தருமபுரி, ஆக.3- இணைய வழியாக லட்சக்கணக்கில் மோசடி குறித்து காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, பென்னாகரம் தாலுகா மூங்கில்மடுவு பகுதியை சேர்ந்த பொய்யாமொழி என்பவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்ப தாவது, நான் சென்னையில் திரைப்பட இயக்குநராக பணி புரிந்து வருகிறேன். கடந்த மாதம் எனது நண்பர்கள் மூலம் டி அண்டு ஜி என்ற பணமுதலீடு செய்யும் ஆப் பற்றி தெரிந்து கொண்டேன். அந்த ஆப்-யை டவுன்லோடு செய்து அந்த ஆப் மூலம் முதலீடு செய்தேன். இந்த ஆப்-பில் செயின் லிங்க் போல் எனக்கு தெரிந்தவர்களையும் இணைப்பதன் மூலம் 10 சதவி கிதம் கமிசன் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறப்பட்டது. இதன்பேரில் பலரை இணைத்ததோடு நானும் ரூ.3 லட்சம் வரை முதலீடு செய்தேன். பின்னர் அந்த ஆப் செயல் இழந்தது. எனவே, நான் ஏமாற்றப்பட்டதோடு தருமபுரி மாவட்டத் தில் பலரும் பலலட்சம் வரை ஏமாற்றப்பட்டுள்ளனர். எனவே, நான் இழந்த ரூ.3 லட்சம் பணத்தை மாவட்ட காவல்துறை மீட்டுத் தரவேண்டும், இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இதே போல் பணத்தை இழந்த அதே பகுதியை சேர்ந்த லோகேஸ்வரி, கோபிநாத், பாரதிதாஸ் ஆகியோரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.