districts

பட்டுக்கூடு கொள்முதலில் மோசடி

கோபி, பிப்.2- கோபிசெட்டிபாளையம் சுற்றுப்புற பகு திகளில் தனியார் நிறுவனத்தின் பெயரில், பட்டுக்கூடு கொள்முதலில் மோசடி நடப்ப தாக தமிழ்நாடு பட்டுக்கூடு உற்பத்தி விவசாயி கள் நலச் சங்கத்தின் சார்பில் மனு அளித்த னர்.  ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளை யம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயி ரக்கணக்கான விவசாயிகள் வெண்பட்டு வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். உற்பத்தி  செய்த பட்டுக்கூடுகளை தருமபுரி, கோவை, சேலம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு சென்று அங்காடிகள் மூலமாக விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலை யில், பட்டுவளர்ச்சிதுறையின் பட்டுக்கூடு அங்காடிகளில் நடமாடும் இடைதரகர்கள், தனியார் நிறுவனங்களை தொடங்கி, விவ சாயிகளிடம் நேரடியாக சென்று கூடுதல்  விலைக்கு கொள்முதல் செய்து வருகின்ற னர்.  இந்நிலையில், தமிழ்நாடு பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் நலச் சங்கத்தின் மாநி லத் தலைவர் செல்வராஜ் தலைமையில்,  கோபி கோட்டாச்சியர் அலுவலகத்திலும், சத்தியமங்கலம் துணை காவல்கண்காணிப் பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித் தனர்.  இதுகுறித்து அவர்கள் அம்மனுவில் தெரி வித்திருப்பதாவது, கடந்த சில மாதங்களாக சத்தியமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு வி.எம்.ஹெரிடேஜ் சில்க் என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தை சேர்ந்த கேசவன், விக் னேஷ், விவேக் ஆகிய மூவரும் கோபி, கள் ளிப்பட்டி, சத்தி, மைலம்பாடி, உள்ளிட்ட  பகுதிகளில் விவசாயிகளிடம் நேரடியாக சென்று கூடுதல் விலைக்கு பட்டுக்கூ டுகளை கொள்முதல் செய்து வருகின்ற னர். மேலும், கொள்முதல் செய்துவிட்டு சில  விவசாயிகளுக்கு மட்டும் குறைந்தளவு தொகையை வங்கியில் செலுத்திவிட்டு, மீதி  தொகையான சுமார் ரூ.3 லட்சத்தை வழங்கா மால் காலம் தாழ்த்தி வருகின்றனர். இது  தொடர்பாக, பங்களாபுதூர் காவல்நிலை யத்தில் புகார் அளித்தும், இதுவரை எவ்வித  நடவடிக்கை எடுக்கவில்லை.  எனவே, பட்டுக் கூடு கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு தர வேண்டிய பணத்தை உடனே வழங்க வேண்டும். பணம் தராமல் ஏமாற்றி வரும்  தனியார் நிறுவனம் மீதும், அதில் தொடர்பு டைய கேசவன், விக்னேஷ், விவேக் என்ப வர்கள் மீதும் உரிய நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள் ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் நலச்சங்க மாநில தலைவர் செல்வராஜ் கூறு கையில், தமிழகம் முழுவதும் இதுவரை  விவசாயிகளிடம் பட்டுக்கூடு கொள்முத லில் 2.5கோடி ரூபாய் வரை பணம் மோசடி  நடந்துள்ளது. எனவே பட்டுக்கூடு அங்காடிக ளில் கொள்முதல் செய்யும்போது, தனி யார் நிறுவனம் என்ற பெயரில் இடைதர கர்கள் அதிகரிப்பதை அரசு முறைபடுத்த வேண்டும். ஏமாற்றப்பட்ட விவசாயிகளுக்கு பணம் கிடைக்க பட்டுவளர்ச்சிதுறையும் அர சும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என் றார்.