புதிய பள்ளிக் கட்டிடம் கட்ட அடிக்கல்
புதிய பள்ளிக் கட்டிடம் கட்ட அடிக்கல் சேலம், பிப்.24- எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.3 கோடியே 37 லட்சம் மதிப்பீட்டில், புதிய பள்ளிக் கட்டிடம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நடும் விழா சனியன்று நடைபெற்றது. சேலம் மாவட்டம், எடப்பாடியில் உள்ள 30 வார்டுகளில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து நகராட்சிக்குட்பட்ட வீரப்பம்பாளையம், முப்பனூர், சின்ன மணலி, மோட்டூர், ஆவணியூர், வீரப்பம் பாளையம் உள்ளிட்ட ஆறு இடங்களை தேர்வு செய்து, ரூ.2 கோடி மதிப்பீட்டில் 6 புதிய துவக்கப்பள்ளிக் கட்டிடம் கட்டுவதற் காக பணிகளை நகர்மன்றத் தலைவர் பாஷா, நகராட்சி ஆணை யாளர் முஸ்தபா, ஆகியோர் தொடங்கி வைத்தனர். அதைத் தொடர்ந்து கவுண்டம்பட்டி அருகே பொதுமக்களின் பயன் பாட்டிற்காக தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலை யம் கட்டிடம் கட்டுவதற்கானப் பணிகளையும் நகர்மன்றத் தலை வர் பாஷா, துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.
சுகாதார சீர்கேட்டால் அவதியுறும் மக்கள்
சுகாதார சீர்கேட்டால் அவதியுறும் மக்கள் தருமபுரி, பிப்.24- கொளகம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் கழிவுநீர் கால்வாய் பணி முழுமையடையாததால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். தருமபுரி மாவட்டம், கொளகம்பட்டி ஊராட்சிக்குபட்டது ஆண்டிப்பட்டி புதூர். இங்கு 200க்கும் மேற்பட்ட குடியிருப்பு கள் உள்ளன. இக்கிராமத்திற்கு கழிவுநீர் கால்வாய் வேண்டு மென நீண்ட நாட்கள் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து 15 ஆவது நிதி மானியம் மூலம் கால் வாய் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. ஆனால், இப் பணி முழுமையடையாததால், கழிவுநீர் வெளியேற முடியா மல் கால்வாயிலேயே தேங்கும் அவலநிலை உள்ளது. கடந்த 3 மாதமாக கழிவுநீர் தேங்குவதால் கொசு உற்பத்தியாகி பெரி யவர் முதல் குழந்தைகள் வரை, காய்ச்சல் உள்ளிட்ட பல் வேறு தொற்றுநோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, கால்வாய் அமைக்கும் பணியை முழுமையாக முடித்து கழிவு நீர் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கம்பைநல்லூர் பேருந்து நிலையத்திற்குள் பேருந்து வந்து செல்லப் பயணிகள் கோரிக்கை
கம்பைநல்லூர் பேருந்து நிலையத்திற்குள் பேருந்து வந்து செல்லப் பயணிகள் கோரிக்கை தருமபுரி, பிப்.24- தருமபுரி மாவட்டம், மொரப்பூர் - காரிமங்கலம் நெடுஞ் சாலையில் அமைந்துள்ளது கம்பைநல்லூர் பேருந்து நிலைய வளாகம். இந்த வழித்தடத்தில் தருமபுரி, அரூர், மொரப்பூர், கிருஷ்ணகிரி, பாலக்கோடு, ஒசூர், பெங்களூரு உள்ளிட்ட முக் கிய நகரங்களுக்கு அரசு பேருந்துகளும், தனியார் பேருந்து களும், அரசு நகரப் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின் றன. ஆனால், கம்பைநல்லூர் பேருந்து நிலைய வளாகத் துக்கு ஒரு சில அரசு நகரப் பேருந்துகள் மட்டுமே வந்து செல் கின்றன. அரசு புறநகர் பேருந்துகள், தனியார் பேருந்துகள் பேருந்து