நாமக்கல், ஜன.29- நாமக்கல்லில் பத்திரிகை மற்றும் ஊடக செய்தியாளர்க ளுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. நாமக்கல் மகரிஷி கண் மருத்துவமனையில், இந்திய மருத்துவ சங்கம் நாமக்கல் கிளை மற்றும் ரெட்கிராஸ் சங்கம் இணைந்து பத்திரிக்கையாளர்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் சர்க்கரை, ரத்தக்கொதிப்பை கண்டறியும் முகாம் நடைபெற்றது. முகாமை மகரிஷி கண் மருத்துவ மனை மருத்துவர் பெ.ரங்கநாதன் துவக்கிவைத்தார். இந்த கண் சிகிச்சை முகாமில் நாளிதழ் மற்றும் தொலைக்காட்சி ஊடக செய்தியாளர்கள் பலர் கலந்து கொண்டு, பயனடைந் தனர்.