நாகர்கோவில், ஏப்.28 - கன்னியாகுமரி மாவட்டம் அரு மனை அருகே கஞ்சா விற்பதை காவல்துறையிடம் காட்டிக் கொடுத்த மாற்றுத்திறனாளி மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது. இதை தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்கம் கண்டித்துள்ளதோடு, குற்றவாளிகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து, அவர்களை சிறையில் அடைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.முகமது புறோஸ்கான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கன்னியாகுமரி மாவட்டம் இடைக் கோடு புத்தன்சந்தை பிலாங்காலை விளையைச் சேர்ந்தவர் சிவபிரசாத் (35). மாற்றுத்திறனாளியான இவர் மீது, கஞ்சா வியாபாரிகளான வினீத் மற்றும் அவரது சகோதரர் விஷ்ணு ஆகியோர் கொலை வெறித் தாக்கு தல் நடத்தியுள்ளனர். இதில் படுகாய மடைந்த சிவபிரசாத் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கஞ்சா விற்பதை காவல்துறையின ரிடம் காட்டிக் கொடுத்ததே தாக்குத லுக்கு காரணமாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இளைஞர்கள் போதை க்கு அடிமையாக்கப்படுவதற்கு எதிராக தமிழக அரசும் மாவட்ட நிர்வா கமும் காவல்துறையும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அதற்கு உறு துணையாக செயல்பட்ட மாற்றுத்திற னாளி மீது தாக்குதல் நடத்திய வர்கள், எளிதில் ஜாமீன் பெற்று கஞ்சா விற்பதை தொடர அனுமதிக்கப் படுகிறார்கள். இதுபோன்ற சமூக விரோதிகள் மற்றும் அவர்களுக்கு துணை போகும் நபர்கள் மீது கடும் நடவ டிக்கை எடுக்க வேண்டும். மாற்றுத்திற னாளியை தாக்கியோர் மீது உரிமைச் சட்டம் 2016 இன்கீழ் வழக்குப் பதிந்து, அவர்களை சிறையில் அடைக்க வேண்டும் என காவல்துறையையும் மாவட்ட நிர்வாகத்தையும் வலி யுறுத்துகிறோம்” என தெரிவிக்கப் பட்டுள்ளது.