நிலைய வளாகத்துக்குள் வந்து செல்வதில்லை. இத னால் பேருந்துக்காக காத்திருக்கும் முதியவர்கள், பெண்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே, கம்பைநல்லூர் வழித் தடத்தில் இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் பேருந்து நிலைய வளாகத்துக்குள் வந்துசெல்ல தருமபுரி மாவட்ட நிர் வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போக்சோ வழக்கு: 20 ஆண்டு சிறை
போக்சோ வழக்கு: 20 ஆண்டு சிறை தருமபுரி, பிப்.24- தருமபுரி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவியை, கடந்த 2022 ஆம் ஆண்டு நவ.16 ஆம் தேதி ஆள் நடமாட்டம் இல் லாத பகுதியில் சௌகத் (20) என்ற வாலிபர் தூக்கிச் சென்று பாலியல் வன்கொ டுமை செய்துள்ளார். இது தொடர்பாக இண்டூர் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகாரளித்தனர். பின்னர் இவ்வழக்கு பென்னா கரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற் றப்பட்டு, கடத்தல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சௌகத்தை கைது செய்த னர். இந்த வழக்கு விசாரணை மாவட்ட போக்சோ நீதிமன் றத்தில் நடைபெற்று வந்த நிலையில், விசாரணை முடி வில் சௌகத் குற்றம் செய் தது உறுதியானது. இதைய டுத்து அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
கரியக்கோவில் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு
விவசாயிகள் மகிழ்ச்சி
விவசாயிகள் மகிழ்ச்சி சேலம், பிப்.24- கல்வராயன் மலையடிவாரத்தி லுள்ள பாப்பநாயக்கன்பட்டி கரியக் கோவில் அணையிலிருந்து சனியன்று பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப் பட்டதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர். சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன் பாளையம் வட்டம், கல்வராயன்மலை அடிவாரம் பாப்பநாயக்கன்பட்டி கிராமத் தில், கரியக்கோவில் ஆற்றின் குறுக்கே, 52.49 அடி உயரத்தில்,190 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கும் வகையில், 188.76 ஏக்கர் பரப்பளவில் கரியக் கோயில் அணை அமைந்துள்ளது. இந்த அணையால், பாப்பநாயக்கன்பட்டி, ஏழுப்புளி, பீமன்பாளையம், தும்பல், அய்யம்பேட்டை, இடையப்பட்டி, கத் திரிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில், 3 ஆயிரத்து 600 ஏக்கர் விளைநிலங்கள் ஆயக்கட்டு வாய்க்கால் பாசன வசதி பெறுகின்றன. ஏ.குமாரபாளையம், கல் யாணகிரி, கல்லேரிப்பட்டி பகுதியில் ஏறக்குறைய 2 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் நேரடி ஆறு மற்றும் ஏரிப்பாச னம் பெறுகின்றன. சுற்றுப்புற கிராமங்க ளுக்கு முக்கிய நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கி வரும் இந்த அணை, கடந் தாண்டு போதிய மழை இல்லாததால் நிரம்பவில்லை. தற்போது அணையில் 34.90 அடி உயரத்தில் 83.85 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே தேங்கி உள்ளது. இந்நிலையில், 3 மாதங்களாக மழை யின்றி வறட்சி நிலவுவதால், அணையி லிருந்து பழைய மற்றும் புதிய ஆயக் கட்டு பாசனத்திற்கு (சிறப்பு நிகழ் வாக) தண்ணீர் திறக்க வேண்டுமென, ஆயக்கட்டு பாசன விவசாயிகள் தமி ழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு, தலைமை மதகு வழியாக, சனியன்று காலை 8 மணி முதல் வரும் மார்ச் 6 ஆம் தேதி காலை வரை தொடர்ந்து 11 நாட்களுக்கு, விநாடிக்கு 40 கனஅடி வீதம், (நாளொன்றுக்கு 3.45 மி.