districts

img

யாருக்கு வாக்களிப்பது:

2016ஆம் ஆண்டு அக்டோபரில் வந்திருக்க வேண்டிய உள்ளாட்சி தேர்தல் ஏறத்தாழ ஐந்தரை ஆண்டு கள் கழித்து இப்போது நடைபெறு கிறது. முதல் கேள்வி, ஏன் இத் தனை ஆண்டு தாமதம்? 2016 செப் டம்பரில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா நோய்வாய்பட்டு அப் பல்லோ மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தப்படவில்லை. அதே ஆண்டு  டிசம்பரில் அவர் மரணத்திற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தின் பின்னணியில் அவர்கள் தேர்தலை நடத்த  விரும்பவில்லை. மத்திய ஆட்சியில் இருந்த பாரதிய ஜனதா கட்சியின் ஆசியோடும், ஆதரவோடும் அதிமுக ஆட்சியா ளர்கள் அனைத்து வித சாகசங்களை யும் செய்து உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் தவிர்த்தனர். பல தரப் பினரின் நீதிமன்ற சட்டப் போராட்டத் துக்குப் பின் கடைசியாக 2019 ஆம் ஆண்டு  டிசம்பரில் கிராமப்புற உள் ளாட்சி தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயம் அதிமுக ஆட்சியாளர் களுக்கு ஏற்பட்டது. ஆனால் அதில் அவர்கள் படுதோல்வி அடைந்தனர். எனவே நகர்ப்புற உள்ளாட்சி தேர் தலை நடத்தாமல் தவிர்த்தனர். தோல்வி பயத்தால் மட்டும் அவர் கள் தேர்தலை நடத்தாமல் தவிர்க்க வில்லை. உள்ளாட்சிகளில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலையில் நேரடியாக மாநில அரசின் கட்டுப் பாட்டில் உள்ளாட்சி அதிகாரங் களைக் குவித்து வைத்துக் கொண்டு  ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் செய்தனர். குறிப்பாக அந் தந்த நகர, கிராம உள்ளாட்சிகள் அள வில் தீர்மானிக்க வேண்டிய சாலை, சாக்கடை, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படையான வளர்ச்சிப் பணி களுக்கு மாநில அளவில் மொத்த மாக டெண்டர் விட்டு மொத்தமாக கமி ஷன் பெற்று ஊழலின் புதிய உச்சத் தைத் தொட்டனர். அரசியல் சட்டப் படி செயல்பட வேண்டிய உள்ளாட்சி ஜனநாயகத்தின் கழுத்தை நெரித் துப் படுகொலை செய்தனர். ஊரகப் பகுதிகளில் சாலைப் பணிகளுக்கு  மாநில அளவிலான டெண்டர் விடப்பட் டதை  உயர்நீதிமன்றம் நேரடியாக ரத்து செய்தது.

அதைவிட ஈவு இரக்கமில்லாத கொள்ளையாக, கொடுமையாக, கொரோனா பெருந்தொற்று காலத் தில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் அணியக் கூடிய முழு உடல் கவச ஆடை, முகக் கவசம், கையுறை வாங்குவதில் கூட மூன்று மடங்கு, நான்கு மடங்கு விலை நிர்ணயித்து கொள்ளையடித் தது அதிமுக ஊழல் கூட்டம். கொரோனா நோயாளிகளின் சிகிச் சைக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்ட பணத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு செலவிடாமல், அதையும் அவர்களே அபகரித்தனர். மனித உயிரை விட  ஊழல் முக்கியம் என செயல்பட்டது அதிமுக அரசு. ஊழலுக்கு எதிராக புனிதப் போர் நடத்துவதாக காட்டிக் கொள்ளும் ஒன்றிய மோடி அரசு இதையெல் லாம் கண்டு கொள்ளாதது மட்டு மல்ல, வேளாண்மை சட்டம், நீட் தேர்வு, சேலம் எட்டு வழிச் சாலை, விவசாய விளைநிலங்களில் உயர் மின் கோபுரம் என அனைத்து பிரச் சனைகளிலும் தங்கள் அடிமைக ளாக நடந்து கொண்டதற்கு சன்மான மாக, அதிமுகவின் ஊழலுக்கு பச்சை கொடி காட்டினர் என்றுதான் சொல்ல வேண்டும். அதிமுகவும், பாஜகவும் தமிழகத்தில் கடந்த ஆட் சிக் காலத்தில் செய்த ஜனநாயக விரோத, மக்கள் விரோத நடவடிக் கைகள் ஏராளம். இதற்கு தண்டனை யாகத்தான் அதிமுக, பாஜக மோச டிக் கூட்டத்துக்கு தமிழக மக்கள் சட்ட மன்றத் தேர்தலில் படுதோல்வி அளித்து விரட்டியடித்தனர்.

