சேலம், ஏப்.5- அதிமுக ஆட்சிக்காலத்தில் போட்டப்பட்ட பொய் வழக்குகளிலி ருந்து சிஐடியு, வாலிபர், மாதர் சங்கத் தின் தலைவர்கள் விடுதலை செய்யப் பட்டனர். ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடிய தூத்துக்குடி மக் கள் மீது அன்றைய அதிமுக அரசு துப்பாக்கி சூடு நடத்தி படுகொலை செய்தது. இதனை கண்டித்து 2018 ஆம் ஆண்டு சேலத்தில் சிஐடியு, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், விவசாயிகள் ஒருங்கி ணைப்புக் குழு மற்றும் இடதுசாரி அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது, அன் றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்ததாக சேலம் மாநகர போலீசார் பொய் வழக்குப்ப திவு செய்தனர். இவ்வழக்கு விசா ரணை சேலம் ஜேஎம் - 1 நீதிமன்றத் தில் நடைபெற்று வந்த நிலையில், பொய் வழக்கிலிருந்து சங்கத்தின் தலைவர்கள் விடுவிக்கப்பட்டனர். இவ்வழக்கில் வாதாடிய வழக்கறி ஞர்கள் தேவி ரமணி, சின்னதங்கம் ஆகியோருக்கு சங்கத்தின் தலைவர் கள் நன்றிகள் தெரிவித்தனர். அதேபோல சிஏஏ சட்டத்தை எதிர்த்து வாலிபர் சங்கம் சார்பில் 2020 ஆம் ஆண்டு போராட்டம் நடை பெற்ற போது, போலீசாரை தாக்கிய தாக பொய் வழக்குப்பதிவு செய்யப் பட்டது. அந்த வழக்கிலிருந்தும் வாலி பர் சங்க தலைவர்கள் விடுதலை செய் யப்பட்டனர். இவ்வழக்கை இலவச மாக வாதாடிய வழக்கறிஞர் வெற்றி வேல், சரஸ்வதி ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. முன்ன தாக, இவ்விரு வழக்குகளிலிருந்து சிஐடியு மாவட்டத் தலைவர் டி.உதய குமார், சிபிஎம் வடக்கு மாநகரச் செய லாளர் என்.பிரவீன் குமார், மாதர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் ஐ.ஞான சௌந்தரி, ஐக்கிய விவசாயிகள் முன் னணியின் ஒருங்கிணைப்பாளர் ராம மூர்த்தி, ஏஐடியுசி மாவட்ட நிர்வாகி முனுசாமி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.