கனஅடி வீதம் மொத்தம் 37.95 மி.கன அடி) தண்ணீர் திறக்கவும், புதிய ஆயக்கட்டு வாய்க்கால் பாசனத்திற்கு வலது மற் றும் இடது வாய்க்கால்களில் தலா 15 கன அடி வீதம், விநாடிக்கு 30 கனஅடி, வரும் மார்ச் 6 ஆம் தேதி காலை 8 மணி முதல் தொடர்ந்து 10 நாட்களுக்கு, (நாளொன் றுக்கு 2.59 மில்லியன் கன அடி வீதம் மொத்தம் 25.90 மில்லியன் கன அடி) தண் ணீர் திறக்க சேலம் மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி பரிந்துரை செய்தார். இதனையடுத்து கரியக்கோயில் அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு கூடுதல் தலைமைச் செய லர் சந்தீப் சக்சேனா வெள்ளியன்று அர சாணை வெளியிட்டார். இதனைத்தொ டர்ந்து சனியன்று காலை பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு விழாவில், பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் ஆனந் தன், உதவி செயற்பொறியாளர் கவிதா ராணி, உதவி பொறியாளர் கோகுல் ராஜா, பெத்தநாயக்கன்பாளையம் வட் டாட்சியர் மாணிக்கம் மற்றும் விவசாயி கள் பலரும் கலந்து கொண்டனர். வாய்க் கால் மற்றும் ஆற்றுப் பாசனத்திற்கு தண் ணீர் திறக்கப்பட்டதால், கரியக்கோ வில் அணை பகுதி மற்றும் ஆற்றுப் படுகை கிராமங்களில், நீண்ட கால பலன் தரும் பாக்கு மற்றும் தென்னை மரங்கள் பயிரிட்டுள்ள பாசன விவசாயி கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வனத்துறை சார்பில் ஏரியை தூய்மைப்படுத்தும் பணி
நாமக்கல், பிப்.24- நாமக்கல் கோட்ட வனத்துறை சார்பில், கொண்டுசெட்டிபட்டி பகுதியி லுள்ள ஏரியை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. நாமக்கல் - மோகனூர் சாலையில், நகராட்சிக்குட்பட்ட கொண்டுசெட்டி பட்டியில் மிகப்பெரிய ஏரியும், அதன ருகில் குழந்தைகள் விளையாட்டு பூங் காவும் அமைந்துள்ளது. இந்த ஏரி அப் பகுதி பொதுமக்களுக்கான குடிநீர் ஆதாரமாகவும், குழந்தைகள் பொழுது போக்கு பூங்காவாகவும் திகழ்ந்து வரு கிறது. இந்த ஏரியை சுற்றிலும் நெகிழி பொருட்கள் மற்றும் குப்பை கழிவுகள் அதிகரித்ததால், ஏரி நீர் மாசுபட்டு துர் நாற்றம் வீசும் நிலை ஏற்பட்டது. இத னால் மனவேதனை அடைந்த சமூக ஆர்வலர்கள் இந்த ஏரியை தூய்மைப்ப டுத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக் கைகளை விடுத்து வந்தனர். இந்நிலையில், நாமக்கல் கோட்ட வனத்துறை சார்பில் இந்த ஏரியை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. வனச்சரக அலுவலர் பெருமாள் இந்நி கழ்விற்கு தலைமை வகித்தார். ரெட் கிராஸ் செயலாளர் ராஜேஷ் கண்ணன் முன்னிலை வகித்தார். வனத்துறை பணி யாளர்கள், நகராட்சி பணியாளர்கள் மற் றும் மோகனூர் காந்தமடை தூய்மை இயக்கத்தினர் என பல்வேறு சமூக ஆர்வலர்கள் இதில் கலந்து கொண்டு, ஏரியை சுற்றியுள்ள குப்பைக் கழிவு களை அகற்றி தூய்மைப்படுத்தினர்.