 திமுக அரசு பொறுப்பேற்ற நிலை யில் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலில் அதிமுக வாக்கு கேட்டு எந்த முகத்தோடு வெட்கமில்லாமல் மக்களை சந்திக்கிறது என்று தெரியவில்லை. தங்கள் ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சி நிர்வாகத்தில் இதையெல்லாம் செய்தோம் என்று சொல்வதற்கு சாதனைகள் ஏது மில்லை. வேண்டுமென்றால், தேர் தலை ஐந்தாண்டுகள் நடத்தாமல் தள்ளிப் போட்டதை, உள்ளாட்சி அதி காரத்தை கபளீகரம் செய்து ஊழல் பேயாட்டம் ஆடியதை, சாதாரண தெரு விளக்கு உபகரணங்கள் முதல் ஒன்றிய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டம் வரை எல்லாவற்றிலும் கோடிக்கணக்கில் பணம் சுருட்டி யதை அவர்கள் சாதனையாகச் சொல்லலாம். இந்த ஊழல்கள் கார ணமாகத்தான் தமிழக அரசின் கஜானா ஒட்டச் சுரண்டப்பட்டுள்ளது. போதாக்குறைக்கு அவர்களின் அரசி யல் “டாடி” மோடி அரசு ஜிஎஸ்டி நிதித் தொகுப்பில் இருந்து  தமிழகத்துக் குத் தர வேண்டிய மாநில பங்குத் தொகையையும் தராமல் நிலுவை வைத்துள்ளது.

இந்த லட்சணத்தில்தான் திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறை வேற்றவில்லை என்று அதிமுக பிரச்சாரம் செய்கிறது. தமிழக பொரு ளாதாரத்தை சீர்குலைத்து சீரழித்து விட்டு, இப்போது அதையே தங்க ளுக்கு கிடைத்த வாய்ப்பாக நினைத் துக் கொண்டு அரசியல் செய்கின்ற னர். கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் அதிகாரத்தை வைத்து ஊழல் செய்த கூட்டம், தான்  கொள் ளையடித்த பணத்தில் சில்லரை காசு களை வீசி எறிந்தால் மக்கள் ஏமாந்து வாக்களிப்பார்கள் என்று  இந்த ஓரிரு நாட்களில் பணப் பட்டுவாடாவை தொடங்கிவிட்டது. தங்கள் சொந்த அரசியலை பாஜக கூட்டத்திடம் காவு கொடுத்துவிட்டு திவாலாகிப் போய் நிற்கிறது அதிமுக. அந்த கட்சி நம்புவது எந்த ஒரு மக்கள் நலக் கொள்கைகளையும் அல்ல, பணத்தை மட்டும்தான். பணம்தான் வெற்றியைத் தேடித்தரும் என நினைத்து தேர்தலை சந்திக்கிறது. மறுபுறம் மதவெறி, மக்கள் விரோத ஒன்றிய பாஜக அரசின் நாச கர கொள்கைகளுக்கு எதிராகவும், பாஜகவுடன் சமரசம் செய்து கொண்ட அதிமுக ஆட்சியாளர் களின் நடவடிக்கைகளுக்கு எதி ராகவும் போராட்டங்களின் ஊடாக இடதுசாரிகள் ஒத்துழைப்புடன் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி உரு வானது. 2019 நாடாளுமன்றத் தேர்த லில் 38 இடங்களில் வெற்றி, அதைத் தொடர்ந்து நடைபெற்ற தமிழக கிராமப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி, 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி என மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தொடர் வெற் றிகளைப் பெற்றுள்ளது.

மக்கள் நலனைக் காக்கவும், மாநில உரிமையைக் காக்கவும், ஜன நாயகத்தை பாதுகாக்கவும் நடை பெற்ற போராட்டத்தின் ஊடாகவே இந்த அணியின் ஒற்றுமை உருப் பெற்று, அதன் தொடர்ச்சியாக மக்க ளின் நம்பிக்கையுடன் வெற்றி பெற முடிந்தது.  எனவே தற்போது நடைபெறு வது நேரடியாக பண பலத்திற்கும், மக்கள் சேவை அரசியலுக்கும் இடை யிலான போட்டியாகும். கொள்கை, கோட்பாடு என எதையும் நம்பாத, பணத்தை மட்டுமே நம்பக் கூடிய அதிமுகவுக்கும், மக்கள் சேவை, மக்கள் நலன் காக்கும் போராட்டம் என இரண்டையும் உயிர் மூச்சாக கருதும் கம்யூனிஸ்டுகள் உள்ளடங் கிய மதசார்பற்ற முற்போக்கு கூட்ட ணிக்கும் நடைபெறும் தேர்தல் ஆகும். இரண்டில் ஒன்றைத் தீர்மா னிக்க வேண்டிய தருணம் இது. எப்போதும் மக்கள் பக்கம் நிற் கும், மக்களை நம்பும் மக்களின் தோழர்கள் பிப்ரவரி 19ஆம் தேதி  வாக்குப் பதிவு அதிமுக, பாஜக கூட் டத்தை வீழ்த்தும், முற்போக்கு மக் கள் நல அரசியலை முன்னெடுத்துச் செல்ல வழி வகுக்கும் என்று திட மாக நம்புகின்றனர்.

-வே.தூயவன்