இந்தியா கூட்டணியின் கோவை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து மாணிக்காபுரம் ஊராட்சி பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர். கட்சியின் பல்லடம் ஒன்றியக்குழு உறுப்பினர் பிரவீன் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த பிரச்சாரத்தை மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் துவக்கி வைத்தார். உடன் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஆர்.பரமசிவம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.