கோவை, செப்.17- தந்தை பெரியார் பிறந்தநாள் மற்றும் அருந்ததிய மக்களின் உள் ஒதுக்கீட்டை உறுதி செய்த உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று கோவையில் முற்போக்கு அமைப்புகளின் சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் அரசி யல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று கருத்துரையாற்றினர். கோவையில், தந்தை பெரியார் பிறந்த நாள் மற்றும் அருந்ததிய மக்க ளுக்கு வழங்கப்பட்ட உள் ஒதுக்கீட்டை உறுதி செய்த உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று பேரணி மற்றும் பொதுக்கூட் டம் நடைபெற்றது. காந்திபுரம் தந்தை பெரியார் சிலை முன்பு துவங்கிய கருஞ்சட்டை பேரணி சிவானந்தா கால னியில் நிறைவடைந்தது. 500க்கும் மேற்பட்டோர் பெரியார் படத்தை கையில் ஏந்தியபடி பங்கேற்றனர். பேர ணியின் போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன், பெரியார் ஒரு சமூக விஞ்ஞானி. எந்தெந்த வகையில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றதோ, அதையெல்லாம் களைவதே அவரது பணியாக இருந்தது. அவரது பிறந்த நாளில் அனைவரும் ஒன்று கூடி கொண் டாடிக் கொண்டு இருக்கின்றோம். உணவிலும் கூட வேற்றுமை இருந்தது, அதை எல்லாம் தகர்த்தவர் பெரியார், என்றார். இதனைத்தொடர்ந்து அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப் பினர் ஜி.ராமகிருஷ்ணன், ஆதித்தமி ழர் பேரவை அதியமான், திராவிடர் தமி ழர் கட்சியின் தலைவர் சி.வெண்மணி ஆகியோர் உரையாற்றினர். புலியகுளம் கோவை மாவட்டம், புலியகுளம் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மாலை அணிவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் மாவட்ட துணைச் செயலா ளர் த.நாகராஜ் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற் குழு உறுப்பினர் என்.குணசேகரன், தீண் டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் யு.கே.சிவஞானம், செயலா ளர் ஆறுச்சாமி, தமுஎகச மாவட்டச் செய லாளர் அ.கரீம், பேக்கரி, ஹோட்டல் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலா ளர் சந்தோஷ், வழக்கறிஞர் சங்க மாவட் டச் செயலாளர் ஜோதிகுமார், ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்டப் பொருளா ளர் மைக்கேல் சாமி உள்ளிட்ட திரளா னோர் கலந்து கொண்டு பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோன்று, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.