districts

img

ஆடு மேய்க்க லஞ்சம் கேட்ட வனத்துறை

பென்னாகரம், ஜூன் 30- மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு ஒன்றிற்கு  ரூ.300 விதம் வனத்துறை ஊழியர்கள் லஞ்சம்  கேட்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள் ளனர்.  தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ளது கோடுபட்டி. இந்த கிராமத்தை சேர்ந்த விவசாயிகள். இவர்கள் விவசாய தொழிலோடு இணைந்து ஆடு வளர்த்து வாழ் வாதாரத்தை பூர்த்தி செய்து வருகின்றனர். இந்நிலையில், பென்னாகரம் வனத்துறை யினர் அலுவலர்கள் சில வருடங்களாக வனப் பகுதியில் ஆடு மேய்க்க லஞ்சம் கேட்பதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  இதில், ஆடி  மாதத்தில் ஆடு ஒன்றுக்கு 300 ரூபாயும், வருட பிறப்பான ஜனவரி மாதத்தில் ஆயிரம் ரூபாய் என கணக்கிட்டு வனத்துறை ஊழி யர்கள் பணம் கேட்டுள்ளனர். பணம் தர மறுத் தால், அபராதம் விதிப்பதாகவும் வேதனை யோடு தெரிவிக்கின்றனர்.  இதுகுறித்து கோடுபட்டியைச் சேர்ந்த மாணிக்கம் கூறுகையில், தலைமுறை தலை முறையாக விவசாயம் செய்து வருகிறோம். மேலும் ஆடு, மாடுகளை வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு அழைத்து சென்று வருகின் றோம். மேலும், சுண்டைக்காய் சேகரித்தல் போன்ற வேலைகளை செய்து வருகின்ற னர்.  இந்நிலையில், வனப்பகுதியில் ஆடு களை மேய்க்க கூடாது, சுண்டக்காயை பறிக் கக்கூடாது என வனத்துறையினர் மிரட்டி  வருகின்றனர். இதனை மீறி ஆடு மேய்த் தாலும் அபராதம் விதிக்கின்றனர். வனப் பகுதி விறகு பெருக்கலாம், ஆடு மாடு  மேய்க்கலாம் என்று கூறி அரசு கூறி வரு கிறது. வனத்திலிருந்து வெளியேறும் வன விலங்குகள் விவசாய நிலங்களை சேதப் படுகின்றன. இதனை வனத்துறையினர்  கண்டு கொள்வது இல்லை. ஆனால், வனத் திற்குள் சென்றால் உடனடியாக அபராதம்  விதிக்கிறார்கள் என்றார் வேதனையோடு.