செல்பேசியை பயனுள்ள தொழில் நுட்பமாக மாற்ற வேண்டும்
தருமபுரி, பிப்.24- மாணவர்கள் செல்பேசியை பய னுள்ள தொழில் நுட்பமாக மாற்ற வேண் டும் என பாப்பிரெட்டிப்பட்டியில் நடை பெற்ற நிகழ்ச்சியில் அறிவுறுத்தப்பட் டது. தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப் பட்டி அரசு கலை அறிவியல் கல்லூரி யில் தகடூர் புத்தக பேரவை சார்பில் போட்டித்தேர்வு விழிப்புணர்வு முகாம் சனியன்று நடைபெற்றது. இந்த விழிப்பு ணர்வு முகாமில், “போட்டிகள் நிறைந்த உலகில் போட்டு தேர்வுகள்” என்ற தலைப் பில் இந்திய தோல் பொருட்கள் ஏற்று மதி கழகத்தின் செயல் இயக்குநர் ராம. செல்வம் சிறப்புரையாற்றினார். அப் போது அவர் பேசுகையில், மாணவர்கள் நேர மேலாண்மையை கடைப்பிடிப்பது மிக அவசியமாகிறது. இன்றைய காலக் கட்டத்தில் செல்பேசி தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. செல்பேசி தொழில் நுட்பத்தை மாணவர்கள் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள தங்களுக்கு பயனுள்ளதாக மாற்றிக் கொள்ள வேண் டும். இலக்கினை அடைய மாண வர்கள் தாழ்வு மனப்பான்மையை அகற் றிவிட்டு, தொடர் முயற்சியை மேற் கொண்டு வெற்றி பெற வேண்டும். மாணவப்பருவம் ஆற்றல் மிக்க பரு வம். எனவே, நேரத்தை வீணடிக்காமல் கல்வியில் முழு கவனத்தை செலுத்த வேண்டும், என்றார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செ.பால்பிரின்ஸ்லி ராஜ் குமார், ஊராட்சிகளின் உதவி இயக்கு நர் இரா.அருண், தமிழ்நாடு சிறுபான் மையினர் துறை மாநில கருத்தாளர் ஆல்பர்ட் பெர்னாண்டோ, பேராசிரியர் மனோகரன், கல்லூரி முதல்வர் அன்ப ரசி, தகடூர் புத்தகப் பேரவை தலைவர் செந்தில், செயலாளர் இரா.சிசுபாலன், தங்கமணி உள்ளிட்டோர் பங்கேற்று போட்டி தேர்வுகளில் மாணவர்களை தயார்படுத்துவது குறித்து எடுத்துரைத் தனர். இம்முகாமில் ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
ரூ.753.51 கோடி சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு கடன்
திருப்பூர், பிப்.24- திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கக்கூட்டரங்கில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கடன் வசதி யாக்கல் முகாமில் ரூ.753.51 கோடி மதிப் பீட்டில் 2,636 தொழில் முனைவோர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் த.ப.ஜெய்பீம் கடன் ஒப்புதல் ஆணைகளை வழங்கினார். இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலர் த.ப.ஜெய்பீம் அவர்கள் தெரிவித்ததாவது, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவ னங்களுக்கு உரிய காலத்தில் கடன் வசதி கிடைக்கப் பெறும் பொருட்டு கடன் வசதியாக் கல் முகாம் ஒவ்வொரு நிதி காலாண்டில் நடத் துவதற்கு தமிழ்நாடு அரசு உத்தரவுகள் வழங் கியுள்ளது. இதனடிப்படையில் அலுவலகக் கூட்டரங்கில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கடன் வசதி யாக்கல் முகாமில் ரூ.753.51 கோடி மதிப் பீட்டில் 2,636 தொழில் முனைவோர்களுக்கு கடன் ஒப்புதல் ஆணைகள் வழங்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில பல்வேறு