நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், செவந்திபட்டி ஊராட்சி, பனைமரத்துப்பட்டி கிராமத்தைச் சர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கு மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 பெறுவதற்கான ஆணையையும், ராஜாத்தி என்பவருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் பசுமை வீடு கட்டுவதற்கான ஆணையையும் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் செவ்வாயன்று நேரில் சென்று வழங்கினார்.