ஈரோடு, ஆக.30- கனி மார்க்கெட் வியாபாரி களை அலைகழித்து, அவதிக்குள் ளாக்கும் ஈரோடு மாநகராட்சியின் செயல் அதிர்ப்த்தியை ஏற்படுத்தி யுள்ளது. ஈரோட்டில் பன்னீர்செல்வம் பார்க் அருகில் அப்துல் கனி மார்க் கெட் அமைந்துள்ளது. இது தினசரி ஜவுளி சந்தையாகும். வாராந்திர சந்தையும் உண்டு. 1955 முதல் இச் சந்தை செயல்பட்டு வந்தது. வைப் புத்தொகை எதுவுமில்லாமல் 25 பைசா வாடகைக்கு கடை அமைத்து நடத்தி வந்தனர். இது படிப்படியாக உயர்த்தப்பட்டு, சதுர அடிக்கு ரூ.30 வீதம் மாநகராட்சி வாடகை வசூலிக் கிறது. கொரோனா பேரிடருக்கு முன்பு 296 கடைகள் செயல்பட்டு வந்தன. ஸ்மார்ட் சிட்டி என்ற பெய ரில் வணிக வளாகம் அமைக்கப் பட்டது. அப்போது இந்த வியாபாரி கள் அகற்றப்படாமல், புது வணிக வளாகத்தின் இடது மற்றும் வலது புறங்களில் கடைகள் அமைத்து செயல்பட அனுமதிக்கப்பட்டனர். புது வணிக வளாகத்தில் இந்த வியா பாரிகளுக்கே முன்னுரிமை அளிக் கப்படும் என வாய்மொழி உத்தர வாதம் அளிக்கப்பட்டது. கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த நிலை யில், ஒரு சில கடைகள் இடையூ றாக உள்ளதென்று கூறி சுமார் 30 கடைகள் அகற்றப்பட்டன. இதனால் அதிர்ச்சியடைந்த வியாபாரிகள் நீதிமன்றம் சென்றனர்.
அங்கு இரண்டு ஓய்வுபெற்ற நீதி பதிகள், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் வியாபாரிகளிடையே பேச்சு வார்த்தை நடத்தினர். அப்பொழுது தேர்வு செய்யப்பட்ட மாமன்ற பிர திநிதிகள் இல்லாத நிலையில், அரசு ஆணையை செயல்படுத்த வேண் டியவர்களாக உள்ளோம். எனவே, வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்க இயலாது என அதிகாரிகள் தெரி வித்ததாகக் கூறப்படுகிறது. இதற் கிடையில் தேர்தல் மூலம் மாமன்றத் திற்கு பிரதிநிதிகள் தேர்வு செய்யப் பட்டுள்ளனர். 296 கடைகள் கொண்ட வணிக வளாகம் அமைக்கப்பட்டு அப்துல் கனி மார்க்கெட் என்ற பெய ரிலேயே திறக்கப்பட்டது. இந்நிலை யில், புது வணிக வளாகத்தில் வியா பாரிகளை முன்னுரிமை அடிப்படை யில் குடியேற்றாமல், பொது ஏலம் அறிவிக்கப்பட்டது. சதுர அடிக்கு ரூ.135 வாடகை, வைப்புத்தொகை ரூ.8 லட்சம் என்ற நிபந்தனையுடன் அறிவிப்பு வெளியானது. கட்டுமான பணிகள் தொடங்குவதற்கு முன் பும், கட்டுமானப்பணிகளின் போதும், அமைச்சர்களும், சட்டமன்ற உறுப் பினர்களும் அளித்த வாய்மொழி உத்தரவாதத்தை நம்பிய வியாபாரி கள், தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தனர்.
ஒரு சில லட்சங்கள் கடனாக வும், கந்து வட்டியும் பெற்று நடத்தி வந்த வியாபாரிகள் திடீரென ரூ.35 ஆயிரம் வாடகை மற்றும் வைப்புத் தொகை ரூ.8 லட்சம் நிர்ணயித்தால், செலுத்த முடியாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மாநக ராட்சி நிர்வாகம் அறிவித்த ஏலம் நடைபெறவில்லை. கடைகள் பயன் பாட்டிற்குக் கொண்டுவரப்படவு மில்லை. இந்நிலையில், தற்காலிக கடைகளை அகற்றுமாறு மாநக ராட்சி நிர்வாகம் நோட்டீஸ் கொடுத் தது. நீதிமன்றமும் கடைகளை அகற்ற உத்தரவிட்டது. இதனால் 40 ஆண்டுகளுக்கு மேலாக கடை நடத்தி வந்த வியாபாரிகள் கண்ணீ ரோடு வெளியேறினர். கடைகள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட தால், செய்வதறியாது திகைத்த வியாபாரிகள் மாநகராட்சி மேயர் மற்றும் உறுப்பினர்களிடம் முறை யிட்டபோது, அரசாணையை எதிர்த்து எதுவும் செய்ய முடியாது என்று அவர்களும் கைவிரித்தனர். உள் ளூர் அமைச்சரிடம் முறையிட்டதை யடுத்து சின்ன மார்க்கெட் பகுதியில் கடை அமைத்து நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில், டிசம்பர் மாத இறுதி வரை ஏற்கனவே செயல் பட்டு வந்த இடத்திலேயே கடைகள் செயல்படலாம் என வியாபாரிகள் நீதிமன்றம் சென்று உத்தரவு பெற் றுள்ளனர். அதன்படி, கடை அமைப் பது குறித்து ஆலோசித்து வருவ தாக வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். ஈரோட்டின் அடையாளங்களில் ஒன்றான கனி மார்க்கெட் வியாபாரிகளிடம் மாநக ராட்சி மாற்றாந்தாய் மனப்பான்மை யுடன் நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.