districts

img

குடிநீர் தொட்டி கட்டுமானத்தை நிறுத்திய வனத்துறை: சாலை மறியல்

உதகை, ஜூலை 24- குடிநீர் தொட்டி கட்டுமானத்தை பாதியில் தடுத்து நிறுத்திய வனத் துறையினரை கண்டித்து மசினகுடி யில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  உதகை அருகே மசினகுடி ஊராட் சிக்கு உட்பட்ட வாழைத்தோட்டம், மாவனல்லா, செம்மநத்தம் உள் ளிட்ட பகுதிகளில் பழங்குடியின கிரா மங்கள் உள்ளது. இங்கு இருந்த பழுமையான குடி நீர் தொட்டிகளை இடித்து புதிய தொட்டிகளை கட்ட வும், நடைபாதை உள்ளிட்ட அடிப் படை வசதிகளை செய்யவும் இம்மக் கள் கோரிக்கை விடுத்து வந்தனர்

இந் நிலையில் வாழைத்தோட்டம் பகுதி யில் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப் பட்ட பழமையான குடிநீர் தொட் டியை இடித்துவிட்டு புதிதாக குடிநீர் தொட்டி கட்டவும் நடைபாதை அமைக் கவும் சுமார் 20 லட்சம் ரூபாயை மாவட்ட நிர்வாகம் ஒதுக்கியுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வாழைத்தோட்டம் கிராமத்திற்கு சென்ற நேரில் ஆய்வு செய்த ஆட்சி யர் அம்ரித் குடிநீர் தொட்டி கட்டவும், நடைபாதை அமைக்கும் பணியை யும் உடனடியாக மேற்கொள்ள உத் தரவிட்டார். இதனையடுத்து குடிநீர் தொட்டி கட்டுவதற்காக பணிகள் தொடங்கிய போது, அங்கு வந்த 50க்கும் மேற்பட்ட சிங்கார பகுதி வனத்துறையினர் பணிகளை தடுத்து நிறுத்தினர்.  இதனால் ஆவேசமடைந்த கிராம மக்கள் வனத்துறையினரை முற்று கையிட்டதுடன் மசினகுடி - உதகை  நெடுஞ்சாலையில் மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். மேலும், நூற்றுக் கும் மேற்பட்ட பெண்கள் உதகை யில் உள்ள மாவட்ட ஆட்சித் தலை வரை நேரில் சந்திக்க உதகைக்கு வந் தனர். பின்னர் கொட்டும் மழையை யும் பொருட்படுத்தாமல் காத்தி ருந்து, ஆட்சியர் அம்ரித்தை நேரில் சந் தித்து வனத்துறையினரின் அத்து மீறல் குறித்து தெரிவித்தனர். அவற்றை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் பணி களை தொடர உடனடியாக நடவ டிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.  இதனையடுத்து, மறியல் போராட் டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். பல தலைமுறையாக வாழ்ந்து வரும் பழங்குடியினர் மக்களுக்கு தமிழக அரசு சார்பாக அடிப்படை வச திகள் தொடர்ந்து செய்து கொடுத்து  வரும் நிலையில், சமீப காலமாக வனத்துறையினர் அவற்றை செய்ய  விடாமல் தடுத்து வருவது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்ப டுத்தி உள்ளது.