மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் சேலம், அக்.30- மலைவாழ் மக்கள் அனுபவித்து வரும் நிலத்தை அபகரிக்கும் நோக்கத்தோடு செயல் படும் தம்மம்பட்டி வனத்துறை ரேஞ்சரை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். ஆத்தூர் தாலுகா, தம்மம்பட்டி வன சர கத்திற்கு உட்பட்ட கீழ் தொம்பை, மேல் தொம்பை ஆகிய மலை கிராமத்தில் மலை வாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இம்மக் கள் நூறாண்டுகளுக்கு மேலாக அனுபவித்து வரும் நிலத்தை பயன்படுத்தகூடாது. இந் நிலத்தில் ஆடு, மாடுகளை மேய்க்க கூடாது என வனத்துறையினர் அடாவடியில் ஈடுபட்டு வருகின்றனர். தம்மம்பட்டி வனத்துறை ரேஞ் சரின் நடவடிக்கையை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் திங்களன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆத்தூர் தாலுகா, தம்மம்பட்டி பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் கிளை செயலா ளர் ஏ.முருகேசன் தலைமை ஏற்றார். இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் கெங்கவள்ளி தாலுகா செயலாளர் பி.தமிழ்மணி, ஆத்தூர் தாலுகா செயலாளர் ஏ.முருகேசன், மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் பி.ராமமூர்த்தி, எம்.குண சேகரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். முன்னதாக, வனச்சரக அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தை நடத்த காவல்துறை அனு மதி மறுத்தனர். இதனையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் பங் கேற்க ஏராளமானோர் கூடி தம்மம்பட்டி பேருந்து நிலையத்திலிருந்து வனசரக அலு வலகம் வரை ஊர்வலமாக சென்றனர். பின் னர் வனச்சாரக அலுவலரிடம் மனு அளித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், பங் கேற்ற வனத்துறை அதிகாரிகள், இனி வரக் கூடிய காலத்தில் மலைவாழ் மக்கள் அனுப வித்து வரும் நிலத்தில் எந்த வித இடையூறும் செய்ய மாட்டோம். ஆடு மாடு மேய்க்க இடை யூறு செய்ய மாட்டோம் என உறுதியளித்த னர். வனத்துறையினரின் இந்த உறுதிமொழி யில் பழங்குடியின மக்களுக்கு நம்பிக்கை அளித்தது. போராட்டத்தின் மூலம் தங்களது உரிமைகளை மீட்டுக்கொடுத்த மார்க்சிஸ்ட் கட்சிக்கு மலைவாழ் மக்கள் நன்றி தெரிவித்த னர். இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் ஆத்தூர் தாலுகாக்குழு உறுப்பினர்கள் எல்.தங்கம் மாள், எல்.வரதராஜு, கெங்கவல்லி தாலுகாக் குழு உறுப்பினர்கள் பி.மணி, வி.வெங்கடா சலம் மற்றும் கிளை செயலாளர்கள் எல். ராம சாமி, ஜி.கணேசன், எல்.ராமச்சந்திரன், வி. காட்டு ராஜா உள்ளிட்ட 200க்கும் மேற்பட் டோர் பங்கேற்றனர்.