அரசுத் துறைகள் மூலம் மாவட்ட தொழில் மையம், தாட்கோ, மகளிர் திட்டம், மாற்றுத்திறனாளி கள் நலத்துறை ஆகிய துறைகள் மூலம் பரிந் துரைக்கப்பட்ட விண்ணப்பங்களை விரைவில் பரிசீலனை செய்து கடன் உதவி வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுரைகள் வழங்கி னார். அதன் அடிப்படையில் பொதுமேலா ளர், மாவட்ட தொழில் மையம், மாவட்ட முன்னோடி வங்கிமேலாளர் (கனராவங்கி) இணைந்து அனைத்து வங்கி மண்டல மேலா ளர்களை சந்தித்து கடன் விண்ணப்பங்களின் மேல்பரிசீலனை செய்து உரிய அனுமதி களை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட் டது.இந்த முகாமில் வங்கிகள் மூலம் தொழில் முனைவோர்களுக்கு கடன் ஒப்புதல் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரி வித்தார். இந்நிகழ்ச்சியில், திட்ட மேலாளர் (மாவட்ட தொழில் மையம்) கோ.கிரீசன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சி.ரவி, பொதுமேலாளர் (தாட்கோ) ரஞ்சித்குமார், மாற்றுத்திறனாளி நல அலுவலர் வசந்த் ராம் குமார், உதவி பொறியாளர் (மாவட்ட தொழில் மையம்) மு.தினேஷ்குமார், வாழ்ந்து காட்டுவோம் திட்ட அலுவலர் பார்த்திபன், மேலாளர் (தமிழ்நாடு தொழில் முதலீட்ட கழகம்) லட்சுமி நாராயணன் மற் றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
குண்டர் சட்டத்தில் இருவர் கைது
குண்டர் சட்டத்தில் இருவர் கைது அவிநாசி, பிப்.24- தெக்கலூரில் கடந்த டிசம் பர் மாதம் 16 ஆம் தேதி இரவு குமார் என்பவர் தனது குடும் பத்தாருடன் உறங்கிக் கொண்டிருந்த போது, வீட் டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி ரொக் கப்பணம் ரூ.10,500, இரு சக்கர வாகனம்,2 கைப்பேசி கள் ஆகியவற்றை பறித்து தப்பிச் சென்றனர். இதைத் தொடர்ந்து அவிநாசி போலீ ஸார் வழக்குப்பதிவு செய்து, பொள்ளாச்சி ஜே.ஜே நகரை சேர்ந்த ரமேஷ்(31), மதுக் கரை அண்ணாநகரை சேர்ந்த கிசோர் குமார் (21) ஆகியோரை கைது செய்த னர். மேலும் அவர்களிடம் வாகனம் உள்ளிட்டவை களை பறிமுதல் செய்தனர். இந்நிலையில் ஆட்சியர் உத்தரவின் பேரில், வியாழக் கிழமை ரமேஷ், கிசோர்கு மார் ஆகியோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய் யப்பட்டனர்.
இந்திய மக்கள் ஒற்றுமை இயக்கம் பரப்புரை பயணம் கோவையில் துவக்கம்
இந்திய மக்கள் ஒற்றுமை இயக்கம் பரப்புரை பயணம் கோவையில் துவக்கம் கோவை, பிப். 24- வெறுப்பு அரசியல் நீங்கி மக்கள் ஒற்றுமையை வலியு றுத்தும் நோக்கிலும், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்த லில் பாசிச மதவாத சக்தியை வீழ்த்தி, மக்களை ஒன்றி ணைக்கும் வகையிலும், இந்திய மக்கள் ஒற்றுமை இயக்கம் சார்பில் தெருமுனை பிரச்சார பயணம் வெள்ளியன்று கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத் தில் துவங்கியது. தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் கு. ராமகிருஷ்ணன் பிரச்சார பய ணத்தை துவக்கி வைத்தார். தமிழகம் முழுவதும் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தெருமுனை பிரச்சார வாக னம் 30 நாட்கள் பயணித்து மார்ச் 23ஆம் தேதியன்று நிறைவ டைகிறது.
