districts

img

விசைத்தறி தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுக

பள்ளிபாளையம், பிப். 16- நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத் தில்,75 சதவிகிதம் கூலி  உயர்வு கேட்டு,  விசைத்தறி தொழிலாளர்கள் கடந்த 15 நாட் களுக்கு மேலாக வேலை நிறுத்த போராட் டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இவர் களின் நியாயமான கோரிக்கைகளை நிறை வேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆதரவு ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். குமாரபாளையத்தில், மார்க்சிஸ்ட் கட்சி யின் சார்பில், ஆனங்கூர் பிரிவு சாலையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குமார பாளையம் நகர செயலாளர் என்.சக்திவேல்  தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்,  கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கந்த சாமி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு  வரும் விசைத்தறி தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து உரையாற்றினார். முன்னதாக, விசைத்தறி தொழிலாளர் களின் கூலி உயர்வு பிரச்சனையில் தமிழ்நாடு அரசு தலையிட வேண்டும். இவர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கங் களை எழுப்பினர். இதில், விசைத்தறி தொழிலாளர் சங்க  மாவட்ட தலைவர் எம்.அசோகன், மாவட்ட குழு உறுப்பினர்  எம்.ஆர்.முருகேசன், சிபிஎம்  முன்னாள்  நகர செயலாளர் எஸ்.ஆறுமுகம்  மற்றும் நகர, ஒன்றிய குழு உறுப்பினர்கள்,  விசைத்தறி தொழிலாளர்கள் திரளானோர்  பங்கேற்றனர். முடிவில், நகர குழு உறுப்பினர்  எஸ்.கந்தசாமி நன்றி கூறினார்.