districts

img

கணபதி ராஜ்குமார் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை, ஏப்.4- பாஜக மக்கள் விரோத  ஆட்சியை நடத்துகிறது. அதி முக எப்போது வேண்டுமானா லும் பாஜகவின் பக்கம் சாயும். எனவே இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தாருங்கள் என  கோவை தொகுதி வேட்பா ளர் கணபதி ராஜ்குமார் வாக்கு  சேகரித்து உரையாற்றினார்.  கோவை தொகுதி நாடாளுமன்ற தொகுதி  இந்தியா கூட்டணியின் திமுக வேட்பாளர் கண பதி ராஜ்குமார், சாயிபாபாகாலனி, என்எஸ் ஆர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதி யாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட் டார்.  அப்போது அவர் பேசுகையில், இன் றைக்கு தனித்து நிற்பது போல் அதிமுக நடிக்கிறது. நாளை, பாஜகவுக்கு  ஆதரவு கொடுப்பார்கள். இதை பொதுமக்களுக்கு நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். ஆகவே, கொள்கை உறுதிப்பாட்டோடு இருக்கிற உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். விலைவாசி பிரச் சனை, கேஸ் பிரச்சனை, ஜிஎஸ்டி பிரச்சனை, இதனையெல்லாம் சரி செய்ய நமது வெற்றியை தேடித் தர வேண்டும் என் றார். இந்த பிரச்சாரத்தில், இந்தியா கூட் டணி கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.