districts

img

தொழிலாளர்கள் நலனை பாதுகாப்பதற்கே கவனம்: அமைச்சர் முத்துசாமி

கோவை, ஜூலை 17- டாஸ்மாக் நிறுவனத்தில் பணி யாற்றும் தொழிலாளர்களின் நலனை பாதுகாப்பதற்கும், அவர்களின் கோரிக்கைளை கேட்டு அதனை, நிறைவேற்றுவதற்கான நடவடிக் கையில் தீவிர கவனம் செலுத்தி வரு கிறோம் என அமைச்சர் முத்துச்சாமி கோவையில் திங்களன்று செய்தி யாளர்களிடம் தெரிவித்தார். கோவையில் ரூ.17.45 கோடி  மதிப்பில் பல்வேறு தொகுதிகளில்,  பல்வேறு திட்டங்களை வீட்டு வசதி வாரியம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை மற்றும் மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துச்சாமி துவக்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக ஒண்டிபுதூர் பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். இதனைத்தொடர்ந்து அமைச் சர் முத்துச்சாமி செய்தியாளர்க ளுக்கு பேட்டியளிக்கையில், தமி ழக முதல்வரின் முன்னெடுப்பு கார ணமாக பல்வேறு திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தபட்டு வரு கின்றது. கோவையில் 260.57 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 3432 இடங்க ளில் சாலை பணிகள் செய்யப்பட இருக்கின்றது. கோவை மாவட்டத் தில் சைக்கிள் 15270 மாணவர்க ளுக்கு வழங்கப்பட இருக்கின்றது. 7  ஆயிரத்துக்கும் மேற்பட்ட மிதி வண்டிகள் கொடுக்கபட்டுள்ளது,  மீதமுள்ள மிதிவண்டிகள் குறித்த நேரத்திற்குள் வழங்கப்படும். முதலில் அமலாக்க துறை ஒரு  சோதனை நடத்தி இருக்கின்றது. அதனை தொடர்த்து இப்போது ஒரு  சோதனை அமைச்சர் பொன்முடி வீட்டில் நடத்தப்பட்டு இருக்கின் றது. இது திட்டமிட்டு செயல்படுத் தப்படுகின்றது. இந்த அமலாக்க துறை மூலம் சோதனை நடத்துவ தன் மூலமாக எங்களை பயமுறுத்த நினைக்கிறார்கள். அது ஒருபோ தும் நடக்காது. பெங்களுரில் நடை பெறும் கூட்டணி கட்சி கூட்டத்தில் முதல்வர் பங்கேற்றுள்ளார். டாஸ் மாக் தொடர்பான எனது பேட்டியை சிலர் தவறாக சித்தரித்துள்ளனர். டாஸ்மாக்கில் டெட்ரா பேக் மூலம் மதுவிற்பனை செய்யும் திட்டம், 90 மி.லி மதுபானம் கொண்டு வரு வது உள்ளிட்டவைகள் ஆய்வில் தான் இருக்கின்றது. அது வரலாம், வராமலும் போகலாம். டாஸ்மாக்கில்  தொழிலாளர் பிரச்சனை தவிர மற்றவை அனைத்தும் ஆய்வில் தான் இருக்கிறது, முழு உண் மையை சொல்லாமல் பாதி மட்டும் சொல்லி உண்மையை திசை திருப் பியுள்ளனர். நாங்கள் வெளிப்படை யாக செயல்படுகிறோம். நாங்கள் டாஸ்மாக் தொடர்பாக தொடர்ந்து ஆய்வு நடத்தி அதில் வருகிற கருத் துக்களை ஊடகங்களின் மூலம் சொல்வதால், வேறு மாற்று திட்டம் வருமா என்பதற்காக சொல்கி றோம். ஆனால், அதனை திசை திருப்புவது நியாயமல்ல.  டாஸ்மாக் நிர்வாகத்தை பொருத்த வரையில் தற்போது,  

தொழிலார்களின் பிரச்சனை குறித்து தொழிற்சங்கத்தினருடன் பேசி இருக் கின்றோம். கரன்ட் பில், சரக்கு இறக் குவது தொடர்பான பிரச்சனைகள் குறித்தும் தொழிற்சங்கத்தினருடன் பேசி இருக்கின்றோம். ஒரு வார  காலத்திற்குள்  தொழிற்சங்கத்தி னரை அழைத்து பேசி கொடுத் துள்ள மனுக்கள் குறித்து பேசி  தொழிற்சங்கத்தினருடன் ஒப்பந் தம் கூட போட திட்டமிட்டு இருக்கின் றோம். கூடுதலாக பணம் வாங்கு வது தொடர்பாக கண்டிப்பான உத் தரவை பிறப்பித்திருக்கிறோம். அத னையும் மீறி சில இடத்தில் வாங் கப்படுவதை கண்டறிந்து நடவ டிக்கை எடுத்து உள்ளோம். முதலில் டாஸ்மாக்கில்  நடைமுறையில் இருக் கும் பிரச்சினைகளை தீர்க்க நடவ டிக்கைகள் எடுத்து வருகின்றோம். தொழிலாளர் பிரச்சினைக்கு முத லில் தீர்வு காண இருக்கின்றோம்,  அதை சரி செய்து விட்டால் மற்ற பிரச்சனைகளை சரி செய்து விட லாம், என்றார். இந்நிகழ்வின்போது, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மாநகராட்சி ஆணை யர் மு.பிரதாப், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் உள்ளிட் டோர் உடனிருந்தனர்.