districts

img

போதமலையில் சாலைப்பணி: முதல்வர் அடிக்கல்

நாமக்கல், பிப்.18- வெண்ணந்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட போதமலையில் 31 கி.மீ. தூரத்திற்கு சாலை அமைக்கும் பணிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஞாயிறன்று காணொளி மூலம் அடிக்கல் நாட்டினார். நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கீழூர், மேலூர், கெடமலையை இணைக்கும் வகை யில் ரூ.140 கோடி மதிப்பீட்டில் 31 கி.மீ தொலை விற்கு சாலை அமைக்கும் பணிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் அடிக்கல் நாட்டினார். அதனைத்தொடர்ந்து கீழூர் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், மாவட்ட ஆட்சியர் ச.உமா, மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி. சின்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது அமைச்சர் மா.மதிவேந்தன் பேசு கையில், போதமலை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று ரூ.140 கோடி மதிப் பீட்டில் 31 கி.மீ தொலைவிற்கு புதியதாக சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட் டப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி இப்பகுதி மக்க ளின் 75 ஆண்டு கால சிரமத்தை போக்கிடும் மிகப்பெரிய நிகழ்வாகும். போதமலை பகு திக்கு சாலை அமைக்க பல்வேறு தடைகள் இருந்தன. முத்தமிழறிஞர் கலைஞரின் ஆட் சிக்காலத்தில் தான் போதமலை பகுதியில் ஒவ்வொரு வீட்டிற்கும் மின்சார வசதி வழங் கப்பட்டது, என்றார். இந்நிகழ்ச்சியில் ராசிபுரம் ஊராட்சி ஒன்றி யக்குழு தலைவர் கே.பி.ஜெகநாதன், வெண் ணந்தூர் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஏ.ஆர். துரைசாமி, மாவட்ட வன அலுவலர் கே. ராஜாங்கம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எம்.சிவக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.