உதகை, மே 10- கூடுதல் பணம் தருவதாக கூறி டெலகிராம் மூலம் லிங்க் அனுப்பி, வீட்டில் தனியாக இருக்கும் பெண் களிடம் ரூ.12½ லட்சம் மோசடி சம்ப வம் நடைபெற்றுள்ளது. நீலகிரி மாவட்டம், ஊட்டி டவுன் பகுதியில் வசித்து வரும் 35 வயது பெண், வீட்டில் இருந்து கொண்டு பல்வேறு தனியார் நிறுவனங்க ளுக்கு ஆன்லைன் நிறுவனம் ப்ரா ஜெக்ட் செய்து கொடுக்கும் வேலை செய்து வருகிறார். இவருடைய கண வர், ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அப்பெண் ஆன்லைன் மூலம் பணியாற்றி வந்ததையறிந்த கும்பல் ஒன்று அந்த பெண்ணுக்கு டெலிகிராம் மூலம் ஒரு லிங்க் அனுப்பி, குறிப்பிட்ட வங்கி கணக் கிற்கு பணம் அனுப்பினால் கூடுதல் பணம் அனுப்புவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதை நம்பிய அந்தப் பெண் முத லில் ரூ.1000 முதலீடு செய்துள்ளார். அதற்கு ரூ.1300 கிடைத்துள்ளது. இத னால் ஆசை அதிகரித்ததால் அந்தப் பெண் இரண்டாவது முறையாக ரூ. 1 லட்சத்து 81 ஆயிரம் முதலீடு செய்துள் ளார். ஆனால் அந்த பணம் திரும்ப வரவில்லை. மேலும், அந்தப் பெண் ணிடம் டெலிகிராம் மெசேஜ் மூலம் தொடர்பு கொண்ட கும்பல், கூடுத லாக ரூ.3½ லட்சம் செலுத்தினால் பணம் தருவதாக கூறி ஏமாற்றியுள் ளது. கைவிட்ட பணத்தை எப்படியா வது பிடிக்க வேண்டும் என்பதால் அந்த பணத்தையும் செலுத்தி உள் ளார். அதன் பின்னர் மோசடி கும்ப லின் பொய் வாக்குறுதிகளை கேட்டு மேலும் ரூ. 2 லட்சம் அனுப்பி உள் ளார். இவ்வாறாக ரூ.7¾ செலுத்தி யுள்ளார். இதன் பின்னர் அந்த கும்பலிடம் இருந்து எந்த தகவலும் வராததால் ஏமாற்றப்பட்டதை அறிந்த பெண் இதுகுறித்து ஊட்டி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித் துள்ளார்.
ரூ.4¾ லட்சம் மோசடி
இதேபோல் ஊட்டியை சேர்ந்த மற்றொரு பள்ளி ஆசிரியையிடம் டெலிகிராம் மெசேஜ் மூலம் லிங்க் அனுப்பி, பணம் முதலீடு செய்தால் கூடுதல் தொகை கிடைக்கும் என்று நம்ப வைத்து ரூ.4¾ லட்சம் மோசடி செய்யப்பட்டு உள்ளது. இதேபோல் பல்வேறு பெண்களிடம் மோசடி செய் யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. திட்டமிட்டு நடைபெறும் இந்த மோசடி குறித்து பலர் புகார் கூற தயங்குகின்ற னர் என கூறப்படுகிறது. இந்நிலை யில், இந்த மோசடி குறித்து விசா ரணை நடத்த மாவட்ட காவல் கண் காணிப்பாளர் பிரபாகர் உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து குற்றப்பிரிவு போலீ சார் கூறுகையில், வீட்டில் இருந்து பல்வேறு நிறுவனங்களுக்கு பணி யாற்றும் பெண்களை ரேண்டம் முறையில் தேர்வு செய்து டெலிகிராம் மூலம் மெசேஜ் அனுப்பி பல்வேறு கும்பல்கள் மோசடியில் ஈடுபடுகி றது. டெலிகிராம் மூலம் லிங்க் அனுப் புவதால் அவர்களை அடையாளம் கண்டு கைது செய்வதில், பல்வேறு சிக்கல்கள் இருப்பதால் இந்த முறையை கையாளுகின்றனர். இதை வடமாநில கும்பல்கள் ஒரு தொழிலாக செய்து வருவதாக தெரி கிறது. இதில் பணத்தை ஏமாந்தவர்கள் போலீசில் புகார் அளிக்கப் போவ தாக கூறினால், அந்த கும்பல் மேலும் பல்வேறு மிரட்டல்கள் தருவதாக தக வல்கள் வந்துள்ளது. டெலகிராம் மூலம் லிங்க் அனுப்பி பணம் வாங்கு வதுடன் அவர்களை நம்ப வைப்பதற் காக பல்வேறு டாஸ்குகள் அனுப்பப் படுகிறது. இதனால் வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். ஏமாந்தவர்கள் பணத்தை மீட்க வங்கிக்கு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது, என்றனர்.