வருவதாக அறிமுகம் செய்து கொண்டார். இதன்பின் அவர் தனது நிறுவனத்தில் ரூ.11 லட்சம் மதிப்பி லான நூல் தேவைப்படுவதாகவும், அதற்கான பணத்தை 7 நாட்களுக்குள் அனுப்பிவிடுவதாகவும் கூறினார். இதனை உண்மையென நம்பிய நான், ரூ.11 லட்சம் மதிப்பிலான நூல் களை அனுப்பி வைத்தேன். அவர் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை மட்டுமே எனது வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைத் தார். மீதி ரூ.8.50 லட்சம் பணத்தை தராமல் ஏமாற்றிவிட்டார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட் டுத்தர வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. அப்புகாரின் பேரில் பீளமேடு காவல் துறையினர் மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.
நாளை பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட தினம்: அமைச்சர்கள் பங்கேற்பு'
கோவை, அக்.5- பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட தினம் வெள்ளியன்று (நாளை) கொண்டாடப் பட்ட நிகழ்ச்சியில் 3 தமிழக அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். தமிழக சட்டபேரவையில் 2021 – 22 ஆம் நிதி யாண்டின் செய்தி மக்கள் தொடர்பு துறை யின் மானியக்கோரிக்கையில், மாநில செய் தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறி விப்பிற்கிணங்க, பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட தினம் அக்.7 ஆம் தேதியன்று (நாளை) பொள்ளாச்சி – உடுமலை சாலை யில் உள்ள மகாராஜா மகாலில் கொண்டா டப்பட உள்ளது. இதில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.கே.பழனிச்சாமி கவுண்டர், பாரத ரத்னா சி.சுப்பிரமணியம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி நா. மகாலிங்கம், முன்னாள் நீர்வளத்துறை அமைச் சர் பத்மபூஷன் டாக்டர் கே.எஸ்.ராவ் ஆகி யோரது திருவுருவப்படத்திற்கு செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மின்சா ரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல் விழி செல்வராஜ் ஆகியோர் அரசின் சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தவுள்ளனர். இந் நிகழ்ச்சியில் பரம்பிக்குளம் ஆழியாறு பாச னத்திட்டத்தில் பயன்பெறும் தொகுதிகளின் எம்.பி.,க்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
சுருக்கு கம்பியில் சிக்கிய சிறுத்தை
உதகை, அக்.5- பந்தலூர் அருகே சுருக்கு கம்பியில் சிக்கி மீட்கப்பட்ட சிறுத்தைக்கு மருத்துவ குழு வினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்ற னர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் தாலுகா, அய் யன்கொல்லி அருகே அத்திச்சால் பகுதி யில் தனியார் தோட்டத்தில் வைத்திருந்த சுருக்கு கம்பியில் சிக்கி கடந்த அக்.1 ஆம் தேதி பெண் சிறுத்தை ஒன்று தவித்துக் கொண்டிருந்தது. இதையறிந்த வனத்துறை யினர் நேரில் சென்று சிறுத்தையை மீட்ப தற்கான பணிகளை தொடங்கினர். இருப்பி னும் சிறுத்தை அச்சத்தில் வனத்துறை யினரை நோக்கி ஆக்ரோஷமடைந்தது. இதைத்தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் வரவழைக்கப்பட்டு, மயக்க ஊசி செலுத் தப்பட்டது. இதையடுத்து மயக்கமடைந்த சிறுத்தையை இரும்பு கூண்டில் வனத்துறை யினர் அடைத்து முதுமலை புலிகள் காப்பக தெப்பக்காடு கால்நடை மருந்தகத்துக்கு கொண்டு சென்றனர். இதன்பின் கால்நடை மருத்துவ குழுவினர் ஆய்வு செய்தபோது, அதன் உடலில் பல இடங்களில் காயங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் சிறுத்தையால் சரிவர நடக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து சென்னையில் இருந்து கால்நடை மருத்துவர் ஸ்ரீதரன் முதுமலைக்கு வரவழைக்கப்பட்டார். மேலும் ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் எக்ஸ்ரே கருவிகளும் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில், சிறுத்தையின் உடல் நலன் குறித்து வனச்சரகர் மனோஜ் கூறுகையில், சுருக்கு கம்பியிலிருந்து காப்பாற்றப்பட்ட சிறுத்தை தற்போது நன்றாக உள்ளது. இருப் பினும் சுருக்கு கம்பியில் சிக்கியிருந்ததால் அதன் பின்னங்கால்களின் செயல்பாடுகள் சற்று குறைவாக உள்ளது. சிறுத்தையின் உடல் பாகங்களை ஆய்வு செய்து, அதனடிப் படையில் சிகிச்சை அளிக்கப்படும். நன்கு குணமானவுடன் வனப்பகுதிக்குள் விடப் படும், என்றார்.
உதகை தாவரவியல் பூங்காவில் பூத்துக் குலுங்கும் மலர்கள்
உதகை, அக். 5- உதகை தாவரவியல் பூங்காவில் பூத்துக்குலுங்கும் மலர் களை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். நீலகிரி மாவட்டம், உதகையில் இரண்டாவது சீசன் துவங் கியுள்ள நிலையில் உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் மலர் காட்சிக்கான இடத்தில், மலர்த்தொட்டிகளை அடுக்கும் பணிகளை வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் துவக்கி வைத்தார். பூங்காவில் அனைத்து பகுதிகளிலும் பல்வேறு வகையான 4 லட்சம் மலர்ச்செடிகள் கொண்டு பாத்திகள் அமைக்கப்பட்டு தற்போது பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. டேலியா, ரோஜா உள்ளிட்ட ரகங்களில் 10,000 மலர்த்தொட்டி கள் மலர்காட்சி திடலில் அடுக்கி வைத்து காட்சிப்படுத்தப் பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் ராமச்சந்திரன் கூறுகையில், நீல கிரி மாவட்டத்தை இயற்கை வேளாண்மை மாவட்டமாக மாற் றுவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இயற்கை வேளாண்மையை நோக்கி என்ற வாசகம் 2,000 மலர் தொட்டி களால் மலர்க்காட்சி திடலில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், நெகிழி இல்லாத மாவட்டமாக மாற்றும் பொருட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பெரணி இல்லம் அமைந்துள்ள புல்வெளி மைதானத்தில் மஞ்சப்பையை பயன்படுத்தும் நோக்கமாக 5,000 மலர் தொட்டிகள் சுற்றுலா பயணிகளுக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மலர் காட்சி திடல் சுற்றுலா பயணிகளுக்காக ஒரு மாதத்துக்கு காட்சிப்படுத்தப்படும், என்றார். தொடர் விடுமுறை என்பதால் நீலகிரி மாவட்டத்தில் ஏராள மான சுற்றுலா பயணிகள் குவிந்து உள்ளனர். உதகை தாவர வியல் பூங்காவில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மலர் செடி களை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்த னர்.
வாலிபர் தற்கொலை
நாமக்கல், அக்.5- பரமத்திவேலூர் தாலுகா, பாண்டமங்கலம் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கார்த்தி (21). இந்நி லையில் வீட்டில் தனியாக இருந்த கார்த்தி, திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவம னைக்கு கொண்டு சென்ற னர். ஆனால், அவர் ஏற்க னவே இறந்துவிட்டதாக மருத் துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசா ரணை மேற்கொண்டு வரு கின்றனர்.