districts

img

விடுதலை போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா நினைவு தினம்

தருமபுரி, ஜூலை 23- விடுதலை போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவா 98ஆவது  நினைவு நாளையொட்டி, தரும புரி மாவட்டம், பாப்பாரப்பட்டி யில் உள்ள அவரது மணி மண்டபத்தில் உள்ள திருவு ருப்படத்திற்கு வேளாண்மை  மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மலர்த் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கி. சாந்தி,பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, தருமபுரி சட்டமன்ற உறுப் பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் ஆகியோர்  கலந்துகொண்டு விடுதலை போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் பெ.சுப்பிரமணி, முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ. லோகநாதன், வட்டாட்சியர் சௌகத்அலி, பாப்பாரப்பட்டி பேரூராட்சித் தலைவர் பிருந்தா நடராஜன், பென்னாகரம் ஊராட்சி  ஒன்றியக் குழு உறுப்பினர் பூங்கொடி மாதேஷ், ஒன்னப்பகவுண்டன அள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் தமிழ்செல்வி சேது முருகன், பாப்பாரப்பட்டி செயல் அலுவலர் கோமதி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள் ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து  கொண்டனர்.