districts

img

ஊருக்குள் உலாவிய கரடி: வனத்துறை எச்சரிக்கை

கோபி, ஜன.7- வெள்ளாளபாளையம் அருகே ஊருக் குள் புகுந்த கரடி சாலையில் உலாவிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இதனால், கிராம மக்கள் அச்சமடைந்துள் ளனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலி கள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை,  யானை, கரடி, மான், காட்டெருமை உள்ளிட்ட  பல்வேறு வகையான வனவிலங்குகள் வசிக்கின்றன.  இந்த வனவிலங்குகள் உணவுக்காக வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமங் களுக்குள் நடமாடுவது வழக்கம். இந்நிலை யில், சனிக்கிழமை நள்ளிரவு சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் விளாமுண்டி வனப்பகு தியில் இருந்து வெளியேறிய கரடி ஒன்று,  வெள்ளாளபாளையம் பிரிவு பகுதியில் உள்ள சாலையில் நடமாடியது. இக்காட் சிகள், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள நிலையில், தற்போது சமூக வலைதளங்க ளில் வைரலாக பரவி வருகிறது. அப்பகுதி யில் கரடி நடமாட்டம் உள்ளதால், பொதுமக் கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வனத்து றையினர் அறிவுறுத்தியுள்ளனர்.