கோவை, ஜூன் 24- குருடம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிக ளுக்கு இலவச நோட்டுப்புத் தகங்களை கோவை நாடா ளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வெள்ளியன்று வழங்கினார். கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், குருடம்பாளை யம் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியில் ஏராளமான குழந்தைகள் பயின்று வருகின்றனர். ஆனந்த் புரோமோட் டர்ஸ் நிறுவனத்தின் 26 ஆம் ஆண்டு விழா வையொட்டி குழந்தைகளுக்கு இலவச நோட்டுப்புத்தகங்கள் வழங்கும் விழா நடை பெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடரா ஜன் கலந்து கொண்டு ரூ.1.5 லட்சம் மதிப்பி லான நோட்டுப்புத்தகங்களை வழங்கினார். இவ்விழாவில் ஆனந்த் புரோமோட்டர்ஸ் நிர் வாக இயக்குநர் ஆறுமுகம், தொப்பம்பட்டி 6 ஆவது வார்டு உறுப்பினர் கோகிலா பூபதி, 7 ஆவது வார்டு உறுப்பினர் ஜெயக்குமார், மார்க்சிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் சண்முகக்கனி உட்பட பலர் கலந்து கொண் டனர்.