கோவை, பிப்.3- பாசிச மதவாத சக்தியை வீழ்த்திட நாடாளு மன்ற தேர்தல் களத்தை வெகுவாக பயன்படுத்து வோம் என கோவையில் நடைபெற்ற தேர்தல் சிறப்பு பேரவை கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் ஆகியோர் அறைகூவல் விடுத்த னர். கோவை உப்பிலிபாளையம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் சிறப்பு பேரவை கூட்டம் வெள்ளியன்று நடை பெற்றது. இதில், கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநில செயற் குழு உறுப்பினர்கள் என்.குணசேகரன், செ. முத்துக்கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் சி.பத்ம நாபன் ஆகியோர் உரையாற்றினர். முன்னதாக, மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில், கூட்டாட்சி தத்துவத்தை குழி தோண்டி புதைக்கக்கூடிய கொள்கையை, ஒன் றிய பாஜக அரசு தொடர்ந்து கையிலெடுத்து வரு கிறது. இத்தகைய பாஜக மீண்டும் ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது. கேரள மாநி லத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும் ஒன்றிய அரசை கண்டித்து 8ம் தேதி அம் மாநிலம் முழு வதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட உள்ளது. இதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டங்களை நடத்த உள்ளோம். ஒன்றிய அரசாங்கத்தை, பாஜகவை, பிரத மர் மோடியை யார் விமர்சித்தாலும் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படு கிறார்கள். டெல்லியில் ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்ற விவசாயிகள் போராட்டம் குறித்து யூடியூப் வலைதளத்தில் செய்தி வெளியிட்ட ஊடகவியலாளர் மோடி அரசை விமர்சித்தார் என்ற ஒரே காரணத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இது ஒன் றிய பாஜக அரசின் பாசிச நடவடிக்கைக்கு ஒரு உதாரணம்தான். கட்சியின் மத்திய மற்றும் மாநிலக்குழுக்கள் இந்தியா கூட்டணியில் அங் கம் வகிக்க முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். தமிழக மற்றும் கேர ளாவில் பாஜக ஒரு தொகுதி கூட வெற்றி பெற முடியாத நிலையில்தான் உள்ளது. பாஜக கூட்ட ணியில் இருந்து அதிமுக வெளியேறியுள்ள நிலையில், தமிழகத்தில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.
ஒன்றிய பாஜக அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்தினாலும் அதை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என முத லமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். ஆனால், இதை எடப்பாடி பழனிச்சாமி சொல் வாரா? அதிமுக குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து வாக்களித்தது அதிமுக. விவசாயிகள் தில்லியில் போராடும்போது குரல் கொடுக்கா மல் அமைதி காத்தது அதிமுக. களைக்கொல்லி பாஜக இந்தியா கூட்டணி தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டுமானால் நாம் அதிமுகவை அம்பலப்படுத்தி தவறான பிரச் சாரங்களை முறியடிக்க வேண்டிய பணியை செய்ய வேண்டும். தமிழகத்தில் 39 இடங்களிலும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை வெல்ல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பாடுபட வேண்டும். பாசிசத்தை மத வெறியோடு சேர்த்து திணிக்கின்ற களைக்கொல்லியாக பாஜக இருந்து வருகிறது. பாஜகவின் நோக்கம் எல் லாம் இந்திய அரசியல் சாசன சட்டத்தை தூக்கி எறிந்து விட்டு வருணாசிரம தர்மத்தை கொண்டு வர வேண்டும் என்பதுதான். மீண்டும் பாஜக ஆட்சிக்கு வரும் பட்சத்தில் கருத்து சுதந்திரம் என்பது குழிதோண்டி புதைக்கப்பட்டு விடும். குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவ தன் மூலம் சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை மக்களிடையே மோதலை ஏற்படுத்த ஒன்றிய பாஜக அரசு முயன்று வருகிறது. இந்தியாவில் சிறுபான்மை மக்கள் சற்று நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் வசிப்பது தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களில் மட்டும் தான். இதர பாஜக ஆளும் மாநிலங்களில் சிறுபான்மை மக்களுக்கு என்ன மாதிரியான கொடுமைகள் எப்போது நிக ழும் என்பதை சொல்ல முடியாது. பாஜக ஆளும் மாநிலங்களில் அத்தகைய சூழல் தான் நிலவி வருகிறது. அதிமுக எப்போது வேண்டுமானா லும் பாஜகவை ஆதரிக்கும் என்ற நிலையில் இப்போது சந்தர்ப்பவாத சூழலை கையில் எடுத்துள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
பெரும்பாலான சமூக விரோதிகள் அனை வரும் பாஜகவில் தான் இருக்கிறார்கள். தேர்தல் நேரங்களில் இவர்களை பயன்படுத்தும் ஏற்பாடோடு இருக்கிறார்கள். ஒட்டுமொத்த இந்தியாவையும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாரைவார்ப்பதை தட்டிக் கேட்பவர்கள் மீது சர்வாதிகாரத்தை ஏவுவது தான் பாஜக அரசின் நிலைப்பாடாக இருக்கிறது. இந்தப் பாசிச நிலைப் பாட்டை வீழ்த்த வேண்டிய கடமை இடதுசாரி இயக்கங்களுக்கு இருக்கிறது. கருத்தியல் ரீதியில் மாறுபட்ட நிலைப்பாடுகளை கொண்ட கட்சிகளுடன் நாம் கைகோர்த்து இருப்பதன் நோக்கம் இதுதான். 2024 நாடாளுமன்றத் தேர்த லில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று விட்டால் தமிழ்நாட்டில் திமுக அரசை நீடிக்க விடுவார் களா? கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியை நீடிக்க விடுவார்களா? தில்லி யில் கெஜ்ரிவால் நீடிக்க விடுவார்களா? எதிர்க் கட்சிகள் ஆளும் மாநிலங்களின் மீது எல்லா வித மான தாக்குதல்களையும் சூழலை ஏற்படுத்து வார்கள். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் இல்லை என்ற சூழலை உருவாக்குவார்கள். இந்தியா கூட்டணியில் இருக்கும் கட்சிகளை வலுவாக பற்றிக்கொண்டு பாசிச பாஜக மற்றும் அதிமுக வேட்பாளர்களை தோற்கடிப்பதற்கான வேலைகளை செய்ய வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் பொதுத்துறை நிறுவ னங்கள் அனைத்தும் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டு விட்டன. சிறுகுறு தொழில்கள் அழியும் தருவாயில் இருந்து வருகின்றன. பாசிச பாஜக அரசை வீழ்த்தும் முயற்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஒவ்வொருவரும் கைகோர்க்க வேண்டும். வீடு வீடாகச் சென்று திண்ணை பிரச்சாரங்களை மேற்கொண்டு பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கை களை விளக்க வேண்டும். சமூக வலைதளங்க ளில் பாஜக அரசின் மக்கள் விரோத பாசிச நடவ டிக்கைகளை தோலுரித்து பதிவுகளை மேற் கொள்ள வேண்டும். மக்களை திரட்டி பாசிச பாஜ கவை வீழ்த்தும் நடவடிக்கைகளை முன்னெ டுக்க வேண்டும், என்றார்.