districts

img

தேங்காய்-க்கு உரிய விலை கிடைக்காததால் ஆவேசம்

நாமக்கல் ஜூலை 12- தேங்காய்-க்கு உரிய விலை கிடைக்காமல் பாதிக் கப்பட்டுள்ள தென்னை விவ சாயிகளை காப்பாற்ற நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, தென்னை விவசாயிகள் சங்கத்தினர் மாநிலந்தழுவிய தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு முழுவதும் 19 மாவட்டங்களில் 5 லட்சம் ஏக் கருக்கு மேல் நீண்ட கால பயி ரான தென்னை பயிர் செய் யப்பட்டுள்ளது. சமீப கால மாக தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காமல் மிகக் கடுமையான விலைவீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் தென்னை விவசாயிகள் பொருளாதார ரீதியாக மிகக் கடுமையாக பாதிக்கப்பட் டுள்ளனர். எனவே, தென்னை விவசாயிகளை காப்பாற்ற ஒன்றிய, மாநில அரசுகள் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, தென்னை விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாநிலந்தழுவிய தேங்காய் உடைக்கும்  போராட்டம் நடைபெற்றது. அதன்ஒருபகுதி யாக நாமக்கல் மாவட்டத்தில் 6 மையங் களில் இப்போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டங்களில் தென்னை விவசாயிகள் சங்கத்தின் மாநில, மாவட்ட தலைவர்கள் பூபதி, ஆதிநாராயணன், நல்லாகவுண்டர், முத்துசாமி, வேலாயுதம், தங்கரத்தினம், சதா சிவம், கருப்பண்ணன், தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்ட செயலாளர் பி.பெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவை

கோவை மாவட்டத்தில் 4 மையங்களில் தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெற் றது. இதில், தென்னை விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன், மாவட்ட செயலாளர் ஸ்டாலின் பழனிச்சாமி, மாவட்டக்குழு உறுப்பினர் கார்த்திகேயன், மார்க்சிஸ்ட் கட்சியின் மதுக்கரை ஒனறியச் செயலாளர் எம்.பஞ்சலிங்கம் உட்பட திர ளான தென்னை விவசாயிகள் கலந்து கொண் டனர்.

சேலம்

சேலம், ஜலகண்டாபுரம் பேருந்து நிறுத் தம் அருகே தேங்காய் உடைக்கும் போராட் டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத் தில், மாவட்ட துணைத்தலைவர் பி.தங்க வேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.