பெயர்ந்து விழுந்த மேல் கூரை உயிர் தப்பிய ஊழியர்கள்
பெயர்ந்து விழுந்த மேல் கூரை உயிர் தப்பிய ஊழியர்கள் கோவை,பிப் .24- கோவை மாவட்டம் அன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவ லக கட்டிடம் கடந்த 1962 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 62 ஆண்டு களாக உள்ள இந்த கட்டிடத்தில் பல இடங்களில் விரிசல் கள் உள்ளன. இந்நிலையில் கட்டிடத்தின் மேல் தளத்தி லிருந்து சிமெண்ட் காரை திடீரென பெயர்ந்து விழுந்தது. அதிக சப்தத்துடன் விழுந்ததால் அங்கிருந்த ஊழியர்கள் அலறி அடித்து ஓடினர். இச்சம்பவம் குறித்து ஊராட்சி ஒன் றியக் குழு தலைவர் அம்பாள் பழனிச்சாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார், ஒன்றியப்பொறியாளர்கள் கட்டி டத்தை ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் கட்டிட இடிபா டுகள் அகற்றப்பட்டன. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற் கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஒன்றிய அலுவ லக பணியாளர்கள் கூறுகையில், கட்டிடத்தை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என பலமுறை அரசுக்கு திட்ட வரைவு அனுப்பி உள்ளோம். எனினும் இதுவரை எவ்வித நடவ டிக்கையும் எடுக்கப்படவில்லை. பெரும் விபரீதம் ஏற்படும் முன்னர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
பிரதமர் வருகை : மூன்றடுக்கு பாதுகாப்பு
பிரதமர் வருகை : மூன்றடுக்கு பாதுகாப்பு கோவை,பிப். 24- பிரதமர் நரேந்திர மோடி வரும் 27 மற்றும் 28 ஆம் தேதி யன்று தமிழ்நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதற்காக கேரள மாநிலம் திருவனந்த புரத்திலிருந்து தனி விமான மூலம் சூலூர் விமான படைத்த ளத்திற்கு வரும் 27 ஆம் தேதியன்று வருகின்றார், பின்பு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பல்லடத்தில் நடக்கும் நிகழ்ச்சிக்கு செல்லும் வகையில் பயண ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. மேலும் சூலூர் விமான படைத்தளத்திற்கு பிரதமர் வருகையை ஒட்டி சூலூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் போலீசார் தீவிர வாகன தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர். பிரதமரின் வருகையை ஒட்டி சூலூர் விமானப்படை தளத்தை சுற்றிலும் மூன்றடுக்கு பாது காப்பு போடப்பட்டுள்ளது. மேலும், விமான தளத்தை சுற்றி 500 மீட்டர் அளவில் உள்ள குடியிருப்புகளில் வசித்து வருப வர்கள் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்து வருகின் றனர். அதேபோல மத்திய தொழில் பாதுகாப்பு படையி னரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை கோவை,பிப். 24- கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் ஜவகர் நகர் பகு தியை சேர்ந்தவர் கனேசன்(65). இவர் தனியார் நிறுவனத் தில் பணியாற்றி ஓய்வு பெற்று மனைவி விமலா(56)வுடன் வசித்து வருகிறார். இவரது மகள் தியாகாயத்திரி(25) கடந்த வருடம் தீக்ஷித் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள் ளது. தியாகாயத்திரி பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனத் தில் பணியாற்றி வந்துள்ளார். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தியாகாயத்திரி பெற் றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் கணேசன் தனது உறவினரான பால காட்டை சேர்ந்த அனில்குமார் என்பவருடன் தொலை பேசி முலம் பேசி உள்ளார். இதன் பின்னர் அனில் குமார் கணேசனை தொடர்பு கொள்ள முயற்சி செய்தும் அவரை தொடர் கொள்ள முடியாத காரணத்தால் வெள்ளி யன்று இரவு கோவை வந்துள்ளார். வீட்டின் கதவு உள்பக்க மாக பூட்டப்பட்டு இருப்பதை கண்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மூவரும் படுக்கை அறை யில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்பு அனில்குமார் காவல் துறைக்கு புகார் அளித்தார். இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த கவுண்டம்பாளையம் போலீசார் உடல் களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.