districts

ரூ.1.10 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது

கோவை, ஏப்.16- கோவையில் விற்பனைக்கு வைத் திருந்த ரூ.1.10 லட்சம் மதிப்புள்ள கஞ் சாவை பறிமுதல் செய்த போலீசார், 4  பேர் கைது செய்தனர். கோவை மாவட்டத்தில் கஞ்சா உள் ளிட்ட போதைப்பொருட்களின் புழக் கத்தை தடுக்க மாவட்ட காவல் கண் காணிப்பாளர் பத்ரி நாராயணன் அறிவு றுத்தலின் பேரில், மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் பல்வேறு சோத னைகளை மேற்கொண்டு வருகின்ற னர். கஞ்சா வைத்திருக்கும் நபர்கள், விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது தொடர்ந்து கைது நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலை யில், வடவள்ளி பகுதியில் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படையினர் வடவள்ளி, அஜ்ஜ னூர் பகுதிக்குச் சென்று சோதனை மேற் கொண்ட போது, நான்கு பேர் கஞ்சாவை வைத்திருந்தது தெரியவந்தது. அவர் களிடமிருந்து ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்புள்ள 8.500 கிலோ கஞ்சா மற்றும் ஒரு நான்கு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன. இதன்பின் அவர்களி டம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை யில் நால்வரில் மூன்று பேர் தேனி மாவட்டத்தை சேர்ந்த மனோஜ் குமார் (33), மார்கண்டன் (33), தினேஷ் (27) மற்றும் கோவை மாவட்டத்தை சேர்ந்த பிரவீன் (31) என்பது தெரிய வந்தது.

இதனையடுத்து அவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவ லுக்கு உட்படுத்தப்பட்டனர். கல்லூரி மாணவர்களே குறி சூலூர் சுற்றுவட்டாரத்தில் ஏராள மான தனியார் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் பயி லும் மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசா ருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத் தினர். சிந்தாமணி புதூர் அருகே திருச்சி சாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கு இடமான வகையில் தோளில் பையுடன் நின்று இருந்த நபரை பிடித்து விசாரித் தனர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேக மடைந்த போலீசார், அவரை சோதனை யிட்டனர். அப்போது லுங்கியில் கஞ்சா  பொட்டலங்கள் மறைத்து வைத்திருந் தது தெரியவந்தது.  அவரை போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்த போது, அவர் ஆனைக்கட்டி பகுதியைச் சேர்ந்த மனோஜ் குமார் என்பதும், சூலூர் சுற்று வட்டார பகுதிகளில் கல்லூரி மாணவர் களை குறி வைத்து கஞ்சா விற்பனை யில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.   மேலும், அவரிடமிருந்து 1.2 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்களை போலீ சார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மனோஜ் குமாரை கைது செய்த போலீ சார் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறை யில் அடைத்தனர். இதுபோன்று போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டாலோ பொதுமக்கள் உடனடி யாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண்: 94981 81212 மற்றும் வாட்ஸ் ஆப் எண்: 77081 00100 எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என காவல் துறையி னர் தெரிவித்துள்ளனர்.